tag:blogger.com,1999:blog-217453192024-03-19T17:53:24.059+08:00கைமண் அளவுவாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும்Unknownnoreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-21745319.post-40956977740244725732010-02-08T16:08:00.000+08:002010-02-08T16:16:13.101+08:00அழிவின் நினைவுகள்பங்குனிக்கு ஒருமுறை, பவுர்ணமிக்கு ஒருமுறை பதிவெழுதிக் கொண்டிருந்த நான் கடந்த மே மாதம் இட்ட சிறு இடுகைக்குப் பின் இந்தப் பக்கமே வரவில்லை. இணையத்தில் தமிழ் தளங்களை வாசிப்பதையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன். அந்த மே மாத நிகழ்வுகள் ஏற்படுத்திய பாதிப்பும் கசப்பான உணர்வுகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து தன்னைத்தானே வதைத்துக்கொள்ள விரும்பாததும் அதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்கு ஒன்றில் புலிப்படை தோற்று, அவமானப்படுத்தப்பட்டு அதன் தலைவன் கடற்கரையில் மடியும் அந்தக் காட்சியைக் கண்டபோது மீண்டும் அதே உணர்வுகள் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.<br /><br />சென்றவாரம் முத்துக்குமாரின் நினைவு நாளை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகள் எதிர்பார்த்ததுபோலவே ஊடகங்களில் இருட்டடிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் உருவான எழுச்சி பரவாமல் தடுத்ததில் ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கியமான பங்கு உண்டு. ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் செயல்பாடுகளுக்கு வேறு எந்த வகையில் எதிர்ப்பைக் காட்டியும் பயனில்லை என்ற நிலையில் ஒரு இளைஞன் தன்னைத்தானே கொளுத்திக்கொள்கிறான் என்றால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்? வியட்நாமில் ஒரு <a href="http://en.wikipedia.org/wiki/Th%C3%ADch_Qu%E1%BA%A3ng_%C4%90%E1%BB%A9c">பௌத்த துறவி இதை செய்தபோது</a> அது உலகின் மனசாட்சியையே உலுக்கியது. ஆனால் நம் ஊடகங்கள் நடிகர் நடிகைகளின் மணமுறிவு பற்றிய செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட முத்துக்குமாரின் இறப்புக்கோ அதன் பிந்தைய நிகழ்வுகளுக்கோ அளிக்கவில்லை.<br /><br />ஈழப்போரின் போது பல நேரங்களில் தமிழக ஊடகங்கள் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை நீர்த்துப்போக செய்யவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தின் நோக்கத்திற்கு சுயமாகவோ கட்டாயத்தின் பேரிலோ துணைபோயிருப்பதை நாம் காணமுடியும். எடுத்துக்காட்டாக செஞ்சோலை போன்ற இடங்களில் அப்பாவி மக்களின் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு பெரும்பாலான தமிழக மக்கள் தமிழீழத்துக்கும் புலிகளுக்கும் ஆதரவான நிலைக்கு மாறினார்கள். (இதை பின்பு எடுக்கப்பபட்ட சில கருத்துக்கணிப்புகள் உறுதிசெய்தன.) இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு ஐந்து தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றதும், பன்னிரண்டு மீனவர்களை கடத்திசென்றதும் புலிகள் தான் என்று இந்திய/தமிழக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். இதைக்குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட சிறுபிள்ளைத்தனமான கதையில் எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் யாரும் அதைக் கேள்வி கேட்கவில்லை. திரும்பி வந்த மீனவர்களுக்கு செய்தியாளர்களிடம் பேசக்கூடாது என்று கடுமையான வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் அந்த மீனவர்கள் குழுவில் இருந்த சிறுவன் தங்களைக் கடத்தியது 'நேவி' தான் என்று தெளிவாகச் சொன்னதையும், மற்ற மீனவர்கள் சிறுவனைப் பேசவிடாமல் தடுத்ததையும் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது. இதுகுறித்து மூச்சுவிடும் துணிவுகூட மற்ற தமிழ் ஊடகங்களுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு அந்த மீனவர்களை சந்தித்து நடந்த உண்மைகளை அறிந்துக்கொள்ளும் முயற்சியில் யாரும் இறங்கியதாக தெரியவில்லை. இதுதான் நம் ஊடக சுதந்திரத்தின் அறிவிக்கப்படாத எல்லை. இறையாண்மை பூச்சாண்டி காட்டப்பட்டால் அதை மீறும் துணிவு மிகப்பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.<br /><br />இந்தியாவின் வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தலைமைப் பதவிகளையெல்லாம் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பது குறித்தோ ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையில் இவர்களது பங்கு குறித்து எழுப்பப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகள் குறித்தோ ஊடகங்களில் ஒரு சிறு விவாதம் கூட சாத்தியமில்லை. மலையாளி என்று பலருக்கும் தெரியாத ஜே.என்.தீக்சித்துக்கு பின் எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வருகிறார். நாராயணனுக்குப் பிறகு அந்த இடத்துக்கு இப்போது சிவசங்கர் மேனன் வந்திருக்கிறார். வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து சிவசங்கர் மேனன் விலகினால் அந்தப் பதவி நிருபமா மேனன் ராவ் என்ற மற்றொரு மலையாளிக்கே செல்கிறது. இவர்களில் நாராயணன் தவிர மற்ற மூவரும் இலங்கைக்கான இந்திய தூதராக இருந்தவர்கள் என்பதும் அப்படி இருந்தபோது வெளிப்படையான தமிழர்-எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாளிகளின் குழு உணர்வைக் குறித்து முன்பு நண்பர்கள் சிலர் பேசியபோது அத்தகைய பொதுமைப்படுத்தலுக்கு எதிராக நான் விவாதித்திருக்கிறேன். ஆனால் பல துறைகளிலும் இந்தப் போக்கையே காணமுடிகிறது. ஒரு அண்மைய எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் மாதவன் நாயருக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் வந்திருப்பதைச் சொல்லலாம். 'திறமைவாதிகள்' இதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் தான்.<br /><br />சென்ற ஆண்டு ஈழத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நேரத்தில் தமிழரல்லாத இந்தியர்கள் வெளிப்படுத்திய அசாதாரணமான அக்கறையின்மையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. எவ்வித அரசியல் உணர்வோ பொது அக்கறையோ இல்லாதவர்கள் என்று நான் நினைத்திருந்த பல தமிழர்கள் கூட ஈழத்து நிகழ்வுகளால் கடும் மனச்சோர்வுக்கு உள்ளானதை அறிவேன். குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செத்துக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்த சிலருக்கு இரவில் உறங்குவது சாத்தியமில்லாமல் ஆனது. தமிழ்நாட்டில் பத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். ஆனால் மற்ற இந்தியர்களிடம் இதுகுறித்து ஒரு சிறு சலனம் கூட எழவில்லை. இத்தகைய பேரழிவு நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போது இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று விளையாடுவது குறித்த நெருடல் கூட எவருக்கும் இருக்கவில்லை. அருந்ததி ராய் கூட மிகவும் காலங்கடந்து ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்பு வந்தவேகத்தில் பின்வாங்கினார். சென்னையிலுள்ள அவரது நண்பர்கள் சிலர் அவரைத் தடுத்தாட்கொண்டிருக்கக்கூடும். குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது, முஸ்லீம்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க மற்றவர்கள் யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மற்ற இந்தியர்கள் அதைத்தானே செய்தார்கள்?<br /><br />பெரும்பாலான தமிழரல்லாத இந்தியர்களைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள ஒரே பிரச்சனை தமிழ் பயங்கரவாதம் மட்டுமே. அங்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்குத் தொடர்ந்து சொல்லப்படுவது அதுதான். அது தவிர தமிழர்கள் மொழிவெறி பிடித்தவர்கள் என்ற சித்திரம் கடந்த ஒரு தலைமுறையாக அங்கே வலுவாகிவருகிறது என்பதை வடக்கே பல ஆண்டுகள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும். பல வட இந்தியர்கள் இந்தி பேசத்தெரியாதத் தமிழர்களையும் வடகிழக்கை சேர்ந்தவர்களையும் சக இந்தியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அங்குள்ள ஊடகங்களுக்கு தமிழர்கள் குறித்து இருக்கும் இழிவான பார்வையும் தமிழர்கள் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் படிக்கப்போன பஞ்சாபி பையன்கள் தடுக்கி விழுந்தால் கூட இனவெறித் தாக்குதல் என்று மணிக்கணக்காக ஓலமிடும் இந்த தொலைக்காட்சிகள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களுக்காக மொத்தம் எத்தனை நிமிடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்? ஈழம் குறித்த செய்திகள் அபூர்வமாக இடம்பெறும் போது தமிழர்களுக்கு ஆதரவான குரல்களுக்கு மிகப்பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவது இல்லை. சொல்லப்போனால் சோ ராமசாமியிடமோ இந்து ராமிடமோ சுப்பிரமணியம் சுவாமியிடமோ கருத்துக் கேட்கப்படாத ஈழப்பிரச்சனை குறித்த ஒரு செய்தித்தொகுப்பை நான் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதுவரைக் கண்டதே இல்லை.<br /><br />நான் என்னை ஒரு தமிழ் தேசியவாதியாக எண்ணியதில்லை. இருந்தாலும் இன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த வலுவான ஆதாரங்கள் மேலைநாடுகளிடம் இருந்தும் அவர்கள் ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்காமல் இருப்பதற்கு இலங்கைக்கு இந்தியா அரசதந்திர ரீதியாக வழங்கும் பாதுகாப்பே காரணம் என்று வரும் செய்திகளைப் படிக்கும்போது எழும் வெறுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நான் அறிந்த பல தமிழர்களைப் போலவே எனக்கும் தமிழனா இந்தியனா என்ற அடையாளச் சிக்கலை எல்லாம் என்றென்றைக்குமாக தீர்த்துவைத்திருக்கின்றன.Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-21745319.post-78852342847098664662009-05-06T17:56:00.002+08:002009-05-06T18:03:29.799+08:00இரு இணைப்புகள்அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு பொருள் உதவி செய்ய விரும்புவோர் கீழேயுள்ள இணைப்பில் சென்று கடன் அட்டை மூலம் நன்கொடை அளிக்கலாம். 'Programme' என்னுமிடத்தில் Sri Lanka என்று தேர்வு செய்வது முக்கியம்.<br /><br /><a href="http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/iwpList2/Help_the_ICRC">http://www.icrc.org/web/eng/siteeng0.nsf/iwpList2/Help_the_ICRC</a><br /><br />கீழேயுள்ள இணைப்பில் உள்ள 'இறுதி யுத்தம்' என்னும் காணொளியை இதுவரைப் பார்க்காத தமிழகத் தமிழர்களை அதை பார்க்குமாறும், அதன் நோக்கங்களுடன் உடன்பாடு இருந்தால் நண்பர்களுக்கு அறியத்தருமாறும் வேண்டுகிறேன்.<br /><br /><a href="http://www.tamilsforobama.com/Final_War.html">http://www.tamilsforobama.com/Final_War.html</a><br /><br />நன்றி.Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21745319.post-70049127479742955042008-09-03T12:17:00.003+08:002008-09-03T12:23:54.389+08:00கிரிக்கெட்டும் காளைச்சாணமும்சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:<br /><br />"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not take pride in our physiques."<br /><br />இப்படி காளைச்சாணத்தை வீசியெறிவது ஒலிம்பிக்கில் ஒரு போட்டியாகச் சேர்க்கப்பட்டால் நம்மவர்கள் அனைத்துப் பதக்கங்களையும் வழித்தெடுத்துவிடுவார்கள் என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. உடல் நிரந்தரமானது என்று உலகில் எந்த மதமோ பண்பாடோ கருதுவதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் "உடலை வழிபடாதிருத்தல்" பற்றி சொல்வதென்றால் இந்திய மரபு இலக்கியங்கள் கதைமாந்தர்களின் உடல் பற்றிய அளவுக்கதிகமான விவரிப்புகளாலும் புகழ்ச்சிகளினாலும் நிறைந்திருப்பதை அவற்றுடன் சிறிதளவு அறிமுகம் உள்ளவர்கள் கூட அறிந்திருப்பார்கள். விளையாட்டுகளில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய நிலைக்கு ஆன்மீக/தத்துவ அடிப்படையிலான ஒரு காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்றால் இந்தியர்கள் விதி, கருமவினை ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையை சொல்லலாம். ஒவ்வொருவரும் தனக்கு "விதிக்கப்பட்ட" நிலையை ஏற்றுக்கொண்டு அதை மாற்றுவதற்கு எவ்வகையிலும் முயலாமலிருக்க வலியுறுத்தப்படும் ஒரு பண்பாட்டில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கத் தேவையான ஊக்கமும் போட்டித்தன்மையும் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.<br /><br />நூற்றிப்பத்து கோடி மக்களைக் கொண்ட நாளைய வல்லரசு சைதாப்பேட்டையை விட சற்று பெரியதாக இருக்கும் நாடுகள் சாதித்த அளவுக்குக் கூட விளையாட்டுக்களில் சாதிக்க முடியாமல் போனது ஏன் என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்படவேண்டிய முக்கியமானக் கேள்வி. இதற்கு வழக்கமாக சொல்லப்படும் காரணங்கள் மொக்கையானவை. மேற்கத்தியவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியர்களின் உயரமும் உடல்வலுவும் குறைவாக இருப்பதே காரணம் என்பதை சீனர்களின் மிகப்பெரிய வெற்றி உடைத்தெறிகிறது. இந்தியாவை விட அதிக வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகள் கூட சில குறிப்பிட்ட விளையாட்டுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியர்கள் அடிப்படையிலேயே விளையாட்டுக்களில் ஆர்வமற்றவர்கள் என்றால், இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது நிலவும் வெறித்தனமான மோகத்திற்கு விளக்கம் தேவைப்படுகிறது.<br /><br />*****<br /><br />அவுட்லுக் இதழில் எஸ். ஆனந்த் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த தலித் எழுத்தாளர் சிறியவன் ஆனந்த் இந்திய ஊடகங்களில் பொதுவாக பேசப்படாத பேசுபொருட்களைக் குறித்து அதிகம் எழுதுபவர். இளையராஜா என்னும் புனித பிம்பத்திடம் சமூக நோக்கங்களுக்காக இசையைப் பயன்படுத்துதல் குறித்தும், கம்யூனிஸ்ட் மேடைப் பாடகரான அவரது அண்ணன் வரதராஜன் குறித்தும், ஆந்திராவின் கத்தாரைக் குறித்தும், சமூக உணர்வுடைய மற்ற இசைக்கலைஞர்கள் குறித்தும் கேட்டு பதிலாக பு.பி.யை "நான் அந்தக் குப்பைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்று திருவாய் மலரவைத்தது இவர்தான். ஆனந்த் கிரிக்கெட்டை சமூகக் கண்ணோட்டத்தில் ஆராயும் பல விரிவானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட்டின் சமூகப் பின்னணி மற்றும் வரலாறு குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள ராமச்சந்திர குகா, ஆஷிஷ் நந்தி ஆகியோரை பல இடங்களில் மேற்கோள் காட்டியே ஆனந்த் தன் கட்டுரைகளை எழுதியுள்ளார். (Cricket historian என்று இந்திய ஊடகங்களால் பட்டம் சூட்டப்பட்டிருக்கும் குகாவைக் குறிப்பிடாமல் கிரிக்கெட் ஆதிக்கத்திற்கு பின்னுள்ள சமூகக் காரணங்களை யாரும் எழுதமுடியாத ஒரு நிலை நிலவுகிறது. நான் முன்பு கிரிக்கெட்டை லேசாகத் தொட்டு <a href="http://kaiman-alavu.blogspot.com/2006/12/blog-post.html">எழுதியபோது</a> ஆங்கில அனானிகள் அவதரித்து குகாவைப் படித்தாயா, குன்றத்தில் ஏறினாயா என்றெல்லாம் குடைந்தெடுத்தார்கள்.)<br /><br />மொத்தம் பதினைந்துப் பக்கங்களுக்கு மேல் நீளும் ஆனந்தின் கிரிக்கெட் பற்றியக் கட்டுரைகளை அவுட்லுக் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே படிக்கமுடியும். கட்டுரைகளிலுள்ள சில முக்கியமானக் கருத்துக்களை மட்டும் கீழே (நீலத்தில்) தொகுத்து அளித்திருக்கிறேன். (வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு அல்ல.)<br /><br /><ul style="color: rgb(0, 0, 153);"><li>இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது வேலையற்ற ராஜாக்களும் ஆங்கிலேயர்களை நகலெடுத்த பார்சிகளும் தான் என்றாலும் 1947-க்கு பிறகு மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களே கிரிக்கெட்டில் முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தனர். அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை நடந்த 'டெஸ்ட்' போட்டிகளில் விளையாடிய பதினொன்று பேர் கொண்ட அணிகளில் எப்போதும் குறைந்தது ஆறிலிருந்து ஒன்பது பேர் வரை பார்ப்பனர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்கட்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமானது என்பது ஆராயப்படவில்லை. கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற பார்ப்பனரல்லாதவர்களும் சமூகத்தின் மேல் அடுக்குகளிலிருந்தே வந்தார்கள். இதற்கு மாறாக ஹாக்கி அணிகளில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சீக்கியர், பழங்குடியினர் ஆகியோர் அதிகமாக இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த (2002) ஹாக்கி உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை.</li></ul><ul style="color: rgb(0, 0, 153);"><li>ஹாக்கி, காற்பந்து போன்ற குழு விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட்டில் உடல் உழைப்பிற்கானத் தேவை மிகவும் குறைவு என்பது உடல் உழைப்பை இழிவாகக் கருதி ஒதுக்கிய இந்திய 'உயர்'சாதிகள் அதன் மீது மோகம் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மிகுந்த நேர விரயத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவது உழைக்காத வர்க்கங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்ற ஆட்டக்காரர்கள் வைத்திருந்த தொப்பைகளின் அளவுக்கு அவர்களால் ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில் நுழைந்திருக்கக் கூட முடியாது. சற்று அதிகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் வேகப்பந்து வீச்சு போன்ற பிரிவுகளில் கபில் தேவைத் தவிர இந்தியர் யாரும் உலக அளவில் புகழ்பெற்றதில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் கபில் தேவைப் போல மாமிசம் உண்ணும் சாதியினராகத் தான் இருந்திருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காக இருந்த, "உலகின் மிகவேகமான சைவப் பந்துவீச்சாளர்" என்று அழைக்கப்பட்ட ஸ்ரீநாத் பின்பு தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி மாமிசம் உண்ணுபவராக மாறினார். ஒப்புநோக்க அதிக உடல் உழைப்பைக் கோரும் ஒருநாள் போட்டிகள் மேலோங்கியிருப்பது தற்போது மாநகரங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை சற்றுக் குறைத்திருக்கிறது. அண்மைக்காலமாக சிறு நகரங்களைச் சேர்ந்த, ஆங்கிலம் பேசாத ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.</li></ul><ul style="color: rgb(0, 0, 153);"><li>கிரிக்கெட் உடல் தொடுகைக்கு தேவையில்லாத குழு விளையாட்டு என்பது பார்ப்பனர்கள் அதை (முன்பு) விரும்ப ஒரு காரணமாக இருந்தது என்று ராமசந்திர குகா குறிப்பிடுகிறார்.</li></ul><ul style="color: rgb(0, 0, 153);"><li>பெரும்பாலான நாடுகளில் விளையாட்டுக்கள் ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இருந்திருக்கிறது. மாரடோனா, பெலே, மைக் டைசன், மாஜிக் ஜாண்சன், மைக்கேல் ஜோர்டன் என்று எத்தனையோ பேர் விளையாட்டின் மூலமே சேரிகளிலிருந்து உச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், குறிப்பாகக் கிரிக்கெட்டில், இதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அபூர்வ விதிவிலக்குகளான வினோத் காம்ப்ளி, டொட்ட கணேஷ் போன்றவர்களால் திறமை இருந்தும் இந்திய கிரிக்கெட் சூழலில் நீடிக்க முடியவில்லை. காம்ப்ளியைத் தவிர வேறு எந்த தலித்தும் இந்தியாவுக்காக 'டெஸ்ட்' போட்டிகளிலோ ஒருநாள் போட்டிகளிலோ விளையாடியதில்லை. தலித் மற்றும் பழங்குடிகள் மிக அதிகமாக இடம்பெறும் ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட் ஆதிக்கத்தின் மூலம் ஓரங்கட்டப்படுகின்றன. தவிரவும் இந்திய ஹாக்கி அணி எவ்வளவு தான் சாதனைகள் புரிந்தாலும், கருப்பு நிறமுடைய இந்தியர்கள் புறக்கணிக்கப்படும் இந்திய ஊடகங்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்புக்கள் தன்ராஜ் பிள்ளை போன்றவர்களுக்கு கிடைப்பது அரிது.</li></ul><ul style="color: rgb(0, 0, 153);"><li>கிரிக்கெட் ஜனநாயகத்தன்மை அதிகம் இல்லாத ஒரு விளையாட்டு. கிரிக்கெட் தோன்றிய இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக இல்லை. காற்பந்து தான் அங்கு மிக பிரபலமாக உள்ளது. சாதி அமைப்பு பேணப்படும் இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே கிரிக்கெட் மோகம் அளவுக்கு அதிகமாக உள்ளது.</li></ul><br />*****<br /><br />பிரச்சனை என்னவென்றால் இந்தியச் சூழலில் இதைப் பற்றி எல்லாம் பேசமுடியாது. அதிலும் குறிப்பாக இணையத்தில் ஆங்கிலத் தளங்களில் 'உயர்'சாதியினரின், குறிப்பாக பார்ப்பனர்களின், ஆதிக்கத்தைக் குறித்து விவாதிப்பது சற்றும் நடக்காத காரியம். என்.ஆர்.ஐ கம்ப்யூட்டர் பையன்களின் படை ஒன்று வந்திறங்கும். வழக்கமான தகுதி-திறமை காளைச்சாணம் வாரி எறியப்படும். இருபத்தோராம் நூற்றாண்டிலும் எல்லவற்றிலும் சாதியை இழுக்கும் குகைமனிதர்கள் மீது எல்லையற்ற அருவருப்பு வெளிப்படுத்தப்படும். சாதியைப் பார்க்காமல் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கவேண்டும் என்ற அறிவுரையும் இதிலும் இடஒதுக்கீடு வேண்டுமா என்ற நக்கலும் கலந்து ஒலிக்கும். சமூகத்தின் உயர் அடுக்குகளில் பிறந்ததன் காரணமாக கிடைத்த அனைத்து சாதகங்களையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் பயன்படுத்தி வெற்றிபெற்ற பின் சாதி ஆதிக்கத்தைப் பற்றி யாராவது சுட்டிக்காட்டினால் "சாதியா? அப்படீன்னா என்ன?" என்று பாவனை செய்யும் நவநாகரீக மைனர் குஞ்சுகளைப் போல் கொலைவெறியூட்டும் உயிரினங்கள் வேறு எதுவும் இல்லை. எவ்வித புள்ளிவிவரங்களும் இங்கு வேலைக்காகாது. பேரரசர் அம்மணமாக இருப்பதைப் படம் எடுத்துக் காட்டினால் கூட பட்டு வேட்டியும் தங்கச் சரிகையிட்ட அங்கவஸ்திரமும் கண்ணுக்குத் தெரியவில்லையா என்றுக் கேட்பார்கள்.<br /><br />எஸ். ஆனந்த் இந்திய கிரிக்கெட்டை தன் நிழலுக்கு அடியில் வேறு எதையும் வளரவிடாத பெரும் ஆலமரம் என்கிறார். கடந்த கால் நூற்றாண்டு நிகழ்வுகளை ஆராய்ந்துப் பார்த்தால் இது மிகவும் உண்மை என்றே தோன்றுகிறது. எண்பதுகளின் தொடக்கம் வரை ('உலக' கோப்பை வெற்றி, தொலைக்காட்சிகளின் பெருக்கம் ஆகியவற்றிற்கு முன்பு வரை) கிரிக்கெட் மாநகரங்களுக்கு வெளியே அதிகம் ஆதரிக்கப்படாமலே இருந்தது. 1985-86 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களிடம் கிரிக்கெட் ஆர்வம் மிகத் தீவிரமடைந்த பிறகு கூட நாகர்கோயிலில் நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப்பட்டிருந்தது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் சோம்பேறிகளின் விளையாட்டு என்று சொல்லி கிரிக்கெட்டை வெறுத்தனர். ஹாக்கி மற்றும் காற்பந்து விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேரளத்திலும் மேற்கு வங்காளத்திலும் நிலபிரபுத்துவ வேர்களைக் கொண்ட கிரிக்கெட்டுக்கு தீவிர எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக கேரளத்தில். எண்பதுகளில் பல மலையாளப் படங்களில் கிரிக்கெட் மோகத்தை கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காலகட்டத்தில் கேரளத்திலிருந்து தான் இந்தியாவின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களும் தடகள வீராங்கனைகளும் தோன்றினர். ஆனால் தற்போது கேரளத்தையும் கிரிக்கெட் மோகம் முழுமையாக ஆக்கிரமித்திருப்பதைக் காணமுடிகிறது. குரங்கு சேட்டைகளுக்குப் பெயர் போன ஸ்ரீசந்த் என்ற மலையாளி முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பது வருங்கால உஷாக்களுக்கும், ஷைனிக்களுக்கும், விஜயன்களுக்கும் கள்ளிப்பால் கொடுப்பதற்கு ஒப்பான ஒரு சோக நிகழ்வு.Unknownnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-21745319.post-5718706698672885832008-06-01T21:25:00.003+08:002008-12-13T06:36:15.482+08:00சுதந்திரம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkEumnaW-01NZ21bxvKmoEPPw3Qh6V5PnKnavylLSYuiLa4qH42usEYsCkBzyJJsquqC-QroDgQ2CgXW2lE0Q0WLLORhZ1kky7fqDPGPy3MA8Cl7R3fwdE6RQJCfq0jLATFLCWVw/s1600-h/amazon.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkEumnaW-01NZ21bxvKmoEPPw3Qh6V5PnKnavylLSYuiLa4qH42usEYsCkBzyJJsquqC-QroDgQ2CgXW2lE0Q0WLLORhZ1kky7fqDPGPy3MA8Cl7R3fwdE6RQJCfq0jLATFLCWVw/s400/amazon.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5206905139089248786" border="0" /></a><br />நேற்று இணையத்தில் பார்த்த இந்த நிழற்படம் வெகுநேரத்திற்கு மனதைவிட்டு அகலவில்லை. பிரேசிலில் அமேசான் நதியோரக் காடுகளில் வாழும் இதுவரை அறியப்படாத பழங்குடி ஒன்று முதன்முதலாக விமானத்திலிருந்து நிழற்படம் எடுக்கப்பட்டதைப் பற்றிய <a href="http://news.bbc.co.uk/2/hi/americas/7426794.stm">செய்தியைப்</a> படித்தேன். காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் தங்கள் வாழ்விடங்களை இழந்து அழிவின் விளிம்பில் இருக்கும் அவர்கள் வெளியுலகத்தினரின் தொடர்பை எந்த அளவுக்கு அஞ்சுகிறார்கள் என்பதை படங்கள் உணர்த்தின. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருந்த பழங்குடியினருக்கு வேற்று மனிதர்களின் தொடர்பால் கிடைத்தது அழிவைத் தவிர வேறெதுவும் இல்லை. விலங்குகளைப் போல் அவர்களை வேட்டையாடிய ஐரோப்பியர்கள் ஒருபுறம் என்றால், அவர்களுக்கு 'நாகரிகம்' கற்றுத்தருவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வுமுறையையும் பண்பாட்டையும் அழித்தொழித்தவர்கள் மற்றொருபுறம். மேலும் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அறவே இல்லாத புது நோய்களால் பீடிக்கப்பட்டு அழியும் ஆபத்தும் உண்டு.<br /><br />பயிற்சியாலும் தொழிலாலும் ஒரு நுட்பவியலாளனாக இருந்தாலும் மனதளவில் நான் ஒரு Luddite என்றே உணர்கிறேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் பல நன்மைகள் விளைந்திருந்தாலும் அது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை பெரிதும் நாசம் செய்துவிட்டது என்பது என் எண்ணம். நவீன நாகரிக வளர்ச்சிகளால் அதிகம் தீண்டப்படாத ஒரு பகுதியில் இயற்கை சார்ந்த வாழ்வு வாழ்வதைப் பற்றிய கற்பனைகள் எனக்குண்டு. (என் குழந்தைப்பருவம் முழுவதும் அப்படிப்பட்ட வாழ்வுமுறையைக் கொண்ட, காடும் மலையும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் கழிந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.) பல மாநகரங்களில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும் எப்போதும் ஒரளவு அமைதியான புறநகர் பகுதிகளிலேயே வாழவும் வேலை செய்யும்படியும் அமைந்தது என் நல்லூழ் என்று தான் சொல்லவேண்டும். நெரிசலும் இரைச்சலும் நிறைந்த, மருந்துக்குக் கூட மரங்களோ தாவரங்களோ இல்லாத நகரங்களில் - குறிப்பாக இந்திய மாநகரங்களில் - வாழ்வது எனக்கு சகிக்கமுடியாத ஆக்கினை.<br /><br />இத்தகைய மனப்போக்குகள் கொண்ட எனக்கு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடியினரின் வாழ்வை மற்றவர்கள் புகுந்து கலைப்பது ஒரு கொடூரச்செயலாகவே தோன்றுகிறது. நல்லவேளையாக பிரேசில் அரசாங்கத்தின் கொள்கை - இத்தகைய அறியப்படாத பழங்குடியினரை எந்தவகையிலும் தொடர்புகொள்ளாமல் அவர்கள் போக்கிலேயே வாழவிடுவதே அவர்கள் கொள்கை - ஆறுதலளிப்பதாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களுக்கு தங்கள் வாழ்வை தங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்வதற்கு உள்ள சுதந்திரத்தை ஒரு பலம் வாய்ந்த அரசு அங்கீகரிப்பது போற்றுதலுக்குரியது. இந்த இடத்தில் இந்தியாவில் அணைகள் கட்டுவதற்காகவும் மற்ற 'வளர்ச்சித்' திட்டங்களுக்காகவும் லட்சக்கணக்கான பழங்குடியினரை எந்த இழப்பீடும் கொடுக்காமல் அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அகற்றும் அரசுகளும் இந்த அநீதிக்கு துணைபோகும் 'நீதி'மன்றங்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.<br /><br />****************<br /><br />கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுவரும் திபெத் மக்களின் சுய உரிமைப் போராட்டம் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது. மொழி, இனம், பண்பாடு, பாரம்பரிய வாழ்விடம் என்று ஒரு தேசத்திற்குரிய அனைத்து தனி அடையாளங்களும் உடைய ஒரு சமூகம் இராணுவ, பொருளாதார பலம் வாய்ந்த ஒரு அரசால் ஆக்கிரமிக்கப்படும்போது அதை எதிர்த்து தார்மீக அடிப்படையில் அகிம்சை முறையில் போராடுவதில் ஏதாவது பலன் உண்டா என்பதே கேள்வி. திபெத்தியர்களின் பக்கம் உள்ள நியாயத்தை அங்கீகரித்து அவர்களுக்குத் தார்மீக ஆதரவு அளித்து வந்த நாடுகள் தற்போது அவர்களை கைகழுவும் நிலையில் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதன்படி சீனாவின் விருப்பப்படி நடந்துக்கொள்ளுமாறு திபெத்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தனைக்கும் திபெத்தியர்கள் முழு சுதந்திரம் கேட்கவில்லை. தங்கள் பண்பாடு மற்றும் வாழ்வுமுறையைப் பாதுகாக்கும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களுடன் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதே அவர்கள் கோரிக்கை.<br /><br />இப்பிரச்சினையில் ஹிந்து குழுமத்தின் அப்பட்டமான சீன ஆதரவு, திபெத் எதிர்ப்பு நிலைபாடு அதன் சிங்கள ஆதரவு, தமிழர் எதிர்ப்பு நிலைக்கு சற்றும் குறையாததாக இருக்கிறது. தலாய் லாமாவை ஒசாமா பின் லேடனுடனும் அயத்தொல்லா கொமேனியுடனும் ஒப்பிட்டு ஹிந்துவில் எழுதப்படும் கட்டுரைகள் ஈழத்தமிழர்கள் வன்முறையை நாடாமல் உப்பு சத்தியாகிரகம் முதலான அகிம்சை வழிகளில் போராடியிருந்தால் ஹிந்துவும் இந்திய பெரியமனிதர்களும் ஆதரித்திருப்பார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கனவான்களின் 'முகத்தின் மீது கையை வைக்கும்' விதமாக இருக்கின்றன. ஒரு ஊடகவியலாளருக்குள்ள தார்மீக விதிகள் அனைத்தையும் துறந்து ஊரெல்லாம் தன் பெயர் நாறுவதைப் பற்றியக் கவலை சற்றும் இல்லாமல் என். ராம் நேரடியாக களத்தில் இறங்கி எழுதியிருக்கும் நீண்டக் கட்டுரைகளில் வெளிப்படும் திபெத்தியர் மீதான வெறுப்பைக் காணும்போது அவர் சீனரத்னமாலை சூடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.<br /><br />என். ராமை வழக்கமாக எதிர்க்கும் இந்துத்துவாதிகளில் சிலர் அவரது திபெத் எதிர்ப்பு நிலையோடு ஒத்துப்போவது இடதுசாரி, வலதுசாரி என்ற வேடங்களுக்கு அப்பால் இவர்கள் இணையும் புள்ளிகள் பல உண்டு என்பதை உணர்த்துகிறது. திபெத்தியர்கள் வெற்றிப் பெற்றுவிட்டால் அது காஷ்மீரிகளுக்கு ஊக்கமளித்துவிடுமாம். இவர்களுக்கு இத்தகைய அச்சம் இருப்பதால் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் எந்த மக்களையும் அவர்களது போராட்டத்தில் எவ்வளவுதான் தார்மீக நியாயம் இருந்தாலும் ஆதரிக்கமாட்டார்கள். அண்மையில் கொசோவா சுதந்திரப் பிரகடனம் செய்தபோது அதை எதிர்த்த நாடுகளின் பட்டியல் - சீனா, இந்தியா, ரஷ்யா, இலங்கை - சுவாரசியமானது. இந்த நாடுகள் அனைத்துமே சிறுபான்மை இனங்களின் சுய உரிமைப் போராட்டங்களை இராணுவ பலத்தால் எதிர்கொண்டுவருபவை. இந்நாடுகளின் குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் சுய நிர்ணய உரிமை என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். சாந்த சொரூபியான ஒரு சீன சக ஊழியருடன் திபெத்தியரின் சுய நிர்ணய உரிமைப் பற்றிப் பேசி அவர் சன்னதம் ஆடக் கண்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது.Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-21745319.post-52612393259339949332008-03-04T16:33:00.002+08:002008-03-04T16:40:23.492+08:00பின் தொடரும் நரியின் ஊளைபழம்பெரும் இலக்கியங்களை குறுக்கித் திரித்து வசைபாடுவதே வழக்கமாகிவிட்ட தமிழ் சூழலில் பாட்டி வடை சுட்ட கதையின் உண்மையான இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பது எளிதல்ல. எதையுமே உழைத்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, பழிப்புக் காட்டினாலே போதும் என்ற எண்ணம் இங்கு வேரூன்றியிருக்கிறது. இந்திய தான்தோன்றிவாதச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான ஒடுக்கத்தெ கேசவன் பிள்ளையை நான் முதன்முதலில் சந்தித்தபோது எதையும் ஆராயாமல் நிராகரிக்கக்கூடாது என்பதே அந்த பேராசான் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை. [மலமானாலும் கிளறிப் பார்த்துவிட வேண்டும்.] இதை நான் விமரிசகர் உறக்கப்பரம்பில் வர்கீஸிடம் தொலைபேசியில் சொன்னபோது அவர் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் சொன்னார், "உண்மைதான், நாற்றத்தைப் பார்த்தால் முடியாது".<br /><br />நுண்ணுணர்வற்ற வாசகர்களால் பாட்டி வடை சுட்ட கதை ஒரு எளிய நீதிக்கதையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இது கதையின் மேற்பரப்பை மட்டுமே வாசிக்கும் எளிய வாசக மனப்பான்மையின் விளைவு. உண்மையில் இலக்கியம் பல அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொருவிதமானக் கதையைச் சொல்லிச் செல்லும். இது பல்லடுக்குப் பரப்படிவாதம் (multiplexed subterraneanism) எனப்படுகிறது. தமிழில் ஒன்றேமுக்கால் அடுக்குக்கு மேற்பட்ட சிறுகதை எழுதப்பட்டதில்லை என்று முன்பு நான் ஒரு விரிவானக் கட்டுரை எழுதினேன். அடுத்த இரண்டு மாதத்தில் மட்டும் அதற்கு நாற்பத்தி இரண்டு எதிர்வினைகள் வெளியாயின. இவற்றில் முப்பத்தி ஒன்பது அக்கப்போர் மொழியில் எழுதப்பட்ட வசைக்கட்டுரைகள். அவற்றை நான் படிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. எண்ணிக்கையை கணக்கு வைத்திருப்பதோடு சரி.<br /><br />இக்கதையின் துவக்கம் முற்றிலும் யதார்த்தத்தன்மை உடையதாக இருக்கிறது. [அன்இமேஜினபிள் ரியலிசம் என்பார் இந்திர குமாரசாமி.] தனியே வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டி ஒரு ஆழமானப் படிமம். ஒருவகையில் அது பழமையின், இயற்கை சார்ந்த வாழ்வுமுறையின் குறியீடு. அத்தகைய வாழ்வுமுறை இயற்கையை எதிர்த்து வெற்றிக்கொள்ளத் துடிக்கும் மானிட இயக்கத்தின் முன் தோல்வியுறுவதே பாட்டியின் இழப்பின் மூலம் உருவகப்படுத்தப்படுகிறது என்பதை தேர்ந்த வாசகன் அகவயமாக உணர்ந்துக்கொள்ளமுடியும். வாசகனுக்கு மட்டுமல்லாமல் படைப்பாளிக்கும் மன நெகிழ்ச்சியை அளிக்கத்தக்க இடம் அது. ஜூலியட் தற்கொலை செய்துக் கொள்ளும் கட்டத்தில் ஷேக்ஸ்ப்பியர் மேசையில் தலையை முட்டி அழுதிருப்பார். அது அப்படித்தான் இருக்கமுடியும். வேறு வழியில்லை.<br /><br />கதையில் நரிக்கும் காகத்துக்கும் இடையே நிகழும் உரையாடல் யதார்த்தவாதத் தளத்திற்கு ஒவ்வாத மிகைத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. இங்குள்ள முற்போக்காளர்கள் உடனே அதை தென்னமெரிக்க மாய யதார்த்தவாதத்துடன் முடிச்சு போடுவார்கள். அவர்களுக்குப் படிக்கக் கிடைத்த ஐரோப்பியத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அவர்கள் அந்த முடிவுக்கே வரமுடியும். உண்மையில் பாட்டி வடை சுட்ட கதை நம் காவிய மரபில் உறுதியாக காலூன்றி நின்று நம்முடன் பேசுகிறது. பெரும்பாலும் யதார்த்தத் தளத்தில் நிகழும் நம் காவியங்கள் சில உச்சத் தருணங்களில் மட்டும் சாகச, மாயாஜாலத் தளங்களுக்குச் சென்றுத் திரும்புவதை நாம் பார்க்கலாம். கிழக்கு ஐரோப்பிய பூடகவாத எழுத்தாளர்களான டிமிட்ரி காரசேவ், ஹென்ரிக் சீவல், ஸ்லோபடோன் பூந்தி ஆகியோரது சில கதைகளிலும் இந்தப் போக்கைப் பார்க்கலாம். கறாரானத் தர்க்கவாதியான விமரிசகர் ஆதி குலோத்துங்கன் மற்றொரு கோணத்தை முன்வைக்கிறார். நரி பேசியது என்பதை அப்படியே பொருள் கொள்வது புனைவு உண்மையை பொது உண்மையாக எண்ணும் போக்கு என்கிறார் அவர். நரி உண்மையில் ஊளையின் மூலமே பேசியிருக்கவேண்டும். [அவ்வ்வ்வ்வ் ம்ம்ங்ஊஊஊய்ய்ய் - நீ ரொம்ப அழகா இருக்கே]<br /><br />எல்லையற்றக் காலப் பெருவெளியின் முன் மானிட முயற்சிகள் எத்தனை அற்பமானவை என்பதையே இக்கதை உணர்த்தும் உச்சத் தரிசனமாக நான் காண்கிறேன். கிருஷ்ணநகரத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கரிய நாயைப் போல இக்கதையில் நரி காலத்தின் குறியீடாகவே வருகிறது. நரி ஓடிப் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்லி கதையை முடிப்பது அகத்தூண்டலை ஏற்படுத்தும் பலம் வாய்ந்த புனைவு உத்தி. யுகம் யுகமாக முடிவின்மையை பின்தொடர்ந்து செல்கிறது நரி. கூடவே அதன் ஊளையும்.Unknownnoreply@blogger.com29tag:blogger.com,1999:blog-21745319.post-62573565160792088552008-02-20T16:25:00.002+08:002008-02-20T16:30:44.885+08:00நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம்சில வாரங்களுக்கு முன் ஜெயமோகனின் வலைப்பதிவில் சிவாஜியை மட்டமான முறையில் கிண்டலடித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசித்தபோது அது சர்ச்சையைக் கிளப்பும் என்று தோன்றியது. சிவாஜியை 'இழிவுபடுத்தியதற்காக' நடிகர் சங்கம் ஜெயமோகனுக்கு எதிராக ஏதாவது போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று அப்போது நினைத்தேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஜெயமோகனுக்கு கருணாநிதியின் வசைக்கவிதைக்கு சற்றும் குறையாத விளம்பரத்தைப் பெற்றுத் தந்திருக்கும். இப்போது ஆனந்தவிகடன் அட்டைப்படக் கட்டுரை மூலம் விளம்பரம் அளித்திருக்கிறது. அதன்பிறகு அவரது இணையத்தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். சில நூறு புது வாசகர்களாவது கிடைப்பார்கள். விகடன் போன்ற வணிக இதழ்களின் மூலம் புது வாசகர்களை இழுப்பதற்கான வாய்ப்பு குறித்தும் சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தனக்கு கிடைத்த பல நல்ல வாசகர்களைக் குறித்தும் ஜெயமோகன் அடிக்கடி எழுதிவருவதை வைத்துப் பார்க்கும்போது விகடனின் செயல் அவருக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு எதை தந்திருக்கமுடியும் என்று ஊகிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் எல்லா மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. விகடன் தனக்கு பெரிய அநீதி இழைத்துவிட்டது போல இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.<br /><br />ஒன்றை சொல்லியாகவேண்டும். சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரைக் குறித்து ஜெயமோகன் எழுதியதை எழுதுவதற்கான உரிமை அவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பது எல்லாவிதமான கருத்துக்களுக்கும் சேர்த்து தான். அவ்வப்போது எதாவது ஒரு கூட்டம் "மனம் புண்பட்டுவிட்டது" என்ற ஓலத்துடன் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக தெருவில் இறங்குவதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. தஸ்லிமா நஸ்ரின், எம்.எஃப்.ஹூசைன், ஞாநி, ஜெயமோகன் என்று யாராக இருந்தாலும் என் நிலைபாடு இதுதான்.<br /><br />இவ்விவகாரம் குறித்து தன்மீது வைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயமோகன் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கும் பதில்களிலிருந்து:<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"இலக்கியத்தில் இல்லாத ஒன்றை, தேவையற்ற ஒன்றை நான் எழுதிவிடவில்லை. அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"எம்.ஜி.ஆரின் பேச்சுமுறையைக் கிண்டல் செய்யலாமா என்ற வினா. உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமல்ல. ஒருபோதும் நான் என் தனிவாழ்விலும் எழுத்திலும் அதைச் செய்ததில்லை. ஆனால் இலக்கியத்தில் இதற்கு இடமிருக்கிறது. பின்நவீனத்துவ காலத்து இலக்கியம் அங்கதத்தை ‘கவிழ்ப்பாக்கம்’ [subversive writing] என்றே குறிப்பிடுகிறது. ... அவற்றுக்கு நாகரீக எல்லைகளோ, ஒழுக்க எல்லைகளோ இல்லை. ஏனென்றால் நாகரீகம், ஒழுக்கம் என்று வரையறைசெய்து அதிகாரமாக ஆக்கியிருக்கும் விஷயங்களைத்தான் அவை தலைகீழாக்குகின்றன."</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"சென்ற காலத்தவரே கருத்துகக்ளை உருவாக்கி நமக்கு தந்திருக்கிறார்கள். பிம்பங்களை உருவாக்கி அளித்திருகிறார்கள். அவற்றை உடைக்காமல் நமக்கு சிந்தனை நிகழ முடியாது. வழிபாட்டில் இருந்து சிந்தனை உருவாவதில்லை. அங்கதம் ஒரு வகை உடைப்பு மட்டுமே."</span><br /><br />ஜெயமோகனின் அரசியலைக் குறித்து ஏதும் அறியாதவர்கள் இதையெல்லாம் வாசித்தால் அவர் ஒரு தீவிரமான முற்போக்குவாதியென்றும் நாகரீக எல்லைகளுக்கோ ஒழுக்க எல்லைகளுக்கோ அடங்காமல் மரபு வழிவந்த அதிகார அமைப்பையும் புனிதங்களையும் அங்கதத்தின் மூலம் கட்டுடைத்து தலைகீழாக்குவதே அவரது முழுநேரப் பணி என்று எண்ணக்கூடும். ஆனால் இதற்கும் உண்மைக்குமான தூரம் பல ஒளி ஆண்டுகள் இருக்கும்.<br /><br />விகடனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரை மட்டுமல்லாது தன் இலக்கிய ஆசிரியர்கள் உட்பட பலரையும் பகடி செய்திருப்பதாக சொல்கிறார். இது முழுக்க நேர்மையான ஒரு தகவல் அல்ல. தன் 'குருநாதர்'களைப் பற்றியும் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அது வேறுவிதமான நகைச்சுவை. நான் என் மகனின் சேட்டைகளைப் பற்றி நகைச்சுவையாக எழுதினால் அது வாசிப்பவருக்கு அவன் மேல் ஒரு வாஞ்சையை ஏற்படுத்தும் விதமாக தான் இருக்கும். ஜெயமோகன் ஆற்றூர் ரவிவர்மாவை பற்றி வேடிக்கையாக எழுதியிருக்கும் கட்டுரையை வாசித்தால் ஆற்றூர் ஒரு விரும்பத்தக்க, குழந்தைத்தனமான, பெருந்தன்மையுடைய மனிதராக தான் தோன்றுகிறார். பிம்பங்களை உடைத்து தலைகீழாக்குவதன் தேவையை பற்றியெல்லாம் நீட்டி முழக்கும் ஜெயமோகன் உண்மையில் ரவிவர்மாவின் பிம்பத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே இந்த அங்கதக் கட்டுரையை எழுதியிருக்கிறார். எடுத்துக்காட்டாக: "அவர் கேரள இலக்கியத்தில் ஒரு வலுவான, நுட்பமான மையம். எவரையும் விமரிசனம்செய்வதில்லை ஆற்றூர். யாரையுமே வெறுப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரியமானவர்." "அது என் குருநாதனின் ஆசி" என்பது போன்ற நெக்குருகல்களும் உண்டு. நித்ய சைதன்ய யதியைப் பற்றியக் கட்டுரையில் அவரது பாமரப் பக்தர்கள் தான் பகடி செய்யப்படுகிறார்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் உள்ள மட்டம் தட்டும் தொனி ஜெயமோகனின் மதிப்புக்குரியவர்களைப் பற்றியக் கட்டுரைகளில் இல்லை.<br /><br />உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் மட்டம் தட்டவேண்டிய தேவை எதுவும் ஜெயமோகனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த இருவரையும் உயர்வாக எண்ணி ரசிக்கும் 'பாமர' தமிழர்களின் ரசனையைத் தான் அவர் மறைமுகமாக நக்கல் செய்கிறார். ஜெயமோகன் தன்னுடைய திரைப்பட ரசனையும் அளவுகோல்களும் மலையாளப் படங்கள் மூலம் உருவானைவையே என்று முன்பு ஒருமுறை எழுதியிருக்கிறார். அவருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்காது என்பது தெரிந்தது தான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகைச்சுவை-அல்லாத கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்:<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"தமிழ் நடிப்பில் நான் விரும்பாதது சிவாஜி பாணி நடிப்பு. சிவாஜியின் புருவம் நேராக இருந்த ஒரு புகைப்படத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. இயல்பாக இருப்பதென்றால் கூட அப்படி நடித்துக் காட்டக் கூடியவர் அவர்."</span><br /><br />உலக சினிமாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் சிவாஜி ஒரு சிறந்த நடிகராக தேறாமல் இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் நாடக மரபினால் உருவாக்கப்பட்டவர். அந்த மரபின் அளவுகோல்களின் படி அவர் ஒரு சிறந்த நடிகர். மிகையுணர்ச்சி அவ்வகை நடிப்பின் பிரிக்கமுடியாத அம்சம். அதன் காரணமாகவே திரைப்படங்கள் நாடகங்களின் நீட்சியாகப் பார்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் சிவாஜி தமிழர்களால் மிகச் சிறந்த நடிகராகக் கொண்டாடப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் மேற்கத்திய நாகரிகத்தால் அதிகம் பாதிக்கப்படாத தமிழர்களின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகையுணர்ச்சி என்பது நெருக்கமாக கலந்த ஒன்று. அதீதமாகவும் ஆரவாரமாகவும் உணர்ச்சிவசப்படுவது, தலைவனுக்காக (உண்மையிலேயே) உயிரைக் கொடுப்பது போன்ற மற்ற சமூகங்களிடம் அதிகம் காணமுடியாத குணங்களை நவீன நாகரிகத்தின் தாக்கம் இல்லாத தமிழர்களிடம் இன்றளவும் காணமுடிகிறது. மேற்குலக கனவான்களும் அந்த பண்பாட்டில் தோய்ந்துபோன இந்திய மேட்டுக்குடியினரும் உணர்ச்சிகளை பொதுவில் வெளிப்படுத்தமாட்டார்கள். எவ்வளவு கொடூரமான இறப்பு நேர்ந்தாலும் நேரு குடும்பத்தினரின் கண்ணில் ஒரு துளி கண்ணீரைக் கூட பொதுமக்கள் பார்க்கமுடியாது. ஆனால் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பது தமிழர்களின் பண்பாடு. மேட்டுக்குடியை சேர்ந்த ஒருவர் அதை நக்கல் செய்தால் அது வெறும் அங்கதமாக அல்லாமல் கலாச்சாரப் பாசிசமாக பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.<br /><br />மிகையுணர்ச்சி / மிகைநவிர்ச்சி கலந்த ஒன்றை தமிழர்கள் ரசிப்பது திரைப்படங்களில் மட்டுமல்ல இலக்கியத்திலும் ஜெயமோகனுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்போதுமே ஒரு நக்கலுடன் தான் எதிர்கொள்வார். எடுத்துக்காட்டாக வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது வழங்கப்பட்டதை விமரிசித்து இப்படி எழுதுகிறார்:<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை ஆரம்பித்துவிடுகிறது. அதன் கூறுமுறை, நிகழ்வுகள் அனைத்துமே ஆர்ப்பாட்டமானவை, மிகையானவை, அலங்காரமானவை. வைரமுத்துவின் தமிழ்நடையை சசிகலாவின் நகையலங்காரத்தை ரசிப்பவர்களே ரசிக்க முடியும்."</span><br /><br />தடம் விலகல்: ஜெயமோகனின் இலக்கியக் கருத்துகளையும் விமரிசனங்களையும் தொடர்ந்து வாசித்து வரும் கூர்மையான வாசகனுக்கு அவற்றின் அறிவுஜீவித்தனமான பூச்சுகளையும், பெயர்கள் பட்டியலிடுதல் போன்ற உத்திகளையும் தாண்டி அவற்றின் பின்னே இருக்கும் நேர்மையின்மையையும் மலிவான அரசியல் செயல்பாடுகளையும் புரிந்துக்கொள்ள மிஞ்சிப் போனால் சில மாதங்கள் ஆகலாம். கள்ளிக்காட்டு இதிகாசத்தின் தலைப்பிலேயே யதார்த்தவாதத்துக்கு ஒவ்வாத மிகை இருக்கிறது என்ற கருத்து கசாக்கின்றெ இதிகாசத்துக்கும் பொருந்துமா என்று கேட்டால் அதற்கு அவர் சொல்லப்போகும் பதில் எதுவாக இருப்பினும் அதில் குறைந்தது முப்பது எழுத்தாளர்களின் பெயர்களாவது இருக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம். வைரமுத்துவின் எழுத்து இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்லும் அதே ஜெயமோகன் தான் உடல்ஊனத்தைப் பழிப்பது ஒழுக்கமில்லாமல் இருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு இடம் இருப்பதாக சொல்கிறார். தேவைப்பட்டால் இரும்புக்கை மாயாவியிலும் ஒருகாலத்தில் பள்ளி மாணவர்கள் மறைத்துவைத்துப் படித்த 'என் பெயர் சு' வகை 'அனுபவ'க் கதைகளிலும் கூட உன்னத இலக்கிய கூறுகளைக் கண்டெடுத்து அதிஉச்சபேரெழுச்சிவாதம் என்றோ ஈரவெங்காயவாதம் என்றோ விளங்காத வார்த்தைகளைத் தூவிப் பரிமாறும் வித்தை அவருக்கு அத்துப்படி. இலக்கியத்தில் யாருக்கு இடம் உண்டு யாருக்கு இல்லை என்று தன் வசதிக்கேற்ப இப்படி பட்டா போட்டுக் கொடுப்பதை யாராவது தர்க்க வழிமுறைகளைக் கையாண்டு கேள்வி கேட்டால் இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை, அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்று சொல்லி வாயை அடைப்பார்.<br /><br />சிவாஜியையும் எம்.ஜி.ஆரையும் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவனின் தரத்துக்கு இறங்கி கிண்டலடித்துவிட்டு அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று என்று சொல்லும் ஜெயமோகன் தன் 'அறிவார்ந்த' ரசனைக்கேற்ற, தான் உயர்வாக மதிக்கும் ஒரு கலைஞனை இது போல் நக்கல் செய்யமுடியுமா என்பது சந்தேகமே. எடுத்துக்காட்டாக மகாராஜபுரம் சந்தானத்தை. சந்தானத்தைக் குறித்து ஜெயமோகன் எழுதியிருப்பது சுவாரசியமானது. 'தலீவர்' கட்-அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகனின் மனநிலையை அதில் காணமுடியும்.<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"மகாராஜபுரம் சந்தானம் பாடுவதற்கு முன்பு இலேசாக முனகுவார், அவ்வொலியிலேயே அவர் என்னுடைய பாடகராக ஆனார். அது இசை மலையில் கசியும் சிறு ஊற்றுபோல, முதல் மழைத்துளிபோல... தன்னகங்காரம் , சுய அடையாளம், அறிவின் பெரும்பாரம் ஆகிய அனைத்தையும் கழற்றி வைத்து எளிய ரசிகனாக சரணடைவதில், கலையின் வாசல்முன் முழுஉடலும் பணிய விழுவதில், மகத்தான ஒரு சுதந்திரம் உள்ளது. எத்தனை மேதைகள் இருந்தாலும் மகாராஜாவைத்தவிர எவரையுமே நான் பெரும்பாடகனாக அங்கீகாிக்க மாட்டேன். அவரது குரலின் சாயல் இல்லாத எவரையும் ரசிக்கவும் மாட்டேன். இப்பிறப்பில் நான் அவருக்கு மட்டுமே ரசிகன் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்."</span><br /><br />தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என்ற கர்வத்தை சற்றும் கூச்சமில்லாமல் வெளிப்படுத்திக்கொள்பவர் ஜெயமோகன். 'தகுதி' இருப்பவர்கள் மட்டுமே தன்னை விமரிசிக்கவோ தன்னுடன் விவாதிக்கவோ செய்யலாம் என்று தொடர்ந்து சொல்லி வருபவர். இது மேட்டிமைத்தனம் இல்லையென்றால் வேறு எதுவுமே மேட்டிமைத்தனம் இல்லை. அறிவு முதிர்ச்சியற்றவர்களாகவும் மலிவான ரசனை உடையவர்களாகவும் தான் கருதுபவர்களை மட்டம் தட்டுவதற்கு அங்கதத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்துகிறார். ஐயாயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ள வீடும் ஹெமிங்வேயையும் பஷீரையும் ஜெயகாந்தனையும் வாசிக்கும் பெற்றோரும் பிறப்பிலேயே அமையப்பெற்ற ஜெயமோகனுக்கு எழுத்தாளனிடம் 'எவ்வளவு கிடைக்கும்?' என்று கேட்கும் இலக்கிய அறிமுகமில்லாத குமாஸ்தாவை இத்தனை ஆண்டுகளாக நக்கல் செய்தும் இன்னும் அலுக்கவில்லை. பலரிடமும் பிறந்த சாதி மற்றும் வர்க்கத்தை பற்றிய திமிராக வெளிப்படுவது ஜெயமோகனிடம் அறிவு பற்றிய கர்வமாக சற்றே மாறிய வடிவத்தை அடைகிறது. அவர் தன் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் கலையங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கச்சனின் குடியிருப்பில் பிறந்திருந்தால் 'ஞானச்செருக்கு' இந்த அளவு ஏறியிருக்காது என்று தோன்றுகிறது.<br /><br />இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவை. தமிழகத்தின் வெகுஜன கலாச்சாரம் மற்றும் ரசனை குறித்து எனக்கும் நிறைய விமரிசனங்கள் இருக்கின்றன. அறிவார்ந்த சிந்தனைகளுக்கு எதிரான போக்கும், எல்லாவற்றையும் எளிமைப்படுத்துவதும், சராசரித்தனத்தை ஊக்குவிக்கும் போக்கும் ஒரு சமூகத்துக்கு கேடானது என்றே நம்புகிறேன். பாமர மக்களின் அறிவு, ரசனை போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் முற்போக்கு அறிவுஜீவிகள் அங்கதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே. ஆனால் இதை செய்பவர்கள் பாமரர்களின் நம்பிக்கைகளையும், அவர்கள் உயர்வாக கருதும் ஆளுமைகளையும் மட்டுமல்லாது மரபு வழிவந்த புனித பிம்பங்களையும் கட்டுடைக்கத் தயாரானவர்களாகவும் இருக்கவேண்டும்.<br /><br />ஆனால் ஜெயமோகன் அப்படி இல்லை. மரபு மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட புனிதங்களின் பாதுகாவலராகவும், அவற்றை கட்டுடைக்க முயலும் சீர்திருத்தவாதிகளை மோசமாக தாக்குபவராகவும் இருப்பவர் அவர். மரபுடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும் என்ற முன்முடிவுடன் அணுகுபவர். சென்ற காலத்தவர் உருவாக்கி தந்திருக்கும் கருத்துக்களையும் பிம்பங்களையும் அங்கதத்தின் மூலம் உடைக்கவேண்டியதின் அவசியம் குறித்து தற்போது வகுப்பெடுக்கும் ஜெயமோகன் தான் இந்து ஞான மரபு என்று அவர் சொல்லும் மரபின் கருத்தாக்கங்களை பெரியாரியர்கள் நக்கல் செய்யும் போது ஆவேசத்தை வெளிப்படுத்துபவர். புனித பிம்பங்களை உண்மையிலேயே உடைப்பவராக, ஒரு iconoclast-ஆக இறுதிவரை வாழ்ந்த பெரியாரை ஜெயமோகன் அளவுக்கு தாக்கிய எவரையும் நான் வாசித்ததில்லை.<br /><br />மரபின் புனிதங்களுக்கு எதிரான ஒரு சிறு நக்கலை கூட 'அங்கத எழுத்தாளர்' ஜெயமோகனால் சகிக்கமுடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை என் பழைய பதிவொன்றில் சுட்டியிருந்தேன். (புனிதங்களுக்கு எதிரான நக்கல் என்றால் மேற்கில் கிருஸ்தவ மத நம்பிக்கைகளை மாண்டி பைத்தான் போன்றவர்கள் கிண்டலடித்த அளவிற்கெல்லாம் போகவேண்டாம். அதில் பத்தில் ஒரு பங்கே போதும்.) ஒரு பெரியபுராணப் பாடலைப் பற்றி திண்டுக்கல் லியோனி கிண்டலாக ஏதோ சொல்லிவிட அதை குறித்து ஜெயமோகன் இப்படி எழுதினார்.<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"(லியோனியின் வெற்றிக்கான காரணங்களில்) முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை. அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது... லியோனி அவ்வுரையில் பெரியபுராணத்தை நக்கல் செய்கிறார். ஒரு கிராமத்துக்கு அவர்கள்குழு சென்று 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் ... ' என்று பாட, உள்ளூர் விவசாயிகள் 'அய்யா என்ன பாடுறீங்க ?' என்று கேட்கிறார்கள். ''பெரியபுராணம்'' என்கிறார் இவர். 'எங்க புராணம்தான் பெரியபுராணமா கெடக்கே. சினிமாப்பாட்டு எதாவது பாடுங்க' என்கிறார்கள். அப்படித்தான் இவர்கள் 'எளிய மக்களிடையே' இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள்."</span><br /><br />ஜெயமோகனின் சொல்வது இதுதான். 'அறிவார்ந்தவற்றை' பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் நக்கல் செய்யலாகாது. ஆனால் பாமரத் தமிழ் மனம் கொண்டவர்கள் உயர்வாக மதிப்பவற்றை 'அறிவார்ந்தவர்கள்' நக்கல் செய்யலாம். இதில் இன்னொரு சிறிய வேடிக்கை. தற்போதைய விகடன் சர்ச்சையைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் சொல்கிறார்:<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">"...பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ பெங்குவின் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்து உலகெலாம் படிக்கபட்டு ஒரு கிளாசிக் என புகழப்பட்ட Tiger Claw Tree நாவலின் இந்த தமிழாக்கத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து வெளிவந்தவற்றுக்கு ஒரு படி குறைவாகவே என் கட்டுரைகள் உள்ளன என்று நீங்கள் வாசித்தால் காணலாம்."</span><br /><br />எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து ஜெயமோகனைவிட ஒரு படி அதிகமாக கிண்டலடித்திருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் பெரிய நகைச்சுவையாளராக தான் இருக்கவேண்டும். ஜெயமோகன் லியோனி பற்றி எழுதியதற்கு பி.ஏ.கிருஷ்ணன் இப்படி பதில் எழுதினார்: "திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் மையத்துக்கு வந்திருப்பது தமிழ் மக்களின் அறிவுத்திறனுக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் வந்திருக்கும் நோயின் அறிகுறி."<br /><br />"திண்டுக்கல் லியோனி போன்றவர்கள்" மையத்துக்கு வருவதற்கு முன்னால் தமிழகத்தில் கோலோச்சிய 'நகைச்சுவையாளர்கள்' - சோ ராமசாமி, எஸ்.வீ.சேகர் வகையறாக்கள் - குறித்து பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. இவர்களது நகைச்சுவை எப்படிப்பட்டது? சமூக அடுக்கில் தங்களுக்கு கீழே இருப்பதாக கருதப்படுபவர்களின் அறிவுத்திறன், ரசனை, அடையாளங்கள் ஆகியவற்றை கேலிப்பொருளாக்கி நக்கலடிப்பதை தானே இவர்கள் செய்துவந்திருக்கிறார்கள்? இவர்களின் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள உளவியலும் அரசியலும் பெரும்பாலும் மேலோட்டமான பார்வைக்கு தெரியாதவண்ணம் இருக்கும். ஆனால் அபூர்வமாக பூனைக்குட்டி வெளியே வருவதும் உண்டு. அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றை சொல்வதென்றால் இரண்டு பெண்களை அட்டைக்கரி நிறமாக்கி, அங்கவை சங்கவை என்று பெயரிட்டு, அவர்களின் தகப்பன் அவர்களுக்கு ஆண் துணை பிடிக்க அலைவது போல் அமைக்கப்பட்டிருக்கும் 'நகைச்சுவை'க்கு பின்னால் உள்ள ஆதிக்க உளவியலை அறிய செரிப்ரம் செரிபெல்லம் இரண்டில் ஏதாவது ஒன்று இயங்கினாலே போதும்.<br /><br />கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழர்களின் அரசியல் தேர்வுகள், அடையாளங்கள், ரசனை ஆகியவற்றை நக்கல் செய்வதையே தன் முழுநேரப் பணியாக கொண்டு இயங்கும் சோ ராமசாமிக்கு ராமர் பாலம் எனும் நம்பிக்கையின் மீதான கருணாநிதியின் எள்ளல் கோபாவேசம் ஏற்படுத்துகிறது. அதற்கு எதிர்வினையாக 'பிதற்றியிருக்கிறார்', 'அற்பத்தனம்', 'மடத்தனம்' போன்ற தடித்த வார்த்தைகளால் நிரம்பிய ஒரு வசைத் தலையங்கத்தை எழுதி தன் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்கிறார். ஜெயமோகன், சோ போன்ற மேட்டிமைத்தனம் மிகுந்த 'அங்கத எழுத்தாளர்'களின் இலக்கணம் இதுதான். நாங்கள் மலிவானதாகவும், இழிவானதாகவும் கருதும் எதையும் - அது மற்றவர்களால் எவ்வளவு தான் உயர்வாக மதிக்கப்பட்டாலும் - மட்டமாக கிண்டலடிக்கும் முழு உரிமை எங்களுக்கு வேண்டும். அது தான் கருத்து சுதந்திரம். ஆனால் எங்கள் மரபுடன் தொடர்புடைய புனிதங்களை யாராவது நக்கல் செய்ய துணிந்தால் தொலைந்தீர்கள்.Unknownnoreply@blogger.com38tag:blogger.com,1999:blog-21745319.post-58836560308158314342007-10-02T13:36:00.000+08:002007-10-02T14:18:07.429+08:00மகாகனமும் மடியிலுள்ள கனமும்இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் நெறி தவறுவதோ சுயநலத்துடன் செயல்படுவதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று. பெரும்பாலானவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சுயலாபத்திற்காக விதிகளையும் அறநெறிகளையும் மீறத் தயங்காதவர்களாகவும் இருக்கும் ஒரு நாட்டில் நீதிபதிகள் மட்டும் களங்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதிலுள்ள அபத்தத்தை சுட்டுவதாக சில அண்மைய நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.<br /><br />சில மாதங்களுக்கு முன் வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒய். கே. சபர்வாலை எளிதில் மறந்துவிடமுடியாது. பாராளுமன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசின் இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரான சில முக்கியமான சர்ச்சைக்குள்ளான தீர்ப்புகள் இவரது தலைமையிலான நீதிபதிகள் குழுக்களால் வழங்கப்பட்டன. குறிப்பாக கிழே உள்ள இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தன் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட்டிருக்கிறது என்று பல்வேறு சட்ட வல்லுனர்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.<br /><br /><span style="color: rgb(0, 0, 0);">1. தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிலிருந்து "க்ரீமி லேயர்" எனப்படும் "முன்னேறிய" பிரிவினரை விலக்கவேண்டும் என்னும் </span><a style="color: rgb(153, 0, 0);" href="http://www.hindu.com/2006/10/20/stories/2006102017770100.htm">தீர்ப்பு</a><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 0, 0);">.</span> இது பற்றிய சட்ட வல்லுனர்களின் கருத்து </span><a style="color: rgb(153, 0, 0);" href="http://www.thehindu.com/2006/10/21/stories/2006102108431200.htm">இங்கே</a><span style="color: rgb(153, 0, 0);">.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">2. தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உட்பட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் முக்கியமான </span><a style="color: rgb(153, 0, 0);" href="http://www.hindu.com/2007/01/12/stories/2007011207840100.htm">தீர்ப்பு</a><span style="color: rgb(0, 0, 0);"><span style="color: rgb(153, 0, 0);">.</span> இது பற்றிய ஒரு விமரிசனப் பார்வை </span><a style="color: rgb(153, 0, 0);" href="http://www.flonnet.com/fl2402/stories/20070209003500400.htm">இங்கே</a><span style="color: rgb(153, 0, 0);">.</span><br /><br />இந்த தீர்ப்புகளை விமரிசித்து என் பழைய பதிவொன்றில் சில கருத்துக்களை எழுதியிருந்தேன். அவற்றைப் படித்த சட்ட "அறிஞர்" ஒருவர் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்லாமல் இப்படி தீர்ப்புகளையும் நீதிபதிகளையும் விமரிசிக்கும் தமிழ் வலைப்பதிவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ளுவதற்கான வழிமுறைகளைக் கேட்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேசபக்தர்கள் சிலருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கிய கூத்தெல்லாம் நடந்தேறியது.<br /><br />கடந்த சில நாட்களாக நீதிபதி சபர்வாலின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் இம்முறை இடஒதுக்கீட்டுக்கு எதிரான "மைல்கல்" தீர்ப்பு எதையும் வழங்கியதற்காக அல்ல. மாறாக அவர் மீது சில கடுமையானக் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்ட மிட்-டே நாளிதழின் நான்கு செய்தியாளர்களுக்கு நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றத்துக்காக நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதால். நீதிபதி சபர்வால் மீது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே. (மூத்த வழக்கறிஞர் <a href="http://www.outlookindia.com/full.asp?fodname=20070919&fname=prashant&sid=1">பிரஷாந்த் பூஷன்</a> மற்றும் <a href="http://www.outlookindia.com/full.asp?fodname=20071001&fname=Sabharwal+%28F%29&sid=1">அருந்ததி ராய்</a> ஆகியோர் அவுட்லுக் தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளின் அடிப்படையில் எழுதுகிறேன்.)<br /><br /><span style="color: rgb(51, 51, 255);">1. ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் டில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானக் கடைகளையும் தொழிலகங்களையும் மூடுவது குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்தது. அந்த வழக்கு தன் முன் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சபர்வால் மார்ச் 2005-ல் உத்தரவிட்டார். அக்டோபர் 2005-ல் நீதிபதி சபர்வாலின் மகன்கள் வணிக மையங்கள் கட்டி விற்கும் தொழிலில் முன்னணியில் இருந்த மற்றொருவரான பகேரியா என்பவரை தங்கள் புது நிறுவனம் ஒன்றில் பங்குத்தாரராக இணைத்தார்கள். பிப்ரவரி 2006-ல் நீதிபதி சபர்வால் மேற்படி வழக்கில் அனுமதி பெறாத கடைகள் மற்றும் தொழிலகங்கள் இடிக்கப்பட/மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ஆணையின் அமலாக்கத்தில் அசாதாரணமான அக்கறை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்புக் காரணமாக தயக்கம் காட்டிய டில்லி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. "சீலிங் டிரைவ்" என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கடைகளையும் வருமானத்தையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தங்கள் கடைகளை புதிதாகக் கட்டப்பட்ட வணிகமையங்களுக்கு மாற்ற விரைந்ததால் அத்தகைய மையங்களில் இடத்தின் விலை பலமடங்கு அதிகமானது. இதன் காரணமாக நீதிபதி சபர்வாலின் மகன்களின் பொருளாதார நிலையும் பலமடங்கு உயர்ந்தது. 2004-ல் வெறும் ஒரு லட்சம் ருபாய் என்று மதிப்பிடப்பட்ட அவர்களது நிறுவனத்தின் பங்கு மூலதனம் 2006-ல் முன்னூறு மடங்கு அதிகரித்தது. தற்போது அந்த நிறுவனம் நொய்டாவில் 56 கோடி ருபாய் மதிப்பில் ஒரு தகவல் தொழில்நுட்ப வணிக மையத்தை (IT Mall) கட்டி வருகிறது.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">2. தான் வழங்கும் தீர்ப்பின் காரணமாகத் தன் மகன்கள் ஆதாயமடைய வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில் இந்த வழக்கு தனக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட நீதிபதி சபர்வால் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டிருப்பதே முறை. ஆனால் அவரோ தானாகவே இந்த வழக்கைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார். (அப்போது தலைமை நீதிபதி ஆகியிராத அவருக்கு அப்படி தானாக வழக்கைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.)</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">3. குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செயல்பட்டதற்காக ஏராளமானவர்களின் கடைகளை மூட உத்தரவிட்டு அவர்களது வாழ்வாதாரங்களை இழக்க வைத்த நீதிபதி சபர்வாலின் மகன்களது நிறுவனங்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பதிவுசெய்யப்பட்ட அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தன.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">4. நீதிபதி சபர்வாலின் மகன்களின் நிறுவனத்திற்கு இந்திய யூனியன் வங்கி எவ்வித உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்களும் இல்லாமல் 28 கோடி ருபாய் கடன் வழங்கியது.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">5. எவ்வித முன் அனுபவமும் இல்லாத, ஒரு ருபாய்க்கு கூட வணிகம் செய்திராத (Nil turnover) இந்த நிறுவனத்துக்கு உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி அரசாங்கம் நொய்டாவில் மொத்தம் 24000 சதுர மீட்டர் அளவுள்ள மிகப் பெரிய மனைகளை மிகக் குறைந்த விலையில் ஒதுக்கியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நீதிபதி சபர்வால் சமாஜ்வாதி தலைவர் அமர் சிங்குக்கும் இந்தி நடிகைகள் உள்ளிட்ட பலருக்கும் இடையே நடந்த உரையாடல்களின் ஒலிநாடாக்களை ஊடகங்கள் வெளியிட </span><a style="color: rgb(153, 0, 0);" href="http://news.indlaw.com/c72ba8262b60fab9ea2c1de3fac69845">தடை விதித்து</a><span style="color: rgb(51, 51, 255);"> அந்த வழக்கை விசாரித்து வந்தார்.</span><br /><br /><span style="color: rgb(51, 51, 255);">6. இந்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி சபர்வாலின் மகன்கள் டில்லியில் 15.46 கோடி ருபாய்க்கு ஒரு பெரிய வீட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது விளக்கப்படவில்லை. மேலும் இந்த விற்பனை பத்திரத்தில் தாங்கள் நீதிபதி சபர்வாலின் மகன்கள் என்பதை மறைக்கும் விதமாக அவரது முழுப்பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே யோகேஷ் குமார் என்று எழுதியிருக்கிறார்கள்.</span><br /><br />இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் பக்தர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று தெரியவில்லை. நீதிபதியின் செயல்பாடுகள் பற்றிய விவாதத்தில் தேவையில்லாமல் அவரது மகன்களை இழுக்கும் நெறிப்பிறழ்வைக் யாராவது சுட்டிக்காட்டக் கூடும். வேறு சிலர் ஒரு தனிமனிதரின் தவறுக்காக ஒரு அமைப்பையே குறை சொல்வது தகுமோ முறையோ தர்மம்தானோ என்றெல்லாம் கேட்கலாம். ஆனால் ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆனந்த் மீது பல்வேறு <a href="http://www.hinduonnet.com/fline/fl1809/18091130.htm">குற்றச்சாட்டுக்கள்</a> கூறப்பட்டும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக <a href="http://www.hinduonnet.com/fline/fl1803/18030310.htm">தண்டனை</a> வழங்கப்பட்டது.<br /><br />இந்தியாவில் நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு என்ன கதி நேரும் என்பது மிட்-டே செய்தியாளர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் அவர்கள் இந்த முறைகேடுகளை துணிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நீதிபதி சபர்வால் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு தகவலுக்கும் அசைக்கமுடியாத, அதிகாரப்பூர்வமான <a href="http://www.judicialreforms.org/files/documents_on_sabharwal.pdf">ஆதாரங்கள்</a> இருப்பது தான். ஆதாரங்களுடன் உண்மையை சொல்லும் ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டனை அளிக்க முடியாது என்பதையே தங்களது தற்காப்பு வாதமாக மிட்-டே செய்தியாளர்கள் வைத்திருக்கிறார்கள். நீதிபதி சபர்வால் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய குடிமக்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.<br /><br />****<br /><br />என்னைப் பொறுத்தவரை தன் குடும்பம் பொருளாதார ரீதியாக ஆதாயம் பெறும்வகையில் நீதிபதி சபர்வால் வழங்கியதாக சொல்லப்படும் தீர்ப்புக்கள் மட்டுமல்லாது இடஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புக்களும் மறு ஆய்வு செய்யப்படவேண்டியவையே. அண்மைக்காலமாக இடஒதுக்கீட்டுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளின் போது சில நீதிபதிகள் தெரிவித்தக் கருத்துக்களிலிருந்து அவர்கள் சித்தாந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டின் தீவிர எதிர்ப்பாளர்களே என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இதில் வியப்படைய ஏதுமில்லை. வட இந்திய 'உயர்'குடியினருக்கு இட ஒதுக்கீட்டின் மீதும் அதனால் பயன்பெறுவோர் மீதும் எந்த அளவுக்கு இழிவான எண்ணமும் காழ்ப்பும் இருக்கிறது என்று அறியவேண்டுமானால் ரீடிஃப்.காம் போன்ற தளங்களில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் வட இந்திய 'துவிஜன்' பையன்கள் எழுதும் வசைகளைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.<br /><br />சமூக நீதி குறித்த புரிதலில் வடமாநிலங்களுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பது வெளிப்படை. பல வரலாற்றுக் காரணங்களால் தென்னிந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீட்டின் நன்மைகளை உணர்ந்திருக்கிறார்கள். தான், தன் சுற்றம் என்ற வட்டத்தைத் தாண்டி சிந்திக்க இயலாத சிலரைத் தவிர்த்துவிட்டு நோக்கினால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படையக்கூடிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கூட தீவிர இடஒதுக்கீடு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ் இணையத்திலிருந்தே பல எடுத்துக்காட்டுக்களை சொல்லமுடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையேயும் இந்த வேறுபாட்டைக் காண முடிகிறது. மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தும் உறுதியானக் கருத்துக்களுடன் தீர்ப்பெழுதிய நீதிபதி ரத்னவேல் பாண்டியன் உட்பட தென்னிந்திய நீதிபதிகள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருப்பினும் சமூக நீதிக்கு ஆதரவான நிலைபாடுகளையே எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்த <a href="http://www.hindu.com/2007/08/22/stories/2007082261461700.htm">இந்த செய்தியைப்</a> பார்த்தால் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த இரண்டு தென்னக நீதிபதிகள் மட்டுமே அக்கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம். குறிப்பாக "Should the government wait for years and years before the exercise of identification of OBCs is completed?" என்ற நீதிபதி ரவீந்திரனின் கேள்வியுடன் <a href="http://www.hindu.com/2007/04/24/stories/2007042406280100.htm">"You waited for 57 years, why not 6 more months?"</a> என்ற நீதிபதி அரிஜித் பசாயத்தின் கேள்வியை பொருத்திப்பாருங்கள்.<br /><br />உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அரசியல்/சித்தாந்த சாய்வுகள் உண்டு எனபதையும் அந்த சாய்வுகள் அவர்கள் எடுக்கும் முடிவுகளை பாதிக்கவல்லவை என்பதையும் மூடிமறைப்பது முட்டாள்தனம். இதன் காரணமாகத் தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் பின்னணி, கடந்த காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் எடுத்த நிலைபாடுகள், முன்னர் நீதிபதியாக பணியாற்றியபோது வழங்கியத் தீர்ப்புகள் என்று அனைத்தும் அலசி ஆராயப்பட்ட பின்பே செனட் அவர்களது நியமனத்தை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ செய்கிறது. அமெரிக்க அதிபரின் கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை இருந்தும் அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களின் சித்தாந்த சாய்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்ததால் அந்த நியமனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன.<br /><br />இந்திய உச்சநீதிமன்றத்தில் நலிந்த பிரிவினருக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்படாமல் இருப்பதும் சீர்செய்யவேண்டிய ஒன்று. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் இருபத்திரண்டு பேரில் ஒரு பெண் கூட இல்லை. ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். சுதந்திரத்துக்கு பின்னான முதல் ஐம்பது ஆண்டுகளில் மூன்று தலித் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தகுதியானவர்கள் பலர் இருந்தும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுவது குறித்த தன் வேதனையை முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன் அழுத்தமாக வெளிப்படுத்திய பிறகே தற்போதைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்டார். பரிந்துரைக்கப்பட்ட பிறகும் கூட அவரது தேர்வுக்கு அப்போதைய தலைமை நீதிபதி ஆனந்த உட்பட பலரால் முட்டுக்கட்டை இடப்பட்டது.<br /><br />நீதித்துறையில் சமூகநீதி குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் வி. வெங்கடேசன் இப்படி எழுதுகிறார்: <a href="http://www.hinduonnet.com/fline/fl1721/17210960.htm">"As the judiciary becomes over-protective of its powers vis-a-vis the executive, the nature of its social base causes concern."</a> அண்மைக்காலமாக இடஒதுக்கீடு குறித்த பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் குழுக்களில் கிட்டத்தட்ட முழுமையாக 'உயர்'சாதி நீதிபதிகளே இருந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உள்ளிட்ட ஒன்பதாவது அட்டவணை சட்டங்களைப் பற்றிய வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் நான் அறிந்தவரை பிற்படுத்தப்பட்டவரோ தலித்தோ எவரும் இல்லை. தன் குடும்பம் ஆதாயம் பெறுவதற்காக ஒரு தலைமை நீதிபதி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை தெருவில் இறக்கினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் இவ்வேளையில் எனக்கு எழும் கேள்வி இதுதான். இப்படிப்பட்ட நீதிபதிகள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் எப்படி தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தின் நலன்களை கருதாமல் செயல்படுவார்கள்?<br /><br />*****<br /><br />எனக்குத் தெரிந்தவரை ஒரு ஜனநாயக நாட்டில் சட்டங்களை உருவாக்குவது மக்கள் பிரதிநிதிகளின் மன்றமாகிய பாராளுமன்றத்தின் பணி. சட்டங்களை அமல்படுத்துவது அரசாங்கத்தின் பணி. சட்டங்களை ஆராய்ந்து, எது சட்டப்படி சரி, எது சட்டப்படி தவறு என்று தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய உச்சநீதிமன்றம் பாராளுமன்றம், அரசாங்கம் ஆகியவற்றின் பணிகளையும், அதிகாரங்களையும் தனதாக்கிக் கொள்வதையே தன் முழுநேரப் பணியாகக் கொண்டுள்ளது.<br /><br />புதிய சட்டங்களை இயற்றவோ, சட்டங்களில் திருத்தம் செய்யவோ அறவே அதிகாரம் இல்லாத உச்சநீதிமன்றம் அந்த வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றம் தானாகவே உருவாக்கி அரசாங்கத்தின் மீது திணிக்கும் "க்ரீமி லேயர்", "50% உச்சவரம்பு" ஆகியவற்றுக்கு அரசமைப்பு சட்டத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை என்று பல சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி அரசமைப்புச் சட்டத்தில் இல்லாதவற்றை உருவாக்கும் அதே வேளையில் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் ஒன்பதாவது அட்டவணைச் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் "மைல்கல்" தீர்ப்பை நீதிபதி சபர்வால் வழங்கிச்சென்றிருக்கிறார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத, யாராலும் விமரிசிக்க முடியாத (மீறி விமரிசித்த அருந்ததி ராய் போன்றவர்களை சிறையில் அடைக்கத் தயங்காத) ஒன்பது நீதிபதிகள் ஆய்வு செய்து தங்களுக்கு ஒவ்வாததை நிராகரிக்கலாம் என்றால் பின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பீற்றுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இந்த இடத்தில் சில மேதாவிகள் நாளைக்கு பாராளுமன்றம் அத்தனை பேரும் மொட்டைபோடவேண்டும் என்று சட்டம் இயற்றிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கிலியூட்டுவார்கள். கவலை வேண்டாம். ஜனநாயக நாட்டில் அராஜகச் சட்டங்களைத் திரும்பப்பெற வைப்பது எப்படி என்று மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதாவின் கிடாவெட்டுச் சட்டத்தையும் மதமாற்றத் தடை சட்டத்தையும் தூக்கியெறிய தமிழக மக்களுக்கு ஒரு தேர்தல் தான் தேவைப்பட்டது.<br /><br />இந்த அத்துமீறலை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தியிருக்கும் விதம் சுவாரசியமானது. அதாவது ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டங்கள் ஏதாவது அடிப்படை உரிமையை மீறியிருந்தால் அவை ரத்து செய்யப்படுமாம். பெரும்பாலான சட்டங்களும் அரசின் முற்போக்கு நடவடிக்கைகளும் சிலருடைய அடிப்படை உரிமையை மீறுவதாக காட்டமுடியும். எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு 'உயர்'சாதியினரின் சமத்துவமாக பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமையை (fundamental right to equality and non-discrimination) மீறுவதாகச் சொல்லலாம். இவற்றில் எந்த வகையான உரிமைகளைக் காப்பாற்றுவது, எவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது என்று முடிவு செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திடம் இருக்கிறது. நர்மதா அணைக்காக குருவிக்கூட்டை பிய்த்து எறிவது போல் லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்விடங்களை சிதைப்பதை தடுக்க கோரும் மனுவை நிராகரிக்கும் உச்சநீதிமன்றம் தான் வேறு சிலரின் மத நம்பிக்கைகளைக் காப்பாற்ற கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் (பெரும்பாலும் அடித்தட்டு கிராம மக்கள்) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உரிமையை சில மாநிலங்கள் சட்டம் இயற்றிப் பறித்தபோது "தேசநலன்" கருதி உருவாக்கப்பட்ட அந்த சட்டம் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்று தீர்ப்பளிக்கும் அதே நீதிமன்றம் தான் உயர்கல்வி நிறுவனங்களில் நீக்கமற நிறைந்திருப்பதற்கான உயர்சாதியினரின் "உரிமை"யைக் காப்பாற்றுகிறது.<br /><br />இந்திய உச்சநீதிமன்றம் படித்த நகர்புற நடுத்தரவர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், 'உயர்'சாதியினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதும், மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை அடித்து நொறுக்குவதும் கண் இருப்பவர்கள் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான ஓட்டுச்சீட்டைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான அரசுகளை ஏற்படுத்த முயல்வதை "வாக்கு வங்கி அரசியல்" என்றுத் தூற்றுகிறார்கள் காலங்காலமாக தங்கள் நலனையே தேசநலனாக முன்னிறுத்திப் பழகிவிட்டக் கனவான்கள். அப்படிப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொள்வதை ஆதரித்து ஊக்குவிப்பதும் இவர்கள் தான்.<br /><br />பொதுக் கொள்கை வகுப்பது அரசாங்கத்தின் வேலை என்றிருந்த நிலை மாறி இன்று பொதுக் கொள்கைகள் குறித்தும், அரசுத் திட்டங்கள் குறித்தும் இறுதி முடிவெடுக்கும் அதிகார மையமாக உச்சநீதிமன்றம் உருவாகியிருக்கிறது. சாலைகள் விரிவாக்கம், குடிசைப்பகுதிகளை அகற்றுதல், கடைகளை இழுத்து மூடுதல், சுற்றுச்சூழல் திட்டங்கள், நுழைவுத்தேர்வு நடத்துதல், பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்தல் என்று எல்லாவற்றிலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவே அமல்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கின் பரிணாம வளர்ச்சியாகத் தான் நேற்று யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத ஒரு நீதிபதி கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கலைத்துவிடுவேன் என்று மலைக்கவைக்கும் ஆணவத்துடன் எச்சரித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும் நடத்திப் பெறப்பட்ட "சுதந்திரம்" இன்னும் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு நாட்டில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் "நெருப்போடு விளையாடாதே" என்று மிரட்டப்படுகிறார்கள். அருந்ததி ராய் தன் கட்டுரையில் எழுதியிருப்பது போல நமக்கு ஒத்துக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் நாம் தற்போது ஒருவித நீதிமன்ற சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதே உண்மை.Unknownnoreply@blogger.com36tag:blogger.com,1999:blog-21745319.post-87876064952411709162007-09-19T12:19:00.000+08:002007-09-19T12:43:00.742+08:00ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 2இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே சேரநாடு என்று முன்னர் அறியப்பட்ட தற்போதைய கேரளத்தின் பண்பாட்டுத் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை எண்ணற்றத் தரவுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. தென் குமரி முதல் வட வேங்கடம் வரையிலான பண்டையத் தமிழகத்துக்கும் இலங்கைத் தீவிற்கும் இடையேயான தொடர்புகளை ஆராயும் வரலாற்றாசிரியர்கள் ஒருகாலத்தில் இலங்கை முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாட்டை ஒரு முக்கியக் கண்ணியாக கருதுகின்றனர். தமிழர்கள் மட்டுமல்லாது "பத்தினி தெய்வோ" என்ற பெயரில் சிங்களர்களும் கண்ணகியை வழிபட்டு வந்தனர். கண்ணகி வழிபாடு சேரநாட்டில் செங்குட்டுவனால் தொடங்கப்பட்டதாகவும், கண்ணகி கோயிலின் தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை அரசன் கஜபாகு கலந்துக்கொண்டதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு இன்றுவரை தொடர்வது கேரளத்திற்கும் இலங்கைக்கும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு ஒரு சான்று எனலாம்.<br /><br />வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கேரளத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாகத் தாய்வழி சமூகமுறை இருக்கிறது. திருமணத்திற்கு பின் ஆண் தன் மனைவியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழும் மருமக்கத்யம் முறை கேரளத்தில் பல்வேறு சாதியினரிடையே சில தலைமுறைகள் முன்பு வரை நிலவி வந்தது. ஈழத்தில் குறிப்பாக மட்டக்களப்பை ஒட்டிய கிழக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலுள்ள சில சாதியினரிடையேயும் இம்முறை (மனைவியின் 'குடி'யில் கணவன் இணைவது) வழக்கில் இருந்துவந்திருக்கிறது. கண்ணகி வழிபாடும் கிழக்குப் பகுதித் தமிழரிடையே தான் மிக அதிகமாக இருந்தது என்று பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் கேரளப் பண்பாட்டின் தாக்கம் இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியரிடையே தான் மிக அதிகமாக காணப்படுகிறது.<br /><br />அதே கட்டுரையில் பேரா. சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் உணவுமுறை தமிழக உணவுப் பழக்கங்களிலிருந்து வேறுப்பட்டிருப்பதை (எடுத்துக்காட்டாக தேங்காய், மிளகு அதிகமாகவும், தயிர், மோர் ஆகியவை குறைவாகவும் பயன்படுத்துதல்) சுட்டுகிறார். இது கேரள உணவுமுறையை ஒத்திருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே தலித் மக்கள் நீங்கலாக மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்து எவ்விதத் தயக்கமும் மனத்தடையும் இல்லாத ஒரே இந்து சமூகமென்றால் அது மலையாளிகள் தான் என்று நினைக்கிறேன். ஈழத்தமிழரிடையே - குறைந்தபட்சம் மட்டக்களப்புத் தமிழர்களிடையே - மாட்டிறைச்சி உண்ணுவதைக் குறித்தத் தயக்கங்கள் அறவே இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார்.<br /><br />கிழக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் முக்குவர்கள் ஈழத்தமிழருக்கும் கேரளத்துக்கும் இடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளுக்கு ஒரு முக்கிய சான்றாக இருக்கிறார்கள். முக்குளித்தல், முங்குதல் போன்றத் தமிழ் சொற்களிலிருந்து தான் முக்குவர் என்ற பெயர் தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கேரளத்திலும் குமரிமாவட்டத்திலும் மீன்பிடித்தலையே தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவந்த/வரும் இவர்கள் பழங்காலத்தில் முக்குளிப்பவர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. (ஆனால் முக்குவர்களை மட்டக்களப்புப் பகுதியைத் தோற்றுவித்த மூத்தக்குடிகளாகச் சித்தரிக்கும் "மட்டக்களப்பு மான்மியம்" எனும் பழைய நூல் அவர்களை 'முற்குகர்' என்று விளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அயோத்தியிலிருந்து படையெடுத்து வந்ததாகச் சொல்லி இராமாயணத்தோடு முடிச்சு போடப் படாதபாடு படுகிறது. சாதிப்பெயரை விருப்பப்படித் திரித்துப் பெருமை பேசுவது - எ.கா. சாணார் -> சான்றோர் - எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.)<br /><br />இலங்கையின் வரலாற்றில் முக்குவர்களைப் பற்றிய ஏராளமானக் குறிப்புகள் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் புத்தளம், மட்டக்களப்புப் பகுதிகளில் முக்குவத் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்பட்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கேரளக் கரையோரத்திலிருந்துப் படையெடுத்து வந்த முக்குவர்கள் இலங்கையின் மேற்குக் கரையிலுள்ள புத்தளம் பகுதியைக் கைப்பற்றிக் குடியேறினர் என்று 'முக்கர ஹட்டண' என்னும் சிங்கள ஓலைச்சுவடி சொல்கிறது. இதன் காரணமாக அப்போதைய சிங்கள அரசன் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்துக் கரையர்களைத் திரட்டி அவர்கள் உதவியுடன் முக்குவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, பின் கரையர்களைப் புத்தளம் பகுதியில் குடியமர்த்தியதாக அந்த ஓலைச்சுவடி தெரிவிக்கிறது. இப்படிக் புத்தளத்தில் குடியமர்ந்த தமிழ் கரையர்கள் காலப்போக்கில் 'கரவே' என்ற பெயரில் சிங்களம் பேசும் சாதியாக மாறிப்போனது மொழி அடையாளத்தை இழப்பது எத்தனை எளிது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அப்பகுதியில் நீர்கொழும்பு போன்ற இடங்களில் வாழும் கரையர்களில் பலர் தங்கள் தமிழ் அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கின்றனர். சரளமாக சிங்களம் பேசும் இவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்களுக்குள் இலக்கணம் சிதைந்த ஒருவிதத் தமிழில் (எ.கா. நான் போகிறேன் என்பதற்கு நான் போறா) தான் பேசிக்கொள்கிறார்கள்.<br /><br />முக்குவர்கள் முதன்முதலில் மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே வாழ்ந்துவந்த திமிலர் என்னும் மீனவ சாதியினரோடு அவர்களுக்கு மோதல் ஏற்பட்டு, பின் இஸ்லாமியர்களின் துணையுடன் திமிலர்களை வென்று அப்பகுதியைக் கைப்பற்றினார்கள் என்று கருதப்படுகிறது. முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது. கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். (ஆனால் இன்றைய மாப்பிளாக்கள் இந்த வரலாற்றை மறைத்து மாப்பிளா என்பது 'அம்மா பிள்ளை' என்பதிலிருந்து வந்தது என்ற மொக்கையான விளக்கத்தை விக்கிப்பீடியா வரைக் கொண்டு போயிருக்கிறார்கள்.) மாப்பிளா என்பது ஒரு தனி சமூகமாக உருவான பின்னும் கூட அந்த சமூக ஆண்கள் முக்குவப் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு அப்படி பிறக்கும் ஆண் குழந்தைகளில் சிலர் மாப்பிளா சமூகத்திடம் கையளிக்கப்படும் முறை நிலவியது என்று தர்ஸ்ட்டன் தன்னுடைய புகழ்பெற்ற Castes and Tribes of South India நூலில் குறிப்பிடுகிறார். அரபுகளிடம் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக முக்குவர்களில் பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி மாப்பிளா சமூகத்தில் இணைந்தனர். இதை வைத்து நோக்கும் போது இலங்கையின் கிழக்குப் பகுதியில் தாங்கள் தமிழர்கள் அல்ல என்றும் அரபு வம்சாவழியினர் என்றும் சொல்லிக் கொள்ளும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் வரலாறும் இதுபோன்றதாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. கேரளத்திலிருந்து முக்குவர்களுடன் இஸ்லாமைப் பின்பற்றும் மாப்பிளாக்கள் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.<br /><br />கேரளத்திலிருந்து இலங்கையில் அதிக அளவில் குடியேறிய மக்கள் சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது மொழி மற்றும் பண்பாடு குறித்து சிலவற்றை விளங்கிக்கொள்ள உதவுகிறது. முன்னர் குறிப்பிட்ட பேரா. கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையில் முக்குவர்கள் வாழும் கிழக்குப்பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேற்றுமைகளாக சிலவற்றை சொல்கிறார். மட்டக்களப்பு இந்துக்களின் மதச்சடங்குகள் ஆகம விதிகளைப் பின்பற்றாததாகவும் பார்ப்பனர்களின் தாக்கம் இல்லாததாகவும் இருப்பதாகவும் அங்கு முருகன் கோயில்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுதெய்வ வழிபாடு என்ற நிலையில் அதிக முக்கியத்துவம் இல்லாமல் உள்ள கண்ணகி அம்மன், திரௌபதி அம்மன் வழிபாடுகளுக்கு மட்டக்களப்பில் முக்கியமான இடம் அளிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார். இவற்றின் மூலமும் மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பழக்கங்களின் மூலமும் இப்பகுதியில் குடியேறியவர்கள் சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் பார்ப்பனிய சடங்குகளின் தாக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது.<br /><br />பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கீசியர்களும் அவர்களுக்குப் பின் வந்த மற்ற ஐரோப்பியர்களும் அங்கு வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களை ஒரு தவறானப் புரிதலின் காரணமாக மலபார்கள் என்றே அழைத்தனர். (மலபார் என்பது கேரளத்தைக் குறிக்கும் சொல்.) போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கேரளத்திலிருந்து மக்கள் இலங்கையில் குடியேறியதற்கு வலுவான சான்றுகள் இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில் கேரளக் கரையோரமும் இலங்கை கடற்கரைப்பகுதிகளும் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டில் இருந்தக் காலத்தில் அவற்றிடையே கடல் வணிகமும், குடியேற்றங்களும், பண்பாட்டுப் பரிமாற்றங்களும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். மலையாள மொழியில் ஐரோப்பியர் வருகைக்குப் பின் புகுந்ததாகக் கருதப்படும் பல சொற்கள் ஈழத்தமிழிலும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டாக மலையாளத்தில் உள்ள கசேர(நாற்காலி), தோக்கு(துப்பாக்கி), குசினி(சமையலறை) ஆகிய சொற்கள் ஈழத்தமிழில் முறையே கதிரை, துவக்கு, குசினி என்று வழங்குகின்றன.<br /><br />*****<br /><br />இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கேரளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர் என்றால் இலங்கையில் ஏன் மலையாளம் பேசப்படவில்லை? மலையாள மொழியில் சமஸ்கிருத சொற்கள் மிக அதிக அளவில் கலந்திருக்கும் போது ஈழத்தமிழில் ஏன் சமஸ்கிருதக் கலப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது? இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் முக்கியமானவை.<br /><br />சமூகங்களில் பிறமொழி கலப்பும் தாய்மொழி அழிப்பும் மேலிருந்துக் கீழாகவே நடைபெறும் என்பதற்கு உலக வரலாற்றில் எத்தனையோ சான்றுகளைப் பார்க்கலாம். தால்ஸ்தாயின் 'போரும் அமைதியும்' படிக்கும்போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் அடித்தட்டு மக்கள் யாவரும் ரஷ்ய மொழி பேசிக்கொண்டிருக்க ரஷ்ய மேட்டுக்குடியினர் தங்களுக்குள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டார்கள் என்பது தெரிகிறது. இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் தமிங்கிலத்தின் வேர்களை ஆராய்ந்தாலும் இந்தக் கருத்து உண்மைதான் என்பது புலப்படும். கேரளத்திலும் இதுதான் நடந்தது.<br /><br />கேரளத்தில் (சேர நாட்டில்) சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வரைத் தமிழே பேச்சுமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இருந்த நிலையில் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வடநாட்டிலிருந்து வந்துக் குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் சமூகத்தில் முதன்மைப் பெற்றதால் தமிழுடன் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாகக் கலக்கும் மணிப்பிரவாள நடை தோன்றி நாளடைவில் அது மலையாளமாக உருமாறியது. ஆனால் மணிப்பிரவாளமும் மலையாளமும் 'உயர்'சாதியினரின் மொழியாகவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசுகளில் ஆட்சிமொழியாகவும் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் தமிழ் மொழியின் வட்டார வழக்குகளையே தொடர்ந்துப் பேசி வந்தனர். தீண்டாமை என்பது 'காணாமை'யாக பரிமாண வளர்ச்சி அடையும் அளவுக்கு இங்கே சாதி அமைப்பு இறுக்கமடைந்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு மலையாளம் பேசிய 'உயர்'சாதியினருடன் நேரடி தொடர்புகள் இல்லாததாலும், கல்வி மறுக்கப்பட்டதாலும் அவர்கள் மலையாளிகளாக மாறுவது அண்மைக்காலம் வரை நிகழவில்லை. இன்றும் கூட தனி சமூகமாக வாழும் கேரளப் பழங்குடியினரின் மொழி மலையாளத்தை விட்டு விலகியதாகவும் சமஸ்கிருதக் கலப்பற்றதாகவும் இருக்கிறது.<br /><br />கேரளத்தில் கடந்த எண்பது ஆண்டுகளில் அனைவருக்கும் (மலையாள வழி) கல்வி என்ற நிலை ஏற்பட்டு சாதிகளிடையே ஊடாடல் அதிகரித்த பிறகே தமிழை மிகவும் ஒத்திருக்கும் பேச்சுவழக்குகளைக் கொண்டிருந்த பின்தங்கிய சமூகங்கள் செம்மையான மலையாளம் பேசத் தொடங்கினர். பல நூற்றாண்டுகளாக திருவிதாங்கூர் அரசில் இடம்பெற்றிருந்தக் குமரி மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருந்த நாயர்கள் மலையாளம் பேசுபவர்களாக இருக்க பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த நாடார்கள், மீனவர்கள், தலித்துக்கள் ஆகியோர் தமிழையே பேசிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளத்துடன் தொடர்ந்து இருந்திருந்தால் இம்மக்கள் அனைவருமே தற்போது முழு மலையாளிகளாக மாறி இருப்பர் என்பது உறுதி. நானும் இதைத் தமிழில் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.<br /><br />கேரளத்திலும் இலங்கையிலும் தற்போது வாழும் ஒரே சாதியான முக்குவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டின் இவர்களிடையே மதமாற்றத்தை மேற்கொண்ட போர்த்துக்கீசிய/இஸ்பானிய பாதிரிகள் அதற்கு தமிழ் மொழியையேப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். கேரளத்தின் தென்பகுதியில் வாழ்ந்த முக்குவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை குமரிமாவட்டத்தில் பேசப்படுவது போன்ற தமிழையே பேசிவந்தனர். அவர்களிடையே சில குடும்பங்களை நான் நேரடியாக அறிவேன். வீடுகளுக்குப் போனால் வயதானவர்கள் சரளமானத் தமிழில் பேசுவார்கள். இளையவர்களுக்கு தமிழ் புரியும் என்றாலும் பேசவராது. தகழியின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்ற செம்மீன் திரைப்படம் கேரள முக்குவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. முக்கியப் பாத்திரங்களின் பெயர்களிலிருந்தே (கருத்தம்மா, பழனி) அவர்களது தமிழ் மரபு விளங்கும். இப்படத்தில் வரும் பாடல்கள் - குறிப்பாக பெண்ணாளே, பெண்ணாளே என்னும் பாடல் - மிகவும் புகழ்பெற்றவை. திருமணத்தின் போது மணப்பெண்ணை நோக்கி மற்றப் பெண்கள் பாடும் இந்த பாடல் கடலுக்குப் போகும் மீனவனின் மனைவி நெறி தவறினால் கடலம்மா அவனைக் கொண்டு போய்விடுவாள் என்ற மீனவர்களது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. (பாடலில் வரும் அரயன்/அரயத்தி ஆகிய சொற்கள் முக்குவரில் ஒரு பிரிவினைக் குறிப்பவை. படிஞ்ஞாறு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் 'படு ஞாயிறு' என்னும் பழந்தமிழ் சொல்லின் திரிபு என்று நினைக்கிறேன்.)<br /><br /><span style="font-size:85%;"><span style="color: rgb(51, 51, 255);">பெண்ணாளே பெண்ணாளே, </span><br /><span style="color: rgb(51, 51, 255);">கரிமீன் கண்ணாளே கண்ணாளே!</span><br /><span style="color: rgb(51, 51, 255);">கன்னி தாமர பூமோளே!</span><br /><span style="color: rgb(51, 51, 255);">பண்டொரு முக்குவன் முத்தினு போயி</span><br /><span style="color: rgb(51, 51, 255);">படிஞ்ஞாறாம் காற்றத்து முங்கி போயி</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அரயத்தி பெண்ணு தபசிருந்நு</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அவனெ கடலம்ம கொண்டு வந்நே!</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அரயன் தோணியில் போயாலே</span><br /><span style="color: rgb(51, 51, 255);">அவனு காவலு நீயாணே!</span></span><br /><br />மலையாளப் படங்களில் பெரும்பாலும் 'தரவாட்டு' பின்னணி உடையவர்களாகக் காட்டப்படும் நாயகனும் நாயகியும் பாடும் பாடல்களில் எந்த அளவுக்கு சமஸ்கிருத சொற்கள் கலந்திருக்கும் என்பதை அறிந்தவர்களுக்கு இந்தப் பாடல் கிட்டத்தட்ட முழுமையாகத் தமிழ் சொற்களைக் கொண்டே அமைந்திருப்பது புலப்படும். தமிழில் வாசிப்பதற்கு வசதியாக லேசாக செம்மைப்படுத்தி கீழே இடுகிறேன்.<br /><br /><span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" >பெண்ணாளே பெண்ணாளே,<br />கருமீன் கண்ணாளே கண்ணாளே!<br />கன்னித் தாமரைப் பூமகளே!<br />பண்டு ஒரு முக்குவன் முத்துக்காக போனான்<br />மேற்குக் காற்றில் முங்கி(மூழ்கி) போனான்<br />அரயத்திப் பெண் தவமிருந்தாள்<br />அவனைக் கடலம்மா கொண்டு வந்தாள்!<br />அரயன் தோணியில் போனால்<br />அவனுக்குக் காவல் நீதான்!</span>Unknownnoreply@blogger.com24tag:blogger.com,1999:blog-21745319.post-82165586610039750762007-09-15T15:25:00.000+08:002007-09-15T15:38:33.010+08:00ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 1ஈழ எழுத்தாளர் ஒருவர் எழுதிய நாவல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. படித்தது ஷோபாசக்தியின் கொரில்லா. பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை ஒட்டியத் தீவுப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்ட இந்த நாவலை வாசித்தபோது நான் எதிர்பார்த்திராத ஒரு அனுபவத்தைப் பெற்றேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், அந்த வட்டாரத்தைக் களமாகக் கொண்ட காடு, ரப்பர் போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதைமாந்தர்களுடன் எப்படி நெருக்கமாக உணர்ந்தேனோ, அது போன்ற ஒரு உணர்வு கொரில்லா நாவலை வாசிக்கும்போது ஏற்பட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சுமொழிக்கும் குமரி மாவட்டத்தின் தற்போது அருகி வரும் வட்டார வழக்குக்கும் உள்ள ஒற்றுமைகளை முதன்மையானக் காரணமாக சொல்லலாம்.<br /><br />தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களால் பொருள் விளங்கிக்கொள்ளமுடியாத நூற்றுக்கணக்கான சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உண்டு. இவற்றில் பலவும் ஈழத்திலும் வழக்கில் இருக்கின்றன என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் ஈழத்தவர் எழுத்துக்களை வாசித்துவருவதாலும் சில ஈழத்தமிழர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை பெற்றிருப்பதாலும் அறிந்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குப் பரிச்சயமான நிறைய சொற்களை இந்த நாவலில் தான் முதன்முறையாக அடையாளம் கண்டுக்கொண்டேன். அவற்றைப் பட்டியலிடுவது என் நோக்கமில்லை. அண்மைக் காலங்களில் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்ட சில 'ஈழத்து' சொற்களை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுகளாக இடுகிறேன். பெரும்பாலான தமிழகப் பதிவர்களுக்கு அறிமுகமில்லாத இந்தச் சொற்கள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளவை.<br /><br /><span style="color: rgb(51, 51, 255);">பரிசு கேடு:</span> இழிவு, கேவலம், அவமானம் என்றப் பொருளில் கொரில்லா நாவலில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லைக் குறித்து வெற்றி தன் பதிவில் எழுதியிருந்தார். குமரி மாவட்டத்தில் - குறைந்தப்பட்சம் மீனவக் கிராமங்களில் - பரிகேடு என்ற சொல் இதேப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சொற்களிலுள்ள வல்லினங்களை விழுங்குவது குமரி மாவட்டத்தினர் வழக்கம் (நாகர்கோயில் -> நாரோயில்) என்பதால் பரிசு கேடு தான் பரிகேடு என்று மருவியிருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.<br /><br /><span style="color: rgb(51, 51, 255);">கடகம்:</span> கடகம் என்பதற்கு விகடனில் சுஜாதா தவறானப் பொருள் சொன்னதையடுத்து வலைப்பதிவுகளில் ஒரு விரிவான விவாதம் நடந்தது. பதிவர்கள் யோகன், வசந்தன் ஆகியோர் இது குறித்து பல தகவல்களை அளித்தனர். பனை ஓலை அல்லது நாரால் செய்யப்பட்டப் பெட்டியை கடவம் அல்லது கடவப்பெட்டி என்றே குமரி மாவட்டத்தில் சொல்வார்கள். ('க', 'வ' என்று மாறுவதும் இங்கே இயல்பு தான்: போகாது -> போவாது).<br /><br /><span style="color: rgb(51, 51, 255);">காவாலி:</span> பொறுக்கி, ஒழுக்கமற்றவன் என்றப் பொருளில் ஈழத்தமிழர் பயன்படுத்தும் இந்த சொல் குறித்து ஒரு பதிவில் விவாதிக்கப்பட்டபோது அது குமரி மாவட்டத்திலும் பயன்பாட்டில் உள்ளதை ஜோ சுட்டிக்காட்டியதாக நினைவு.<br /><br />இப்படி சொற்களில் உள்ள ஒற்றுமை மட்டுமல்லாமல் உச்சரிப்பிலும், ஏற்ற இறக்கங்களுடன் பேசும் முறையிலும் கூட ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். சிலவற்றை நுட்பமாக கவனித்தால் மட்டுமே உணரமுடியும். எடுத்துக்காட்டாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசும்போது வாக்கியங்களுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்ப "வந்து" என்பது போன்ற சொற்களை (filler words) பயன்படுத்துவர். ஈழத்தின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பேசுகையில் இப்படி இடைவெளியை நிரப்ப "மற்றது" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை முதலில் கேட்டபோது வியப்பாக இருந்தது. காரணம் குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பழையத் தலைமுறையினரில் நானறிந்த பலர் இப்படித்தான் பேசுவார்கள்.<br /><br />பாரம்பரிய உணவுமுறை மற்றும் உடைகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஈழத்துக்கும் குமரி மாவட்டத்துக்கும் ஒற்றுமைகள் உண்டு. குமரி மாவட்ட சமூக அமைப்பை தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கே பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் முதன்மையான இடம் இருந்ததில்லை. எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு மதச்சடங்குகள் செய்யும் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி சிறப்பு அந்தஸ்து ஏதும் அளிக்கப்பட்டதில்லை. இங்கே சாதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கிழக்குப் பகுதியில் வெள்ளாளர்களும் கேரளத்தை ஒட்டிய மேற்குப் பகுதியில் நாயர்களுமே ஆவார்கள். (இவ்விரு சாதிகளுக்கும் இடையே சிலநேரங்களில் திருமண உறவுகள் இருந்திருக்கின்றன. குமரி மாவட்ட நாயர்களில் சிலர் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்ற விகுதியை வைத்திருப்பதும் உண்டு.) தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரிடையே பார்ப்பன எதிர்ப்பு பரவலாகக் காணப்படுவது போல நாஞ்சில் நாட்டில் முன்பு அடக்குமுறைக்கு உள்ளான நாடார்களிடையே வெள்ளாளர்கள் மீது ஒருவித 'தலைமுறைக்கோபம்' நிலவுவதை இன்றும் பார்க்கலாம். (இதற்கு சில சுவாரசியமான எடுத்துக்காட்டுகளைத் தமிழ் இணையத்திலேயே கண்டுக்கொள்ளமுடியும்.) ஈழ சமூகத்திலும் இதுபோல வெள்ளாள ஆதிக்கம் நிலவியது நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. மேலும் பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் இடமும் குமரி மாவட்டத்தைப் போன்றதாகவே இருக்கிறது. (ஆனால் இதற்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இரண்டு வெவ்வேறு வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம் என்பதையும் அறிந்திருக்கிறேன்.)<br /><br />குமரி மாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடார் சமூகத்தினருக்கு மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு 'சாதிவழக்கு' உண்டு. (ஒருவேளை இது இங்குள்ள வேறு சில பின்தங்கிய சமூகத்தினருக்கும் பொதுவானதாக இருக்கலாம்.) தற்போது கல்வியறிவு பெற்ற நகர்புற நாடார்களால் கவனமாகத் தவிர்க்கப்படும் இந்த மொழிக்கு யாழ்ப்பாணத் தமிழர்களின் பேச்சுமொழியுடன் அசாதாரணமான ஒற்றுமைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இங்கே, இவர்கள், வருவார்கள், வந்தீர்கள் ஆகிய சொற்கள் குமரிமாவட்ட நாடார்களின் வழக்கில் இஞ்ச, இவிய, வருவினம்/வருவாவ, வந்திய(ள்) என்று வரும். மேலும் முன்பிருந்த நாடார்களின் பனை சார்ந்த வாழ்க்கைமுறை யாழ்ப்பாண மக்களில் சிலரின் வாழ்வுமுறையை ஒத்திருக்கிறது.<br /><br />நாடார்களுக்கு அடுத்தபடியாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்களில் முக்குவர், பரவர் என்று இரு பிரிவினர் உண்டு. ஓரிரு விதிவிலக்குகள் நீங்கலாக கன்னியாகுமரிக்கு கிழக்கே தூத்துக்குடியை நோக்கி செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பரவர்கள் வாழ்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் முக்குவர்கள் கன்னியாகுமரிக்கு மேற்கே கேரளத்தை நோக்கிச் செல்லும் கடற்கரையிலுள்ள அனைத்து ஊர்களிலும் பல உள்நாட்டுக் கிராமங்களிலும் வாழ்கிறார்கள். ஈழத்துக்கும் பண்டையத் தமிழகத்துக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்து அறிவதற்கு முக்குவர்களின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும். (இதுபற்றி அடுத்தப் பகுதியில்). கடலோர முக்குவர்களின் பேச்சுவழக்கு - குறிப்பாக மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் இழுத்துப் பேசும் முறை - ஈழத்தமிழர்களின், குறிப்பாக மட்டக்களப்புத் தமிழர்களின் மொழியை மிகவும் ஒத்திருக்கும் ஒன்று. (மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அதிக அளவில் முக்குவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசிக்கும் வரை எனக்குத் தெரியாது.) குமரி மாவட்ட முக்குவர்களில் பழையத் தலைமுறையினர் 'ஆமாம்' என்பதற்கு 'ஓம்' என்றுதான் சொல்வார்கள். இப்படி நிறைய உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு ஒன்றில் குடியேறிய இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தபோது பழங்காலத்தில் இவர்களது வழக்கு எந்த அளவுக்கு ஈழத்தை ஒத்திருந்தது என்பது விளங்கியது. 'பையன்' என்பதற்கு 'பெடியன்' என்றார் அவர்.<br /><br />சோகம் என்னவென்றால் குமரி மாவட்டத்துக்கே உரிய, அதன் மரபிலிருந்து பிரிக்கமுடியாத சொற்களை (இவற்றில் பல பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டவை) பேசுவதை இழிவாகக் கருதி அவற்றைத் தவிர்த்து தொலைக்காட்சியில் வரும் சென்னை மேட்டுக்குடியினரைப் போல ஆங்கிலம் கலந்து பேசுவது தான் நாகரிகம் என்றுக் கருதும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்தனத்தை தற்போதைய தலைமுறை செய்துவருவது தான். லேசாக இதுபோன்ற மனப்போக்கைக் கொண்ட மனைவியிடம் வேண்டுமென்றே ஊர்வழக்கில் பேசி வெறுப்பேற்றுவது என் விருப்ப பொழுதுபோக்குகளில் ஒன்று ;-)<br /><br />ஈழத்தின் மொழிக்கும் அதற்கு மிக அருகாமையில் இருக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் பகுதிகளின் வட்டார வழக்குக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒற்றுமைகள் ஏதும் இல்லாத நிலையில் ஒப்புநோக்க அதிக தொலைவில் இருக்கும் குமரி மாவட்டத்தின் மொழி ஈழத்தை மிகவும் ஒத்திருப்பது முதற்பார்வையில் சற்று விந்தையாகத் தெரியலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களின் வரலாறு மற்றும் வாழ்வியல் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்தால் இந்த தொடர்புக்கான காரணங்களைக் குறித்து ஓரளவுக்கு அறிய முடிகிறது. அவற்றை அடுத்தப் பகுதியில் எழுதுகிறேன்.Unknownnoreply@blogger.com27tag:blogger.com,1999:blog-21745319.post-31533117138270366692007-06-10T03:24:00.000+08:002007-06-10T03:36:49.038+08:00ரஜினி, சங்கர் மற்றும் அவர்களது அரசியல்சென்ற மாதம் நட்சத்திர வாரத்தின் போது தமிழ் திரையுலக அரசியலைக் குறித்து ஒரு பதிவு எழுதப்போய் அது சற்று அதிகமாகவே சர்ச்சையாகிவிட்டது. வெங்கட், சுந்தரமூர்த்தி ஆகியோர் இரண்டு வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பதிவுடன் முரண்பட்டு விரிவாக எதிர்வினையாற்றியிருந்தார்கள். உண்மையில் நேரமின்மைக் காரணமாக அந்த பதிவில் நான் சொல்ல நினைத்திருந்த எல்லாவற்றையும் சொல்லியிருக்கவில்லை. குறிப்பாக ரஜினி, சங்கர் ஆகியோரைப் பற்றி எழுதுவதற்கு சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தும் எழுதவில்லை. "சிவாஜி" பஜனைக் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த குறிப்புகளை லேசாக விரித்து இங்கே இடுகிறேன். ரசிகக் கண்மணிகள் பொறுத்தருள்வார்களாக.<br /><br />தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஜெயலலிதாவை அதுவரை தீவிரமாக ஆதரித்துவந்த தமிழ்நாட்டு வலதுசாரிகளுக்கு அவர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அதைவிட முக்கியமானக் காரணங்கள் இருந்தன. சசிகலாவின் சுற்றமும் சமூகமும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, ஊடகங்களுக்கு எதிரான ஜெயலலிதாவின் போக்கு, அவர் வீரமணியின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர் அடித்து முடமாக்கப்பட்டது, சேஷன் மீது நடந்தத் தாக்குதல் முயற்சி என்று எத்தனையோ காரணங்களால் ஜெயலலிதாவுக்கு ஒரு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைக்கத் தொடங்கினர். (இதில் ஒரு ஒழுங்கைக் காணலாம். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே ரஜினி தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தும் ஜெயலலிதா "நல்ல பிள்ளையாக" இருந்த வரையில் அவர் ஒரு அரசியல் சக்தியாக எவராலும் முன்வைக்கப்படவில்லை. அதேபோல தனக்கு அரசியலில் நுழையும் நோக்கம் உண்டு என்பதை விஜய்காந்த் தனது செயல்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக உணர்த்தி வந்தும் 2004-ம் ஆண்டு தேர்தலில் ரஜினியின் அரசியல் கனவுகளுக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் சங்கு ஊதப்படும் வரை அவர் ஆதரிக்கப்படவில்லை. ரஜினி மீது இன்னும் நம்பிக்கை இழக்காத சிலர் விஜயகாந்தை ஆதரிக்கத் தொடங்கவில்லை என்பதையும் கவனிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு குதிரை மீது தான் சவாரி.)<br /><br />அந்நாட்களில் ரஜினியை எல்லாம் வல்லவராக, தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றவராக, நினைத்தால் அடுத்த தேர்தலில் முதல்வராகிவிடக்கூடிய ஆற்றல் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்து வந்தன. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவின் பெரும் வெற்றிக்கு ரஜினியின் ஐந்து நிமிட தொலைக்காட்சி பிரசாரம் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது. அந்த தேர்தலில் 'ரஜினி அலை' வீசியதாக பலர் திரும்பத்திரும்ப எழுதிவந்தார்கள். நல்லவேளையாக ரஜினியின் உண்மையான செல்வாக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது.<br /><br />தொண்ணூறுகளில் ரஜினிக்கு உருவாக்கப்பட்டிருந்த புனிதபிம்பம் இன்று அப்துல்கலாமுக்கு இருக்கும் புனிதபிம்பத்துக்கு சற்றும் குறைந்ததல்ல. "மகாத்மாவின் மறுபிறப்பே" என்று ரஜினியை விளிக்கும் சுவரொட்டிகளை பார்த்த நினைவிருக்கிறது. இந்திய ஊடகங்கள் ஒருவரை புனிதபிம்பமாக சித்தரிக்கின்றன என்றால் அவர் வறுமை, அடிப்படை சுகாதாரமின்மை, சாதிக் கொடுமைகள் போன்றப் பிரச்சனைகளைக் குறித்து மறந்தும் கூட அக்கறை கொள்ளாதவராகவும் அதே நேரத்தில் இந்தியாவை வல்லரசாக்குதல், கங்கையையும் காவிரியையும் இணைத்தல், சந்திரனில் இறங்குதல் மற்றும் இன்னபிற கனவுகளை சர்வரோக நிவாரணியாக விநியோகிப்பவராகவும் இருப்பார் என்பதை சொல்லவேண்டியதில்லை. ஆன்மீகம், தத்துவம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவராகவும், மதத்துறவிகளிடம் உபதேசம் பெறுபவராகவும், அக்கம்பக்கம் பார்க்காமல் ஆகாயப் பார்வைப் பார்ப்பவராகவும் இருந்தால் இன்னும் நல்லது. இந்த தகுதிகள் பெரும்பாலும் அமையப்பெற்ற ரஜினி புனிதபிம்பமாக மாறியது இயல்பானதே.<br /><br />ரஜினிக்கு சமூகப் பார்வை என்று ஒன்று இருக்குமானால் அது பிற்போக்கானது என்பதில் ஐயமில்லை. படிப்பறிவோ, உலக அறிவோ இல்லாத லட்சக்கணக்கானவர்கள் தன்னை ஒரு ஆதர்சமாக காண்பதை அறிந்திருந்தும் "எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்போம்" போன்ற நிலபிரபுத்துவ துதிபாடல்களை தன் படங்களில் அனுமதித்தவர் அவர். "தைரியலட்சுமி"யிடம் நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களைத் தன் படங்களில் தொடர்ந்து பேசி வந்தவர். பொதுப் பிரச்சனைகளில் அவர் அக்கறை வெளிப்படுத்தியதெல்லாம் தானோ தனது நண்பர்களோ (மணிரத்தினம், ராஜ்குமார்..) பாதிக்கப்பட்டபோது மட்டுமே. முப்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தெனாலி படம் பார்த்த பிறகு தான் "சிலோன் பிரச்சனை"யின் தீவிரம் புரிந்தது என்று சொல்லும் அளவிற்கே அரசியல் அறிவு உள்ள ஒருவரைத் தான் தமிழக மக்களை உய்விக்க வந்தவராக ஊடகங்கள் கொண்டாடின. அரசியலில் தான் இப்படி அரிச்சுவடி தெரியாமல் இருக்கிறார் என்றில்லை, இத்தனை ஆண்டுகளாக ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டும் ஆன்மீகம் குறித்த அவரது புரிதல் ஒரு சராசரி பாமர பக்தனிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. ("உலகில் பாவிகள் அதிகரித்ததால்" தான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன என்று அறிக்கை வெளியிட்டதை இங்கே சொல்லலாம்.)<br /><br />அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரிக்கப்பட்ட ரஜினியிடம் எம்.ஜி.ஆரிடம் இருந்த சில திறமைகளும் குணங்களும் அறவே கிடையாது. சிறுவயதிலேயே தமிழகத்துக்கு வந்து நாடகக்குழுவுடன் ஊர்ஊராக சுற்றித்திருந்து பலதரப்பட்டத் தமிழர்களுடன் பழகிய எம்.ஜி.ஆரைப் போலல்லாது ரஜினி தமிழகத்தின் கிராமப்புற, சிறுநகர வாழ்வு குறித்து நேரடியாக அறியாதவர். மக்கள் கூட்டத்திற்கிடையே திளைப்பதும், கிழவிகளைக் கட்டிப்பிடிப்பதும், குழந்தைகளை முத்தமிடுவதும் எம்.ஜி.ஆருக்கு இயல்பாகவே வந்தது. ரஜினியோ தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க மறுப்பவர். முக்கியமாக, தன்னை நம்பி வருபவர்களுக்கு தாராளமாக உதவிகள் செய்து அவர்களது நன்றியையும் விசுவாசத்தையும் சம்பாதிக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. ரஜினி தனக்கு இத்தகைய ஒரு வாழ்வை அளித்த திரைத்துறைக்குக் கூட எதுவும் செய்ததில்லை. கமலஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் திரைத்துறையில் ஈட்டிய பணத்தையெல்லாம் நல்ல படம் என்றுத் தாங்கள் கருதுவதை எடுக்க அந்த துறையிலேயே மறுபடியும் இடுகின்றனர். ஆனால் ரஜினி தமிழ் திரைத்துறையை அவ்வப்போது வந்து பணம் அள்ளிச்செல்லும் ஒரு களஞ்சியமாக பயன்படுத்துகிறாரே தவிர அதன் மேம்பாட்டுக்கு எதுவும் செய்ததில்லை. தன்னைக் கடுமையாக விமரிசித்த சிலருக்கு பண உதவியையோ அல்லது நடிப்பதற்கான வாய்ப்பையோ வழங்கி அவர்களை ஊடகங்களில் தன்னைப் புகழ வைத்தது தான் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு அவர் செய்த ஆகப்பெரிய உதவியாகத் தெரிகிறது. மொத்தத்தில், ஒரு அரசியல் தலைவராக, "அடுத்த முதல்வராக" வரவிரும்பும் ஒரு மனிதரிடம் இருக்கவேண்டிய குறைந்தப்பட்ச சமூக அக்கறையைக் கூட ரஜினி வெளிப்படுத்தியதில்லை என்பதே உண்மை.<br /><br />*****<br /><br />அண்மைக்கால தமிழ் திரைப்படங்களின் அரசியல் குறித்த எந்தவொரு விவாதத்திலும் சங்கரின் படங்களைக் குறித்துப் பேசுவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக "சமூகப் பிரச்சனைகளை" பேசுவதாகச் சொல்லப்படும் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் ஆகிய நான்கு படங்களைக் குறித்து. உண்மையில் இந்த நான்கு மொந்தைகளிலும் ஒரேவகையான கள் தான் இருக்கிறது. இந்த படங்களில் முன்வைக்கப்படும் அரசியலும் ஒன்றுதான். அந்தக்காலத்தில் எல்லாமே நன்றாக இருந்தது; தகுதி இல்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழகத்தில் ஒலிக்கும் தினமலர்/துக்ளக் வாசகர்களுக்கு நன்கு பழக்கமான வாதத்தை தான் சங்கரின் படங்கள் பரப்புகின்றன.<br /><br />இந்த நான்கு படங்களிலும் ஊழலையும் மற்ற சமூக சீர்கேடுகளையும் எதிர்த்து போராடும் கதாநாயகன் என்ற பொதுவான அம்சம் உண்டு. அதைக் குறித்து ஏதும் பிரச்சனையில்லை. ஆனால் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் அடையாளங்களும் அவனால் எதிர்க்கப்படும் ஊழல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் அளிக்கப்படும் அடையாளங்களையும் கவனித்தால் சங்கர் சொல்லவருவது என்ன என்பது புரியும். "தர்ம-அதர்ம" யுத்தங்களைப் பற்றிய புராணப் படங்களில் இந்த அடையாளங்கள் வெளிப்படையாக இருக்கும். வெள்ளைத்தோல் நாயகனின் முகத்தில் தேஜஸ் பெருகி வழியும். எதிர்த்து நிற்கும் அசுரனின் முகத்தில் லேசான கரிப்பூச்சும், சில நேரங்களில் தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கும். இருபத்தோராம் நூற்றாண்டின் "சமூகப் பிரச்சனைகளைப்" பேசும் படங்களில் அப்படிப்பட்ட வெளிப்படையான அடையாளங்களை அளிக்கமுடியாது என்பதால் சங்கர் தன் படங்களில் வேறு வழிகளில் கூடியமட்டும் வெளிப்படையான அடையாளங்களை நாயகனுக்கும் அவனது எதிரிகளுக்கும் அளிக்கிறார்.<br /><br />அவரது முதல்படமான ஜென்டில்மேனில் தன் தாயின் சாவுக்கு காரணமான அரசியல்வாதியை பழிவாங்க ஒருவித மிருக ஓலத்துடன் அரிவாளைத் தூக்கிக்கொண்டுப் புறப்படும் கதாநாயகனை நம்பியார் பாத்திரம் தடுத்து அவனுக்கு பொறுமையை போதித்து, பூணூல் அணிவித்து, அக்ரகார வாழ்வை அறிமுகப்படுத்திய பிறகே அவன் புத்திசாலித்தனமாக தன் போராட்டத்தை மேற்கொள்கிறான். இந்தியன் படத்தின் நாயகன் 'அந்த'காலத்தை பிரதிநிதிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகி. முதல்வன், படித்த டை கட்டிய இளைஞன் அதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்க்கும் மற்றொரு நடுத்தர வர்க்கக் கனவு. அந்நியனில் கதாநாயகன் குடுமி, நாமம் போன்ற புற அடையாளங்களைக் கொண்ட அக்ரகாரத்து அம்பி. இந்த நாயகர்களால் பழிவாங்கப்படும் வில்லன்களை ஆராய்ந்தால் அவர்களது தோற்றம், மொழி ஆகியவற்றின் மூலம் வேறுவிதமான அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை உணரலாம். ஜெண்டில்மேனில் வேட்டியைத் தொடைக்குமேல் தூக்கிக்கொண்டு கொச்சை மொழியில் பேசும் அரசியல்வாதியையோ, அந்நியனால் கொல்லப்படுபவர்களையோ மனதில் கொண்டுவந்துப் பார்த்தால் இது புரியும். இந்தியனில் தியாகியின் மகன் தவறு செய்வதாகக் காட்டப்பட்டாலும் அவன் நேர்மையாக முன்னேறுவதற்கான அனைத்து வழிகளையும் சமூகம் அடைத்துவிட்டதன் காரணமாகவே அவன் அப்படி செய்வதாகவும், இயல்பாகவே நேர்மையானவனான அவன் கையூட்டு வாங்கத் தயங்கும் போது உடனிருக்கும் கவுண்டமணி பாத்திரம் அவனது மனதை மாற்றுவதாகவும் காட்டப்பட்டிருக்கும்.<br /><br />சங்கரின் இந்த படங்களில் சட்டத்துக்கும் தர்மத்துக்கும் கீழ்படிந்து நேர்மையாக வாழும் அப்பாவிப் பார்ப்பனர்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்படுவது / அவமானப்படுத்தப்படுவது போன்றக் காட்சிகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். ஜென்டில்மேன் படத்தில் திறமை இருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் முறுக்கு விற்க அனுப்பப்படும் பார்ப்பன இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களின் மனதை உருக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும். அதே படத்தில் கதாநாயகன் வசிக்கும் அக்ரகாரச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத தோற்றத்தையும் பேச்சுவழக்கையும் கொண்டிருக்கும் கவுண்டமணி பாத்திரம் எதிர்த்துப் பேசக்கூடத் தெம்பில்லாத வயோதிக பார்ப்பனர்களை மரியாதைக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தும் காட்சிகள் பல இடங்களில் வரும். இந்தியன் படத்தில் கையூட்டுக் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காத போக்குவரத்து அலுவலகத்தில் நேர்மையான முறையில் உரிமம் பெற முயலும் மைலாப்பூர் 'ஐ-வில்-ரைட்-டு-தி-ஹிண்டு' பார்த்தசாரதி கேலிசெய்யப்பட்டு அலைக்கழிக்கப்படும் காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு காட்சி அந்நியன் படத்தில் இருக்கிறது. தோற்றம், மொழி, உடை என்று அனைத்து வகையிலும் நுட்பமாக அடையாளம் காட்டப்படிருக்கும் சார்லி பாத்திரம் அனைத்து சாலை விதிகளையும் கடைபிடித்து வண்டியோட்டி வரும் அம்பியின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு அதைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் போகும் காட்சி தான் அது. (என்னக் காரணத்தாலோ சார்லி அந்நியனால் கொல்லப்படும் காட்சி விரிவாகக் காட்டப்படவில்லை.) "நான் தயிர்சாதம் சாப்பிடறவன். வலிக்குது" என்று அம்பி அடிபட்டு அலறும் காட்சியையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.<br /><br />ஏதோ ஒரு படத்தில் மட்டும் இப்படிப்பட்டக் காட்சிகள் இடம்பெற்றால் அது தற்செயலானது எனலாம். ஆனால் ஒவ்வொரு படத்திலும் இது தொடரும்போது இயக்குநரின் நோக்கத்தைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தற்போதைய நிலைமை 1930-களில் இருந்த யூதர்களின் நிலைமையை மிகவும் ஒத்திருக்கிறது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் போன்றவர்கள் செய்துவரும் <a href="http://intellibriefs.blogspot.com/2005/04/we-are-like-jews.html" target="_blank">பிரச்சாரத்தை</a> தான் சங்கர் தன் படங்களில் செய்கிறார். இத்தகைய படங்கள் நடுத்தர வர்க்கத்தின் பேராதரவுடன் பெரும் வெற்றி பெறுவது எதிர்பார்க்கத்தக்கதே. இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எதுவும் தெரியாத, அப்படித் தெரிந்தாலும் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளாதக் கூட்டத்தை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதற்குத் தான் இருக்கவே இருக்கிறது ரண்டக்க ரண்டக்க பாட்டும் ஜலபுலஜங்ஸ் காட்சிகளும்.Unknownnoreply@blogger.com48tag:blogger.com,1999:blog-21745319.post-45640054459828296872007-06-01T19:28:00.000+08:002007-06-04T18:48:07.130+08:00மலையாளப் பதிவுகள் ஒரே இடத்தில், தமிழில்அண்மைக்காலமாக வாசித்த தமிழ்ப்பதிவுகள் பெரும்பாலும் தமிழகத்தின் வெயிலையும் வறட்சியையும் நினைவூட்டும் விதமாக அமைந்திருந்ததால் தைவத்தின்றெ ஸ்வந்தம் நாட்டில் தணுத்த புழகளெயும் காயல்களெயும் ஒந்நு கண்டு வராமெந்நு தீர்மானிச்சு. வாயனக்கார் பேடிக்கண்டா. தமிழ்த்தாய்க்கு வீண்டும் ஸ்வாகதம். இரண்டு மாதங்களுக்கு முன் நான் உருவாக்கிய <a href="http://transliterator.blogspot.com/" target="_blank">இனியன்</a> கருவியைப் பயன்படுத்தி மலையாளப் பதிவுகளைத் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றி வாசிக்கத் தொடங்கினேன். இந்த முறையைக் கையாண்டு மலையாளப் பதிவுகளை வாசிப்பதில் உள்ள ஒரு அடிப்படை சிக்கலை விரைவில் உணர்ந்தேன். ஒவ்வொருப் பதிவிலிருந்தும் இடுகைகளை வெட்டி எடுத்து இனியன் பக்கத்தில் ஒட்டி தமிழுக்கு மாற்றிய பின்பே அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றும் அதைப் வாசிப்பதா வேண்டாமா என்றும் ஒரு முடிவுக்கு வர முடியும். இப்படி ஒவ்வொரு இடுகையாக வெட்டி ஒட்டி வாசிப்பது விரைவிலேயே சோர்வடைய வைத்துவிடும்.<br /><br />தமிழ்மணம், தேன்கூடு போல மலையாளப் பதிவுகளுக்கு என்று ஒரு தமிழ் திரட்டி இருந்தால் - அதாவது மலையாள இடுகைகளின் தலைப்புகளும் எழுதியவர்களது பெயர்களும் தமிழ் எழுத்துக்களில் ஒரே பக்கத்தில் தானியக்க முறையில் தோன்றினால் - எப்படி இருக்கும்? நன்றாகத் தான் இருக்கும். இன்னும் ஒருபடி மேலே போய் அதே பக்கத்திலேயே முழு இடுகையையும் - படங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்து - தமிழிலேயே வாசிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அடிபொளியாக இருக்கும்.<br /><br />தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது தேய்பதமா என்று தெரியவில்லை. வேலையில் இறங்கினேன். சில வாரங்கள் செலவிட்டப் பின் மேலே சொல்லியிருப்பதைப் போன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்க முடிந்தது. தனி வலைத்தளம், வழங்கி எல்லாம் இல்லாமல் முற்றிலும் கூகிள்/பிளாகர் நிறுவனம் அளிக்கும் இலவச சேவைகளைப் பயன்படுத்தியே இதை உருவாக்கியிருக்கிறேன். இது போன்ற முயற்சிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கற்ற வித்தைகளைச் சுருக்கமாக செப்பிவிடுகிறேன்.<br /><br />இதுபோன்ற ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கத் தேவையான நுட்பங்கள் மூன்று. அவையாவன:<br /><br />1. திரட்டுதல் (Aggregation): நூறுக்கு மேற்பட்ட மலையாளப் பதிவுகளை கூகிள் ரீடர் மூலம் திரட்டுகிறேன். என் பதிவின் இடப்பக்கம் வருவது போல நமக்கு விருப்பமானப் பதிவுகளை மட்டும் கூகிள் ரீடர் மூலம் திரட்டி அவற்றை வலைப்பக்கங்களில் தானியக்க முறையில் பகிர்ந்துக்கொள்வது எப்படி என்று சில மாதங்களுக்கு முன்பு <a href="http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html#comment-1269361478709748607" target="_blank">இங்கு</a> எழுதியிருந்தேன். இப்படி திரட்டப்படும் பதிவுகளில் ஆக அண்மையில் எழுதப்பட்ட இடுகைகளை உள்ளடக்கிய ஒரு செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெறமுடியும்.<br /><br />நுட்பச் சிக்கல்: தற்போது கூகிள் ரீடர் அளிக்கும் செய்தியோடையில் ஆக அண்மைய இருபது இடுகைகள் மட்டுமே உள்ளன. கொஞ்சம் முயன்றால் இந்த உச்சவரம்பை உடைத்துவிடலாம். ஒரு வழி: பதிவுகளைப் பல தொகுதிகளாகப் பிரித்துத் திரட்டுவதன் மூலம் ஒவ்வொருத் தொகுதியிலிருந்தும் இருபது இடுகைகளை எடுக்கலாம். நான் இதை இன்னும் செய்யவில்லை. ஏனென்றால் தமிழ்ப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு நாளும் எழுதப்படும் மலையாள இடுகைகளின் எண்ணிக்கைக் குறைவே. மொக்கையாளர்களை அடையாளம் கண்டு திரட்டியிலிருந்து நீக்கிவிட்டால் இருபது தரமான இடுகைகள் கிடைப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.<br /><br />2. செய்தியோடைப் படித்தல் (Feed reading): கூகிள் ரீடர் தளத்திலிருந்து செய்தியோடையை XML கோப்பு வடிவில் பெற்று அதைப் பிரித்து மேய்வது எப்படி என்று இணையத்தில் தேடியபோது அஜாக்ஸ் (AJAX) என்ற புதிய நுட்பத்தைக் குறித்தும் அதன் பிரணவ மந்திரமான XMLHttpRequest என்பதைக் குறித்தும் அறிந்துக்கொண்டேன். விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. தேடுங்கள். கிடைக்கும்.<br /><br />நுட்பச் சிக்கல்: இந்த XMLHttpRequest-ஐ பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் செயல்படும் Javascript மற்றொரு தளத்திலிருந்து தரவுகளைப் பெறமுடியும். (நான் பிளாக்ஸ்பாட் தளத்தில் ஓடும் Javascript மூலம் கூகிள் ரீடர் தளத்திலிருந்து தரவுகளைப் பெறுகிறேன்.) இந்த வசதியை "தீய சக்திகள்" தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் ஃபயர்ஃபாக்ஸ் உலாவி இதை அனுமதிப்பதில்லை. எனவே இந்த வலைப்பக்கம் ஃபயர்ஃபாக்ஸில் வேலை செய்யாது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தலாம். ஆனால் அதன் Internet Options பகுதியில் ஒரு தேர்வை செய்துக்கொள்ளவேண்டும். இந்த தொல்லைகளைப் போக்க அஜாக்ஸில் ஒரு வழி இருப்பதாக அண்மையில் அறிந்தேன். நேரம் கிடைக்கும்போது அதை செயல்படுத்தலாம் என்றிருக்கிறேன்.<br /><br /><span style="color:#ff0000;">[பிற்சேர்க்கை - ஜூன் 4, 2007: இந்த பிரச்சனையை சரிசெய்துவிட்டேன். அதற்கான <a href="http://kaiman-alavu.blogspot.com/2007/06/blog-post.html#comment-6565230334882833704">வழியைச்</a> சுட்டிக்காட்டிய ஆனந்துக்கு நன்றி. இப்போது எல்லா உலாவிகளையும் பயன்படுத்தலாம். சிறப்புத் தேர்வு எதுவும் செய்யத் தேவையில்லை.]<br /></span><br />3. எழுத்துப்பெயர்த்தல் (Transliteration): இதைப் பற்றி ஏற்கனவே விரிவாக <a href="http://kaiman-alavu.blogspot.com/2007/03/blog-post.html" target="_blank">விளக்கியிருக்கிறேன்.</a><br /><br />நுட்பச் சிக்கல்: மலையாள எழுத்துமுறை கடந்த பல ஆண்டுகளாக சீர்திருத்தம் அல்லது எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் தொடர்ந்து சின்னாபின்னமாக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் விளைவாக இணைய மலையாளிகளிடையேயும் மலையாளத் தட்டச்சு செயலிகளிடையேயும் சிலவற்றில் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எடுத்துக்காட்டாக 'எனக்கு' என்பதைக் குறிக்கும் 'எனிக்கு' என்னும் சொல்லில் உள்ள 'கு' முழுமையான உகரம் அல்ல. அந்த சொல்லின் உண்மையான உச்சரிப்பு 'எனிக்' என்பதற்கும் 'எனிக்கு' என்பதற்கும் இடையில் எங்கோ உள்ளது. இதை சிலர் 'எனிக்' என்றே எழுதுகிறார்கள். சிலர் 'எனிக்கு' என்று எழுதி ஒரு சிறப்புக் குறியின் மூலம் அது குற்றியலுகரம் என்று உணர்த்துகிறார்கள். இதன் காரணமாகத் தமிழில் எழுத்துப் பெயர்த்து வாசிக்கும் போது சிறிது குழப்பம் நிலவும். எனவே தமிழில் வாசிக்கையில் மெய்யெழுத்தில் முடியும் ஒரு சொல் விளங்கவில்லையென்றால் அதனுடன் ஒரு உகரத்தைச் சேர்த்து வாசிக்கவேண்டும். (எ.கா: எந்த் -> எந்து)<br /><br />இந்த பக்கத்தை சோதிக்க / பயன்படுத்த <a href="http://malaiyaruvi.blogspot.com/" target="_blank">இங்கே</a> சுட்டுங்கள். மலையாளத்தில் ஆர்வம் உள்ள நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.Unknownnoreply@blogger.com19tag:blogger.com,1999:blog-21745319.post-22086835261131763252007-05-14T02:20:00.000+08:002007-05-14T02:24:34.996+08:00எல்லாம் நிறைவேறிற்றுகடந்த ஒரு வாரமாக எழுதியதைப் பார்க்கும்போது வழக்கமாக நான் என் பதிவுகளுக்கு அளிக்கும் கவனத்தை சில பதிவுகளுக்கு அளிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக இருக்குமாறு ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டுக்கொண்டபோதும் எல்லாவற்றையும் கடைசி நேரத்துக்குத் ஒத்திப் போடும் குணத்தின் காரணமாக நட்சத்திர வாரத்துக்கான ஆக்கங்களில் இரு இடுகைகளை மட்டுமே முன்பே எழுதி வைத்திருந்தேன். மற்றவற்றை ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டு எழுதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பணிச்சுமை திடீரென்று அதிகரித்துவிட்டதாலும், நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகையாலும் நினைத்த அளவுக்கு எழுதமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக ஈழம், கேரளம் மற்றும் குமரி மாவட்டம் ஆகியவற்றுக்கு இடையே மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக அடிப்படையில் இருக்கும் எண்ணற்ற ஒற்றுமைகளைக் குறித்து ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன். எழுதமுடியாமல் போனதும் ஒருவகையில் நல்லது தான். இப்போது எழுதியிருந்தால் நேரமின்மைக் காரணமாக மேலோட்டமாக எழுதியிருக்கக் கூடும். பிறகு விரிவாக எழுதுகிறேன். <br /><br />சென்ற ஆண்டு மனைவியும் குழந்தையும் சில வாரங்கள் ஊருக்குப் போயிருந்தபோது என் நாட்கள் நீளமாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். கிடைத்த நேரம் அனைத்தையும் புத்தகங்கள் (பெரும்பாலும் நாவல்கள்) வாசிப்பதிலேயே செலவிட்டேன். அவற்றை வாசிக்கும் போது எழுந்த எண்ணங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே என்னைப் பதிவு எழுதத் தூண்டியது. தமிழ்மணத்தில் கணக்குக் காட்டுவதற்காக சில இலகுவான இடுகைகளை இட்டுவிட்டு, ஜெயமோகனது எழுத்தைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு பாகங்களாக எழுதினேன். இவை சொல்லிக் கொள்ளும்படியான வரவேற்பைப் பெறும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. <br /><br />அண்மையில் பாஸ்டன் பாலா ஒரு பதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டது போல நான் என் பதிவின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக சந்தைப்படுத்தல் எதையும் செய்வதில்லை. ஆரம்பத்தில் பதிவு எழுதுவதை ஒரு நாட்குறிப்பு எழுதுவதைப் போல தான் பார்த்தேன். தமிழ்மணத்தின் மறுமொழி நிலவர சேவையைக் கூட சுமார் நான்கு மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் இடுகையை தமிழ்மணத்தில் சேர்த்த சில நிமிடங்களிலேயே அது காணாமல் போய்விடும். தமிழ்மணம் மூலமாக இருபத்தைந்து முப்பது பேர் தான் வந்துப் படிக்கிறார்கள் என்று Sitemeter சொன்னது. அந்நாட்களில் என் பெரும்பாலான இடுகைகள் கில்லி தளத்தில் பரிந்துரைக்கப்பட்டதால் அங்கிருந்தும் ஒரு பத்து இருபது பேர் வருவார்கள். ஆனால் இப்படி வந்தவர்களில் பலர் நான் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வலையுலகில் முக்கியமானவர்களாகவும், எழுத்துத்திறனுக்காக அறியப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.<br /><br />எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே மதி கந்தசாமி தன் பதிவில் என் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டியிருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் 2006-ன் சிறந்தப் பதிவுகள் என்று அவர் இட்டிருந்தப் பட்டியலிலும் என் பதிவைக் குறிப்பிட்டிருந்தார். பழைய பதிவர், புதிய பதிவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் தினமும் மிகவும் அதிகமான இடுகைகளைப் படிப்பவர் யார் என்று ஒரு போட்டி வைத்தால் மதிக்கு கடுமையான போட்டியை அளிக்கக்கூடியவர் பாஸ்டன் பாலா தான் என்று நினைக்கிறேன். அவரும் 2006-ன் சிறந்தப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவைப் பட்டியலிட்டிருந்தார். இண்டிபிளாகீஸ் நடத்திய தேர்தலிலும் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் பதிவுகளில் ஒன்றாக என் பதிவு பரிந்துரைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். <br /><br />இதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறித்து நான் கொண்டிருந்த மெத்தனமான போக்கை கொஞ்சம் மாற்றியது. இத்தனை பேர் - அதுவும் தமிழ் இணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் - நம் எழுத்தைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டிருக்கையில் தொடர்ந்து எழுதுவது தான் முறை என்று தோன்றியது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிக இடைவெளி விடாமல் அவ்வப்போது எழுத முயற்சித்து வருகிறேன். எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை - மொழிகள், வரலாறு, சமூகவியல், புத்தக வாசிப்பு - குறித்து இனிவரும் நாட்களில் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். ஆனாலும் பணியிட அழுத்தங்களும் குடும்பப் பொறுப்புகளும் எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்று தெரியவில்லை.<br /><br />இந்த நட்சத்திர வாரத்தின் போதும் அதற்கு முன்பும் என் இடுகைகளைப் பொறுமையாகப் படித்துக் கருத்து தெரிவித்தவர்கள், உற்சாகப்படுத்தியவர்கள், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-21745319.post-82505787726843289382007-05-12T18:39:00.000+08:002007-05-12T18:41:31.388+08:00தமிழ் வழியே மலையாளம்மலையாள மொழி ஓரளவுக்கு நன்றாகப் புரிகிற, ஆனால் மலையாள எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொள்வது எளிதானதல்ல என்பது அந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழைவிட மிக அதிகமான மெய்யெழுத்துக்கள், அந்த மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று சேரும்போது தோன்றும் சீரற்ற வடிவம் கொண்ட நூற்றுக்கணக்கானக் கூட்டெழுத்துக்கள் என்று எல்லாம் சேர்ந்து தலை சுற்ற வைத்துவிடும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே மலையாள எழுத்துக்களை வசப்படுத்த முடியும். அப்படி முடியாதவர்களுக்காக அண்மையில் நான் ஒரு <a href="http://transliterator.blogspot.com/" target="_blank"> கருவியை</a> உருவாக்கினேன். அதன் மூலம் இணையத்தில் உள்ள மலையாள ஆக்கங்களை தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றிப் படிக்கலாம். <br /><br />இணையத்தில்/கணினியில் ஏற்றப்படாத சிறந்த மலையாளப் படைப்புகளை எப்படிப் படிப்பது? மொழிபெயர்ப்புகள் மூலம் படிப்பது ஒரு வழி. ஆனால் மலையாள மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு அறிந்த ஒருவர் மலையாளத்தின் சிறந்த நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படித்தால் அது பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். தகழியின் செம்மீன் நாவலை சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் படித்தபோது மிகவும் செயற்கையாக உணர்ந்து இனி எந்த மலையாள நாவலின் மொழிபெயர்ப்பையும் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். இது ஒருவித உளவியல் சிக்கல். தால்ஸ்தாயையும் தாஸ்தாவ்ஸ்கியையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும் போது நான் எந்தக் குறையையும் உணர்வதில்லை. ரஷ்ய மொழியையும் கலாச்சாரத்தையும் அறியாத என்னால் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை உணரமுடியாததே காரணம். ஆனால் மலையாள நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது அப்படியல்ல. தில்லானா மோகனாம்பாள் படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பது போல இருக்கும்.<br /><br />வேறு வழி? என்னை மாதிரி கிறுக்கு சிந்தனையுடைய யாராவது பதிப்பகம் நடத்திக்கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். சிறந்த மலையாள நாவல்களை அப்படியே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிட்டு வெளியிடுங்கள். கடினமான சொற்களுக்கு மட்டும் கீழே அடிக்குறிப்பு இட்டு பொருள் தரலாம். இந்தி போன்ற மொழிகளை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலையாள மொழியை எழுதுவதற்கு அவை போதும். மணிக்கொடி காலத்து மணிப்பிரவாள நடையைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதற்கும் மலையாளத்தை எழுதுவதற்கும் அதிக வேறுபாடில்லை. மலையாள மொழியோடு எந்த அறிமுகமும் இல்லாதத் தமிழர்கள் கூட சிறிது முயன்றால் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்ட மலையாளப் படைப்புகளை வாசித்துப் புரிந்துக்கொள்ளலாம். அதற்கு உதவக்கூடிய சிலத் தகவல்களை கீழே தருகிறேன்.<br /><br />ஒரு மொழி மற்றொரு மொழியின் கலப்பின் காரணமாக உருமாறும் போது பெரும்பாலும் அதன் அடிப்படைச் சொற்கள் அப்படியே தான் இருக்கும். மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் கலந்திருந்தாலும் மிகப் பெரும்பாலான அடிப்படைச் சொற்கள் தமிழ் சொற்களே. சில எடுத்துக்காட்டுகளை கீழே தந்திருக்கிறேன்.<br /><br />உறுப்புகள்: தல, கண்ணு, மூக்கு, நாக்கு, வாய், பல்லு, கழுத்து, நெஞ்சு, கை, காலு.<br /><br />வினைகள்: வா, போ, நட, ஓடு, குடி, குளி, அடி, கடி, கொடு.<br /><br />இடப்பெயர்கள்/சுட்டுப்பெயர்கள்: ஞான், நீ, அவன், அவள், அவர், அது, இது, எது.<br /><br />பருவங்கள்: மழ, வெயில், காற்று, மின்னல், இடி.<br /><br />திசைகள்: வடக்கு, தெக்கு, கிழக்கு, இடத்து, வலத்து.<br /><br />எண்கள்: கால், அர, முக்கால், ஒந்நு, ரண்டு, மூந்நு, நாலு, அஞ்சு, ஆறு...<br /><br />நிறங்கள்: கறுப்பு, வெளுப்பு, நீலம், சுவப்பு, பச்ச, மஞ்ஞ.<br /><br />உலோகங்கள்: இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, வெங்கலம்.<br /><br />கிழமைகள்: ஞாயர், திங்கள், சொவ்வ, புதன், வ்யாழம், வெள்ளி, சனி<br /><br />விலங்குகள்/பறவைகள்: ஆன, பசு, எரும, ஆடு, பன்னி, மயில், குயில், காக்க, கோழி. <br /><br />இன்றைய தமிழ் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால் எழுத்துத்தமிழில் இடம்பெறும் ஏராளமான சொற்கள் மலையாளப் பேச்சு வழக்கில் வழங்கி வருகின்றன. கீழே தமிழ் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சில சொற்களையும் அவற்றுக்கான மலையாளச் சொற்களையும் எடுத்துக்காட்டுகளாகத் தருகிறேன்.<br /><br />காது - செவி, உள்ளே - அகத்து, வெளியே - புறத்து, பக்கத்தில் - அரிகில், கூப்பிடு - விளி, வெட்கம் - நாணம், வேலை - பணி, சண்டை - பிணக்கு, பார் - நோக்கு, எப்படி - எங்ஙனெ (எங்ஙனம்)<br /><br />வேறு சில அடிப்படைச் சொற்கள் தமிழல்லாதது போல் தோன்றினாலும், அவையும் தமிழ் சொற்களிலிருந்து தோன்றியவை என்பதை பழந்தமிழ் சொற்களோடு அறிமுகம் உள்ள ஒருவரால் கண்டறியமுடியும். மலையாளத்தில் நேற்று என்பதைக் குறிக்கும் இன்னலெ என்ற சொல் அதே பொருளுடைய பழந்தமிழ் சொல்லான நென்னல் என்பதன் திரிபு என்பதை ஒரு பழைய பதிவில் எழுதியிருந்தேன். இன்னொரு எடுத்துக்காட்டு தருவதென்றால் மற்ற மூன்று திசைகளையும் குறிக்க மலையாளத்தில் கிழக்கு, வடக்கு, தெக்கு என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் போது மேற்கு என்பதை மட்டும் "படிஞ்ஞாறு" என்று சொல்கிறார்கள். முதல் பார்வையில் அன்னியமாகத் தெரியும் இந்த சொல் "சூரியன் மறையும் திசை" என்பதைக் குறிக்கும் "படுவான்" என்ற தமிழ் சொல்லுடன் (அகராதியில் இருக்கிறது) தொடர்புடையது. படுஞாயிறு என்பதே படிஞ்ஞாறு என்று ஆகியிருக்கவேண்டும். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஏரியின் கிழக்குப்பகுதியை "எழுவான்கரை" என்றும் மேற்குப்பகுதியை "படுவான்கரை" என்றும் அழைக்கிறார்கள். தெலுங்கில் மேற்கு என்பதைக் குறிக்கும் "படமதி" என்ற சொல் இதனுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன்.<br /><br />தமிழ் சொற்கள் மலையாளத்தில் எப்படித் திரியும் என்பதற்கான விதிகளைப் புரிந்து வைத்திருப்பதும் மலையாளத்தை வாசிக்க உதவும். பெரும்பாலும் தமிழின் வல்லின ஒலிகள் மலையாளத்தில் மென்மையாக ஒலிக்கும். வே. வேங்கடராஜுலு அவர்கள் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலிலிருந்து சில விதிகளை கீழே தருகிறேன்.<br /><br />'ன்ற' ஓலி 'ன்ன' என்று மாறும்: ஒன்று-ஒன்னு, தென்றல்-தென்னல்<br /><br />'ந்த' ஒலி 'ந்ந' என்று மாறும்: வந்து-வந்நு, சந்தனம்-சந்நனம்<br /><br />'ங்க' ஒலி 'ங்ங' என்று மாறும்: மாங்காய்-மாங்ங, நீங்கள்-நிங்ஙள்<br /><br />'ஞ்ச' ஒலி 'ஞ்ஞ' என்று மாறும்: மஞ்சு-மஞ்ஞு, கஞ்சி-கஞ்ஞி<br /><br />'ந்த' ஒலி 'ஞ்ஞு' என்று மாறும்: அறிந்து-அறிஞ்ஞு, தேய்ந்து-தேய்ஞ்ஞு<br /><br />'த்த' ஒலி 'ச்ச' என்று மாறும்: அடித்து-அடிச்சு, பித்தளை-பிச்சள<br /><br />ஐகாரம் அகரம் ஆகும்: மலை-மல, தலை-தல, வாழை-வாழ<br /><br />எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட மணிப்பிரவாள நடையை விட சற்று அதிகமான அளவுக்கு மலையாளத்தில் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. மணிப்பிரவாள நடையை முழுவதுமாகப் புரிந்துக்கொள்ள முடியாதத் தமிழர்கள் கூட இன்று தமிழில் வழக்கிலிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை மலையாளத்தில் அடையாளம் கண்டு புரிந்துக்கொள்ளமுடியும். (எ.கா: ஸந்தோஷம், ஆனந்தம், ஸ்நேகம், ப்ரேமம், இஷ்டம், விரோதம், தேஹம், திவஸம்..) தமிழில் தமிழ் இலக்கண விதிகளின் படி எழுதப்படும் பல வடமொழிச் சொற்கள் மலையாளத்தில் (மணிப்பிரவாளத்தைப் போல) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எழுதப்படும் என்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். (எ.கா: சுதந்திரம் - ஸ்வதந்திரம், உதாரணம்-உதாஹரணம், அட்சரம்-அக்ஷரம், சிங்கம் - ஸிம்ஹம், சுபாவம் - ஸ்வபாவம்..) அறிமுகமில்லாதவை போல் தோன்றும் பெரும்பாலான வடமொழிச் சொற்களையும் கொஞ்சம் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி முயன்றால் புரிந்துக்கொள்ளமுடியும். எடுத்துக்காட்டாக 'தக்ஷிணேந்திய' என்று ஒரு சொல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் சொற்களின் புணர்ச்சி விதிகளை வைத்து அதை "தக்ஷிணம் + இந்திய" என்று பிரிக்கலாம். தக்ஷிணம் என்னும் சொல் தமிழில் இல்லையென்றாலும் தென்னாடுடைய சிவனை தக்ஷிணாமூர்த்தி என்று சொல்வது நினைவுக்கு வந்தால் 'தக்ஷிணேந்திய' என்பதன் பொருள் 'தென்னிந்திய' என்பது விளங்கும்.Unknownnoreply@blogger.com26tag:blogger.com,1999:blog-21745319.post-87958288051543652902007-05-11T02:40:00.000+08:002007-05-11T02:44:25.202+08:00வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்துஇரண்டு நாட்களுக்கு முன் <a href="http://kaiman-alavu.blogspot.com/2007/05/blog-post_08.html" target="_blank">(திரை)மறைவு அரசியல்</a> என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு விரிவான எதிர்வினையை வெங்கட் தன் பதிவில் <a href="http://domesticatedonion.net/tamil/?p=679" target="_blank">எழுதியிருந்தார்</a> . நான் எழுதியதன் மீது அவர் வைக்கும் முக்கியமான விமரிசனங்கள்:<br /><br />1. என் பார்வை முழுமையாக இல்லை. என் கருத்துடன் முரண்படும் தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன்.<br /><br />2. என்னுடைய கருத்து தவறு என்பதை சில எதிர் உதாரணங்கள் மூலம் காட்டமுடியும்.<br /><br />3. சில நடிகர்கள் அரசியலில் வெல்வதற்கும், வேறு சிலர் தோற்பதற்கும் அவர்களது திறமை அல்லது திறமையின்மை தான் காரணம். ஊடகங்கள் எந்த வகையிலும் காரணமாக முடியாது. ஊடகங்களின் சக்தியை மிகையாகச் சித்தரித்து, அவர்களிடம் இல்லாத தகுதியும் திறமையும் இருப்பதாக சொல்லுவது பேனைப் பெருமாளாக்குவது போல.<br /><br />*****<br /><br />என் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, என் கருத்துடன் முரண்படும் சில தரவுகளைத் தவற விட்டிருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக வெங்கட் சொல்வது கீழே நீலத்தில்.<br /><br /><span style="color:#000066;">"தற்செயலாகவோ, அல்லது தன் கருத்துக்கு வலுசேர்க்கவோ வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதியைத் தவறவிட்டிருக்கிறார். பின்னால் ஒப்புக்கு ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று சொல்லி அவரைக்கூடப் புறனடையாகத்தான் காட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் - மூவரையும் ஒரு அணியில் வைத்து அவர்கள் ஊடகங்களால் ரட்சிக்கப்பட்டு ஜீவித்தவர்கள் என்று சொல்லும்பொழுது அதே திரைப்பின்னணி கொண்ட ஜெயலலிதாவை வேறுவிதமாகக் காட்டியும் கருணாநிதியை முற்றிலும் சுயதகுதிகளாலும் கடின உழைப்பாலும் (அல்லது ஊடகங்களின் சதியைத் தகர்த்தெரிந்து) முன்வந்தவராக உணர்த்தியிருப்பது அவரது பார்வையின் முழுமையின்மையைக் காட்டுகிறது."<br /><br />"தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாததால்தான் இந்தி எதிர்ப்பில் மும்மூர்த்திகளால் தீவிரம் காட்டமுடியாது என்று சொல்லும்பொழுது எதிரிடையாகக் காட்டப்பட்டிருக்கும் கருணாநிதிக்கும் அதே வேற்றுமொழிப் பின்னணியிருப்பது முரணாகத் தோன்றவில்லை?"<br /><br />"அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று ஒரு தொகுப்பான திரை அரசியல் பார்வையைத் தவறவிட்டிருக்கிறார். அப்படியிருந்தால் மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் வைக்கமுடியாது."</span><br /><br />"வீட்டில் தெலுகு பேசும் கருணாநிதி" என்பது எனக்கு செய்தி. குறைந்தபட்சம் நான் பயன்படுத்தியிருந்த 'சொல்லப்படுகிற/அறியப்படுகிற' போன்ற அடவுகளைக் கூட வெங்கட் பயன்படுத்தவில்லை ;-) கருணாநிதி வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதை சர்வ நிச்சயமாகவே சொல்கிறார். இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் ஆகியோரது தாய்மொழி தமிழ் அல்ல என்பது ஊரறிந்த, வெகுஜன ஊடகங்களில் பேசப்பட்ட, அவர்களால் இதுவரை மறுக்கப்படாத விஷயம். ஆனால் கருணாநிதியின் தாய்மொழி தெலுங்கு என்பது அப்படியா? வெங்கட் சில பத்திகள் தாண்டி கன்னடியரையும், மலையாளியையும் நாகரீகமற்ற முறையில் அவர்களது பிறப்புப் பின்னணியை முன்னிருத்தி வசைபாடியவர் கலைஞர் என்கிறார். இப்படிப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்பவர் ஒரு தெலுங்கர் என்றுத் தெரிந்தால் எதிராளிகள் அதைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருப்பார்களா? நாயுடுக்கள் தெலுங்கு பேசுவதற்கான வரலாற்றுக் காரணங்கள் நமக்குத் தெரியும். காவிரிக்கரை இசைவேளாளர்கள் ஏன் தெலுங்குப் பேசப்போகிறார்கள்? (கருணாநிதி தமிழர் அல்ல என்று நிறுவ சிலர் கண்டிப்பாக முனைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களது நம்பகத்தன்மையும் அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதும் முக்கியம். சில வாரங்களுக்கு முன்பு அண்ணாவின் தாயார் பெயர் பங்காரம்மா என்பதை ஆதாரமாகக் காட்டி அவரது பூர்வீகமும் தெலுங்கு தான் என்று திண்ணையில் மலர்மன்னன் எழுதினார். ஆனால் தமிழ்நாட்டவரில் 99 விழுக்காடு பேருக்கு மேல் அண்ணா தமிழர் என்று தான் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்காந்த் விஷயம் அப்படியல்ல.)<br /><br />அடுத்து, ஜெயலலிதாவுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் உண்டு என்று "ஒப்புக்கு" போகிற போக்கில் குறிப்பிட்டதாகச் சொல்வது பற்றி. உண்மையில் எழுபதுகளில் எம்.ஜி.ஆர், எண்பதுகளில் ஜெயலலிதா, தொண்ணூறுகளில் ரஜினி, இப்போது விஜய்காந்த் என்று ஒரு வரிசையை நான் உருவாக்கியிருந்தால் அது என் கருத்துக்கு வலுசேர்க்கத்தானே செய்யும்? பின் ஏன் அவரைப் பட்டியலில் சேர்க்கவில்லை? அந்தக் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு குறைவானது என்று நான் கருதுவது தான் காரணம். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது ஊடகங்களல்ல, எம்.ஜி.ஆர். பத்து ஆண்டுகளாக தன்னுடன் இருந்த இரண்டாம் நிலை தலைவர்களையெல்லாம் விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் புதிதாக வந்த ஜெயலலிதாவைக் கட்சியில் முதன்மைப்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், ஓரிரு வருடங்கள் கடுமையாகப் போராடிய பிறகு, ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்தக் கட்சியை ஜெயலலிதா கைப்பற்றினார். அந்த வகையில் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதால் தான் நான் ஜெயலலிதாவைக் குறித்து அதிகம் பேசவில்லை.<br /><br />அண்ணா, கருணாநிதி ஆகியோரது அரசியலைத் திரை அரசியல் என்று வகைப்படுத்துவது எந்த அளவுக்கு பொருத்தமானது? அப்படியே அவர்களை நடிகர்களுடன் பட்டியலில் சேர்த்தாலும், மாநிலவாதம், இந்தி எதிர்ப்பு போன்றவற்றை ஒரே தட்டில் ஏன் வைக்கமுடியாது? பேஷாக வைக்கலாமே. தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாவும் கருணாநிதியும் இந்தி எதிர்ப்பு, மாநிலவாதம் பேசினார்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த மற்ற இருவரும் அப்படி செய்யவில்லை என்று சொல்ல எவ்வளவு நேரமாகும்?<br /><br />****<br /><br />என்னுடைய கருத்தை தவறு என்று காட்டும் எதிர் உதாரணங்களாக வெங்கட் கூறுவது:<br /><br /><span style="color:#000066;">"ஜெகத்-தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர் இருவரையும் எதிருதாரணமாகக் காட்ட முடியும். தமிழகத்தின் பெரும்பான்மை சாதிகளின் பின்னணி இல்லாமலிருந்தபொழுதும், ஆத்திக சிகாமணிகளாக இருந்தபொழுந்தும் இவர்களை ஊடகம் வளர்த்தெடுக்கவில்லை (அ) ஊடகத்தால் இயலாமற்போயிற்று."</span><br /><br />பாக்கியராஜும், ராஜேந்தரும் எப்படி எதிர் உதாரணம் ஆவார்கள்? அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களா என்றுத் தெரியவில்லை. (சில குறிப்பிட்ட அச்சு ஊடகங்களுக்குத் தமிழ் தேசியவாதத்தைக் குறித்து இருக்கும் அச்சத்தைப் பார்க்கும்போது மேலே வெங்கட் குறிப்பிட்டிருக்கும் இரண்டு 'தகுதிகளை' விட இது முக்கியமான ஒன்று என்றே சொல்லவேண்டும்.) அப்படியே அவர்களுக்கு நான் குறிப்பிட்ட 'தகுதிகள்' அனைத்தும் இருந்தும் ஊடகங்கள் அவர்களை வளர்த்தெடுக்கவில்லை என்று வைத்துக்கொண்டால் கூட தர்க்கப்படி நான் சொன்னது தவறாகாது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களைத் தான் மருத்துவக்கல்லூரிகள் சேர்த்துக்கொள்ளும் என்று நான் சொன்னால், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றும் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படாத சிலரை நீங்கள் "எதிர் உதாரணமாகக்" காட்டமுடியாது. பால் கண்டிப்பாக வெளுத்திருக்கும். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் அல்ல.<br /><br />சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியை ஆதரித்த, இப்போது விஜய்காந்தை ஆதரிக்கும் தினமலர் பாக்கியராஜ் தனிக்கட்சித் தொடங்கியபோது அவரைக் கடுமையாகத் தாக்கியது. "எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற அவரது கட்சிப்பெயரை "எம"முக என்று கிண்டலடிப்பது, அவரை எம நடிகர் என்று குறிப்பிடுவது போன்ற மலிவான நையாண்டிகளை தினமலர்/வாரமலரில் பார்த்த நினைவிருக்கிறது. பாக்கியராஜுக்குக் கிடைக்காத தினமலரின் ஆதரவு விஜய்காந்துக்கு ஏன் கிடைக்கிறது?<br /><br />*****<br /><br />நான் நடிகர்களின் வெற்றித் தோல்விக்கு அவர்களது திறமை அல்லது திறமையின்மையைக் காரணமாக ஏற்க மறுத்து, ஊடகங்களை <b>மட்டுமே</b> காரணமாகச் சொல்வது போல் புரிந்துக்கொண்டு வெங்கட் எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் முட்டாளில்லை. "தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்." என்று எழுதியிருக்கும் போதே ஒன்றுக்கு மேற்பட்டக் காரணங்கள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தானே அர்த்தம்? சில வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்புக்கு அவர்களது தோற்றத்தையும் நிறத்தையும் ஒரு காரணமாக முன்வைத்து வாசந்தி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். அதற்காக அவர்களது மற்றத் தகுதிகளை அவர் மறுக்கிறார் என்றாகிவிடுமா? ஒரு நடிகர் அரசியலில் பெறும் முக்கியத்துவத்துக்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். ஊடக ஆதரவை அவற்றில் ஒன்றாக நான் முன்வைக்கிறேன். அவ்வளவே.<br /><br />வெங்கட் சொல்லியிருப்பதைப் போல ஊடகங்கள் "ஐம்பது வருடங்களாக ஒருவித மூர்க்கத்தனமான துல்லியத்துடன் தமிழகத்தின் அரசியல்வாதிகளை வெள்ளித்திரையிலிருந்து கண்டெடுத்து அவர்களை மக்கள் மனதில் விதைத்து பின்னர் கோட்டையேற்றுவதாக" நானும் நம்பவில்லை. திரையுலகிலிருந்து பலரும் முதல்வர் கனவுடன் அரசியலில் நுழைகிறார்கள் அல்லது நுழைவதற்கு திட்டமிடுகிறார்கள். ஜெயகாந்தன் சொன்னது போல் இவர்களில் குதிரைகளும் உண்டு, கழுதைகளும் உண்டு, கோவேறுக் கழுதைகளும் உண்டு. இவற்றில் எந்த மாதிரியானக் குதிரைகளின் மீது சில ஊடகங்கள் பந்தயம் கட்டுகின்றன என்றுப் பார்த்தால் அவற்றிடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிகிறது. அதைத் தான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இவர்கள் பந்தயம் கட்டி என்ன தான் "கமான், கமான்" என்றுக் கத்தினாலும் ஓடத் தெம்பில்லாதக் குதிரைகள் வெற்றிபெறாது என்பது எனக்குத் தெரியும்.Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-21745319.post-4276384537666535852007-05-09T21:16:00.000+08:002007-05-09T21:22:26.959+08:00ராமசேஷனின் கதை[எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட சில வேலை அழுத்தங்கள் காரணமாக நேற்று எழுதுவதாகச் சொல்லியிருந்த திரை/ஊடக அரசியல் குறித்தக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத முடியவில்லை. அதற்குப் பதிலாக முன்பே எழுதிவைத்திருந்த இந்த கட்டுரையை இடுகிறேன்.]<br /><br />இணையத்தில் தமிழ்ப் பக்கங்களை மேய்வதால் விளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய நற்பயன்களில் ஒன்று தமிழில் உள்ள நல்ல நாவல்களின் பெயர்களை எல்லாம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பது. நூலகத்தில் தமிழ் வரிசையில் இலக்கின்றித் தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் ஒரு புத்தகம் ஏதாவது வலைப்பதிவிலோ இணைய இதழிலோ சிலாகிக்கப்பட்டது நினைவுக்கு வந்தால் ஒரு ஐந்து நிமிடம் புரட்டிப் பார்த்துவிட்டுப் பெரும்பாலும் வீட்டிற்கு எடுத்துவருவேன். அண்மையில் இப்படி எடுத்துவந்தது ஆதவனுடைய "என் பெயர் ராமசேஷன்".<br /><br />இந்த நாவலைப் பற்றிய ஒரு விவரிப்பை இங்கே பதிவு செய்யலாம் என்று தோன்றியது. நான் எடுத்துவந்த பிரதியில் கடைசிப் பத்துப் பக்கங்கள் இல்லை என்பது தாமதமாகத் தான் தெரிந்தது. ஏற்கனவே படித்துவிட்டவர்கள் நாவலின் முடிவைக் குறித்து ஒரு பின்னூட்டம் எழுதினால் நூலகத்திற்கு போய் இன்னொரு பிரதி இருக்கிறதா என்றுத் தேடும் வேலை எனக்கு மிச்சமாகும்.<br /><br />இது "ஒரு நகர்ப்புற மத்தியதர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும்" நாவல் என்று பின்னட்டைச் சொல்கிறது. எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் அண்மைக்கால நாவல்களைப் போலப் பின்நவீனத்துவ வாசனை ஏதும் இல்லை. பல்வேறு நிலைகளையும், குணாதிசயங்களையும் பிரதிநிதிக்கும், ஒன்றோடொன்று முரண்படும் பாத்திரங்களை உருவாக்கி அவற்றைக் கதைவெளியில் உலவவிட்டு அதன்மூலம் எழுத்தாளன் தான் சொல்ல விரும்புவதை எல்லாம் "விளக்கும்" வழமையான யுத்தியே இங்குக் கையாளப்பட்டிருக்கிறது. நாவல் முழுக்க எதிர் எதிர் நிலைகளில் இருக்கும் கதைமாந்தர்களிடையே உள்ள முரண்கள் உளவியல் ரீதியாக அலசப்படுகிறது. குறிப்பாக,<br /><br />நடுத்தட்டு (ராமசேஷன் குடும்பம்) - மேல்தட்டு (ராவ் குடும்பம்)<br />மரபு/மதம் சார்ந்த வாழ்வுமுறை (ராமசேஷனின் அப்பா) - நவீன வாழ்வுமுறை (பெரியப்பா)<br />பழமைவாத/சராசரிப் பெண்கள் (ராமசேஷனின் அம்மா, புரொபசரின் மனைவி) - நவீன / அறிவு ஜீவிப் பெண்கள் (பிரேமா, பெரியம்மா)<br /><br />நாவலின் தொடக்கத்தில் ராமசேஷனின் குடும்பச் சூழல் விவரிக்கப்படுகிறது. எல்லாராலும் பந்தாடப்படும் ஒரு சம்பிரதாயப் பிச்சு மற்றும் கோழை என்று அறிமுகப்படுத்தப்படும் அப்பா "இயற்கையோடியைந்த வாழ்க்கைமுறை, மதமும் அனுஷ்டானமும் சிறப்பிடம் பெறும் கல்வி முறை, பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் நேரும் ஆபத்துக்கள்" போன்ற சில விஷயங்களில் உறுதியானக் கருத்துக்கள் கொண்டவர். தன் வீடு மற்றும் வேலையிடத்தில் உள்ள அழுத்தங்களைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நகரில் உள்ள வெவ்வேறு பூங்காக்களுக்குச் சென்று ஏதாவதொரு மரத்தடியில் படுத்துக்கொள்ளத் தொடங்குகிறார். ராமசேஷனின் அம்மா "ஏதோ ஒரு வேஷத்தை ஒவ்வொரு நாளும் அணிந்துக்கொண்டு அதை உண்மையென்று ஆவேசத்துடன் நம்புபவள்."<br /><br /><span style="color:#000066;">"அந்தந்த தினத்து அதிருப்தியின் பரிமாணத்தை ஒட்டி, அவளுடைய அன்றைய வேஷம் அமையும். ஓரளவு இது அவள் முந்தின தினம் சந்தித்த நபரையும் பொறுத்தது. முந்தின தினம் அவள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரின் 'ராங்கி பிடித்த' (அவளுக்குப் புலப்பட்டதுபோல) போஸ்ட் கிராஜுவேட் மனைவியைச் சந்தித்திருந்தால், அதற்கடுத்த நாள் அவள் ஒரு அ-இன்டலெக்சுவலாக, பால்காரி, வேலைக்காரியாக, படிப்பினால் களங்கப்படாத தூய பிறவியாக விளங்குவாள். முந்தின நாள் தன்னைவிட நகைகளும் புடவைகளும் அதிகமுள்ளவளும், இவற்றைப் பற்றிப் பீற்றிக்கொண்டவளுமான ஒரு மாமியைச் சந்தித்திருந்தால், அடுத்த நாள் அவள் ஒரு இன்டலெக்சுவலாக மாறி நகை, புடவை என்ற மாயைகளில் உழலும் கிணற்றுத் தவளைகளை விளாசுவாள்."</span><br /><br />ராமசேஷன் வீட்டு மனிதர்கள் - குறிப்பாகப் பெண்கள் - நுட்பமான முறையில் மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றிய விவரிப்புகள் நாவலில் நிறைய உள்ளன.<br /><br /><span style="color:#000066;">"நான் இப்படிக் கூச்சலிட்டபோது அப்பாவும் அதே அறையில்தான் இருந்தார். அவர் எதுவுமே காதில் விழாதது போல பூணூலால் முதுகைச் சொறிந்துகொண்டு சுவரிலிருந்த காலண்டர் எதிரே போய் நின்று அதை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். 'எப்படி சத்தம் போடறான் பார்த்தேளா? காலேஜுக்குப் போகிறானோல்லியா.. என்னையும் உங்களையும் மாதிரியா?' என்று சுருதியை மாற்றிக்கொண்டு அம்மா தன் கோட்டைக்குள் (சமையல்-கம்-பூஜை அறை) நுழைந்தாள். அதாவது இன்டலெக்சுவல் ரீதியாக அவளும் அப்பாவும் ஒன்றாம்! அப்பாவுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்? காலேஜுக்குப் போயிராத அவரை இவ்வாறு நுட்பமாக அவமதித்ததன் மூலம் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளிப்பதிலும் அவள் வெற்றியடைந்துவிட்டாள். ஒரு பாவமுமறியாத அவர் எங்கள் போரில் காயமடைய நேர்ந்ததே என்ற குற்ற உணர்ச்சி."</span><br /><br />இது கணவனை இழந்து தம்பி வீட்டில் இருக்கும் ராமசேஷனின் அத்தை மற்றும் அவன் அம்மா ஆகியோரிடையே நிலவும் பனிப்போர் குறித்து:<br /><br /><span style="color:#000066;">"என் அம்மா சுறுசுறுப்பாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குத் தளர்ச்சியாகவும், அம்மா தளர்ச்சியாக இருக்கும் நேரங்களில் அத்தைக்குச் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அம்மா தூக்கத்திலோ ஒரு பக்கத்து வீட்டு மாமியுடன் சம்பாஷணையிலோ ஒரு பகல் நேரத்தைக் கழிக்க முற்பட்டால், அத்தை அன்றைக்கு நிச்சயம் ரவையைச் சலித்து வறுப்பாள் அல்லது வடாம் இட்டு உலர்த்துவாள், அல்லது காலியாய்ப் போன இன்ஸ்டண்ட் காஃபி, ஹார்லிக்ஸ் குப்பிகளை மறு உபயோகத்துக்காகக் கழுவி வைக்கத் தொடங்குவாள், அல்லது நாலு நாட்களுக்கு வேண்டிய அரிசியைச் சேர்ந்தாற் போலப் பொறுக்க உட்காருவாள். அம்மா இதெல்லாம் தன் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்காகத்தான் என்பதை உணர்ந்து நறநறவென்று பற்களைக் கடித்துக்கொள்வாள்."</span><br /><br />இப்படி ஒரு சூழலில் வளரும் ராமசேஷனுக்கு ராவ் என்னும் பணக்கார கல்லூரி நண்பன் மூலம் ஒரு மேல்தட்டுக் குடும்பத்தின் வாழ்வுமுறையை அருகிலிருந்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. ராவின் தங்கை மாலாவுடன் அவனுக்கு பாலியல் ரீதியான நெருக்கம் ஏற்பட்டு விரைவிலேயே அந்த உறவு முடிவுக்கு வருகிறது.<br /><br /><span style="color:#000066;">"அவளுடைய கேள்விகள் பலவற்றில் 'என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை' நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும். அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்... நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, 'என் கண்ணு!' என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது."</span><br /><br />இதற்குள் கல்லூரியில் காஸனோவா என்று பெயெரெடுத்துவிட்ட ராமசேஷன் அறிவுஜீவி காதலியைத் தேடும் ஒரு நண்பனுக்கு சொல்லும் மதியுரை:<br /><br /><span style="color:#000066;">"உடலுறவு பற்றிய உன்னுடைய குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அல்லது நீ புழங்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸெக்ஸ் அனுபவங்களுக்கான வாய்ப்புகள் இல்லாததையே ஒர் virtueவாகக் காண்கிற முயற்சியில், ஆண்-பெண் இன்டலெக்சுவல் பரிமாற்றங்களைப் பற்றிய பெரிதுப்படுத்தப்பட்ட கற்பனைகளில் நீ திளைக்கிறாய் - உன்னுடைய தரத்துக்கு எந்தப் பெண்ணும் வராதது போலவும், எனவே உன் இயலாமை மன்னிக்கப்படுவது போலவும்! இது உன்னை நீயே ஏமாற்றிக்கொள்வதே தவிர வேறில்லை...லுக், உன்னை ஒரு பெண் நேசிக்க வேண்டுமென்றால் உனக்கு எஸ்கிமோக்களைப் பற்றியும் சூரியப் பொட்டுகள் பற்றியும் தெரியுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்தப் பிரயோஜனமுமில்லை... பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியாவது அழைத்திச் சென்று, எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டியதில்லை என்று சொல்லு. நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், உன்னுடைய எல்லாமே அழகாயிருக்கிறது என்று அவளுடைய மாரை அமுக்கு..."</span><br /><br />பிறகு ராமசேஷன் தன் 'சிமோன் டி புவா'வை சந்திக்கிறான். "ஆசாரமான மத்தியதரப் பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவளாயிருந்தும் அச்சூழலின் சின்னத்தனம், போலித்தனம், அசட்டுத்தனம் ஆகியவற்றுக்கப்பால் மன வளர்ச்சியடைந்து விடுதலையடைந்துள்ள இன்டலெக்சுவலான" பிரேமா என்ற கல்லூரித் தோழியுடன் நெருக்கமாகிறான். விரைவிலேயே அவனுக்கு அந்த உறவும் சலிக்கத் தொடங்குகிறது.<br /><br /><span style="color:#000066;">"அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறையும் அவளுக்கு ஒர் இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சல்களுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துக்கொண்டு அவள்மீது அனுதாபப்படக் கற்றுக்கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னதுபோல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துக்கொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலாவணியாகக் கொண்ட சராசரிப் பெண் வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணர்ந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும் தூக்கலான மோஸ்தர்களிலும் நிறங்களிலும் அனாசாரமான உடைகளை அணியவும் செய்தாளென்பதை அப்போது உணராத நான், அதாவது இவை அவளுடைய தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு (அல்லது ஈகோவுக்கு) எவ்வளவு நெருக்கமானவையென்பதை உணராத நான், இவற்றை அவளுடைய துடுக்கான சேஷ்டைகளாக நினைத்து இந்தத் துடுக்குத்தனத்தை ஆரவாரமாக ரசித்தேன், என்னுடைய நுட்பமான ரசனையின் நிரூபணமாக. என் ரசிப்பை தன்னுடைய 'முரண்படுகிற இன்டலெக்சுவல்-கம்-சமூக விமரிசகை' பிம்பத்தின் அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்ட அவள், இந்தப் பிம்பத்தை மேன்மேலும் வலியுறுத்தியவாறு இருந்தாள், எனக்கு அது சலிக்கத் தொடங்கும் வரை."</span><br /><br />ஆண்- பெண் இடையே உள்ள அறிவுரீதியான பொருத்தம் அல்லது பொருத்தமின்மை பல இடங்களில் அலசப்படுகிறது. ராமசேஷனின் பெரியப்பா தோழமையற்றத் திருமணம் குறித்து அவனை எச்சரிக்கிறார்: "ஸோ ராம், beware of a marriage without companionship." அறிவார்ந்த தளங்களில் இயங்கும் - அல்லது இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் - கணவன், அவற்றில் சற்றும் நாட்டமில்லாத - அவன் பார்வையில் அசட்டுத்தனமாகத் தெரியும் - மனைவி, அதன் காரணமாக திருமண வாழ்வில் ஏற்படும் கசப்பு என்று இந்த சிக்கல் எத்தனையோ எழுத்தாளர்களால் கையாளப்பட்ட ஒன்றுதான். ஒருவேளை எழுத்தாளர்களுக்கு நிஜவாழ்வில் இத்தகைய இணைகளைப் பார்க்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட அதிகமாகக் கிட்டுகிறது போலும். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்: "இலக்கிய அன்பர்களின் மனைவிகள் வீட்டுக்கு வரும் எழுத்தாளர்களை கஞ்சா விற்பவர்களைப் போல் பார்ப்பது தமிழ்நாட்டில் சகஜம்."<br /><br />இந்த நாவலில் அறிவுத்தேடலில் அல்லது அதுபோன்ற பாசாங்குகளில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும் இரண்டு பாத்திரங்களுமே (தன்னை "சார்த்தரின் வாரிசாகக்" காட்டிக்கொள்ளும் ப்ரொபசர் மற்றும் இலக்கிய விமரிசகர் ராமபத்திரன்) தோழமையற்றத் திருமணத்தின் காரணமாக அவதிப்படுபவர்களாக இருக்கிறார்கள்.<br /><br /><span style="color:#000066;">"ப்ரொபசரின் மனைவி ஒரு சராசரித் தமிழ்ப் பிராமண மனைவி - 'ஆம்படையாள்': இந்த நூற்றாண்டின் நாகரிக முன்னேற்றத்தின் மேலோட்டமான பாதிப்புகள், ஒரு பெரிய நகரத்தின் cosmopolitanism பல வருடங்களாக அவள் மேல் நெருடி நெருடி ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஆகியவற்றினால் சற்றே புடமிடப்பட்டிருந்தாலும், இந்த coatingஐச் சுரண்டிப் பார்த்தால் தன்னுடைய பாட்டியிடமிருந்தோ அந்தப் பாட்டியின் பாட்டியிடமிருந்தோ அதிகம் வேறுபடாதவள்."</span><br /><br /><span style="color:#000066;">"...ஒரு தடவை மூர்த்தியுடன் ராமபத்ரன் வீட்டுக்குப் போயிருந்தபோது அவருடைய மனைவியின் 'லெவலை'ப் பற்றி பிரேமா சொன்னது நிஜந்தான் என்பதை உணர்ந்தேன். எனக்கு அவள் மீதும் ராமபத்ரன் மீதும் மிகவும் அனுதாபமாக இருந்தது. தான் தன் மனைவியின் சராசரித்தனத்தின் கூட்டாளி இல்லை, தான் அவளைவிட நாசூக்கான ருசிகளும் தேட்டங்களும் உள்ளவன் என்று சதா நிரூபித்தவண்ணமிருப்பது ராமபத்ரனுக்கு ஒரு obsessionஆக ஆகியிருக்க வேண்டும்..."<br /></span><br />மேலே உள்ள மேற்கோள்களிலிருந்து ஆதவனின் நடையைப் பற்றிய ஒரு புரிதலைப் பெறமுடியும். நாவல் முழுவதும் ஒரு லேசான ரசிக்கத்தக்க எள்ளல் தொடர்ந்து வருகிறது. "நகர்புற மத்தியதர வர்க்கத்தை" பற்றிய கதை என்பதாலோ என்னவோ எழுத்தில் அதீதமான ஆங்கிலக் கலப்பு. ஆதவன் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதக்கூடியவர் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் சிலபகுதிகளும் நாவலில் உண்டு.<br /><br />நாவலைப் படித்து முடிக்கையில் தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் - ஓரிரு முறை அறைக்கு தேநீர் எடுத்துவரும் நாயர் பையன் நீங்கலாக, ராமசேஷனின் நண்பர்கள், காதலிகள், வழிகாட்டிகள் என்று அனைவருமே அவனது சமூகத்தை சேர்ந்தவர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்தபோது சிறுவயதில் படித்த பல ஆனந்தவிகடன் தொடர்கதைகள், பாலகுமாரனின் நாவல்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன என்பதை உணர்ந்தேன். தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போல ஏன் இவையெல்லாம் அக்ரகார இலக்கியம் என்று கு(றி/று)க்கப்படவில்லை? ஆனால் இதை நான் ஒரு குறையாகக் காணவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்களால் தான் பழகி அறிந்த மனிதர்களையும் அவர்களது வாழ்வையும் பற்றி மட்டுமே யதார்த்தமாக எழுதமுடியும். நான் ஜெயமோகனின் படைப்புகளை விரும்புவதற்கு பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பாத்திரங்களை வழக்கமான பொதுமைப்படுத்தல்களைத் தாண்டி துல்லியமாக சித்தரிக்கும் அவரது ஆற்றலும் ஒரு காரணம். ஜெயமோகனின் நாவலில் அய்யரும் வருவார், கண்டன் புலையனும் வருவார். நாடார்களும் வருவார்கள், நாயர்களும் வருவார்கள். ஒருவேளை ஜெயமோகனின் சுற்றம் பல தலைமுறைகளாக ஊரோடு கலக்காமல் ஒதுங்கி தனியே வாழ்ந்திருந்தால் அவரும் காரணவர்களையும் கடலை பிரதமனையும் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டு இருந்திருப்பாரோ என்னவோ.<br /><br />ராமசேஷனின் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்கள் அவனது கதையில் தான் வரவில்லை. அவனது மொழியில் வருகிறார்கள். நாவலில் இருந்து சில வரிகள் கீழே. இந்த வரிகள் ஏதோ ஒரு பாத்திரம் பேசுவதுபோல் அமைந்தவை அல்ல. மாறாக 'இன்டலெக்சுவலான' கதைசொல்லியின் மொழி இது.<br /><br /><span style="color:#000066;">"ராவின் செருப்பு ரிப்பேராயிருந்தால் இவன்தான் சக்கிலியனைக் கூப்பிடுவான், பேரம் பேசுவான்."<br /><br />"முந்தா நாள் வேலைக்காரி தோட்டிச்சியிடம் சொல்கிறாளாம், 'ஐயா நல்லவரு, அம்மாதான் கொஞ்சம் ஒருமாதிரி' என்று."<br /><br />"ராமபத்ரன் உடனே குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போய்கொண்டிருக்கும் பழங்காலத்துப் பிராமணரொருவர் எதிரே வரும் பறையனை எப்படிப் பார்த்திருப்பாரோ அப்படி என்னைப் பார்த்துவிட்டு..."</span><br /><br />ம்... இலக்கியம் படிக்கும்போது சமூக/அரசியல் தலைச்சுமைகளை இறக்கிவைத்துவிட்டு தான் படிக்கவேண்டும் போல.<br /><br />*****<br /><br />ஒரு நாவலை படித்து முடித்தபின் இணையத்தில் அது குறித்த விமரிசனம் ஏதாவது இருக்கிறதா என்று தேடி அதைப் படித்த மற்றவர்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்வது அண்மைகாலமாக என் வழக்கமாக இருக்கிறது. அப்படி தேடியபோது ஆதவனைக் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ஒரு <a href="http://tamil.sify.com/art/fullstory.php?id=643026" target="_blank">கட்டுரை</a> கண்ணில் பட்டது. ஆதவனின் அகால மரணத்தைக் குறித்து இப்படி எழுதுகிறார்:<br /><br /><span style="color:#000066;">"காலமான ஓரிரு நாட்களில் அம்பத்தூரிலிருந்து லா.ச.ரா. என்னைத் தேடி வந்தார். விபத்தில் மரணமடைந்த செய்தியை நானும் அவரும் பகிர்ந்துகொண்டோம். சற்று நேரம் மௌனமாக இருந்தார் லா.ச.ரா. என் மேசைமேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்தப் படத்தை விரலால் தட்டியவாறு சொன்னார்: 'அவனும் அழகனய்யா!' ஆமாம். அழகான எழுத்தாளர்கள் என்று நா.பா. தொடங்கிச் சிலரைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறக் கூடியவர்."</span><br /><br />மண்டையில் ஏதோ மணியடித்தது. சுந்தர ராமசாமி காலமானபோது ஜெயமோகன் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அதிலிருந்து:<br /><br /><span style="color:#000066;">"(சுந்தர ராமசாமி) ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரையே கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்த எம். யுவன் அபாரமான பிரியத்துடன் என் காதில் மெல்ல 'அழகன்யா...' என்றார்."</span><br /><br />சாரு நிவேதிதா இந்த வரியைப் படித்தபோது தன் மீது யாரோ வாந்தியெடுத்து விட்டதைப் போல் அருவருப்பாக <a href="http://www.uthayam.net/articles/charu2005dec.htm" target="_blank">உணர்ந்தாராம்.</a> எனக்கு அத்தகைய அதீத உணர்ச்சிகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ஒரு படைப்பாளியின் 'அழகை' மற்றொரு படைப்பாளி சிலாகிப்பதின் பின்னால் உள்ள உளவியல் சுவாரசியமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-21745319.post-5826952096447438072007-05-08T12:07:00.000+08:002007-05-08T12:10:11.156+08:00திரை(மறைவு) அரசியல்சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது, திரைத்துறையுடன் தொடர்புடையவர்களை, குறிப்பாக நடிகர்களை மட்டுமே அரசின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு என்னும் விசித்திர மாநிலத்தைப் பற்றியக் குறிப்புகள் சில அமெரிக்க இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு நன்கு அறியபட்டதாக இருக்கிறது. அண்டை மாநிலத்தவர்களுக்கு இது தமிழர்களை ஒட்டுமொத்தமாக மட்டம் தட்டுவதற்கு பயன்படும் ஒரு பேசுபொருள். திரைப்பட நடிகர்களுக்கு தமிழக அரசியலில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றிக்கு பின்னால் பல்வேறு விதமான காரணங்கள் இருந்தாலும் இது குறித்து மேலோட்டமான புரிதல் உள்ளவர்கள் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். பாமரத் தமிழர்களுக்கு திரையில் தெரியும் பிம்பத்தையும் நிஜ வாழ்வையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் இல்லை என்பதே அது.<br /><br />மேலே சொல்லப்பட்டிருக்கும் காரணத்தில் சிறிது உண்மை இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் திரைப்பட நடிகர்களுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவுக்குப் பின்னால் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டும் அனைவராலும் வெற்றிப்பெற முடியவில்லை. சிலர் முதலமைச்சர் ஆனார்கள், வேறு சிலரால் தேர்தலில் வைப்புத்தொகையை தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு நடிகர் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றிப்பெறுவார் என்பதை முடிவு செய்வதில் அவரது திரை பிம்பத்துக்கு சற்றும் குறையாத வகையில் அவரது ஊடக பிம்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றை நோக்கினால் தமிழக ஊடகங்களின் வலுவான ஒரு பிரிவு ஒவ்வொருக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அவரை ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாக்க பெருமுயற்சி எடுத்துவந்திருப்பதைப் பார்க்கலாம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற மந்திரத்தை தொடர்ந்து ஓதிவரும் இந்த ஊடகப் பிரிவினர் தான் பாமர ரசிகர்களின் அறியாமையையே தங்கள் பலமாகக் கொண்ட நடிகர்களுக்கு கொம்புசீவி விடுபவர்கள்.<br /><br />இந்த ஊடகங்கள் தாங்கள் வெறுக்கும் ஒருவகை அரசியலை - தமிழ் தேசியவாத சிந்தனை, 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற கூறுகளை ஏதாவதொரு விகிதத்தில் கொண்ட அரசியலை - ஒழித்துக்கட்ட மற்ற அனைத்து வழிகளையும் கையாண்டுப் பார்த்து பலனில்லாத நிலையில் பாமர மக்களின் திரைப்பட மோகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களின் ஆதரவு எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை, சில குறிப்பிட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. <br /><br />1. ஆதரவு பெறும் நடிகர் எந்நிலையிலும் தமிழ் தேசியவாதம் பேச முடியாதவராக இருக்கவேண்டும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.ஜி.ஆரும், மராட்டியரான ரஜினிகாந்தும், வீட்டில் தெலுங்கு பேசுபவராக அறியப்படும் விஜய்காந்தும் ஒருபோதும் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியாது. மேலும் அவர்கள் தங்கள் பின்புலம் காரணமாக வரும் தமிழ் தேசியவாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்திய தேசிய அடையாளத்தை தீவிரமாக வலியுறுத்தவேண்டியக் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற நிலைபாடுகளைப் பொறுத்தவரை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கருணாநிதி காட்டிய தீவிரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட எம்.ஜி,ஆர் வெளிப்படுத்தியதில்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே தன் கட்சிப் பெயருக்கு முன்னால் 'அகில இந்திய' என்றொரு முன்னொட்டை சேர்த்துக்கொண்டார். ரஜினிகாந்தால் காவிரி நீருக்காக தமிழக நடிகர்கள் நடத்தும் ஒரு பேரணியில் கூட கலந்துக்கொள்ள முடியாது. விஜய்காந்த் தமிழக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை ஆதரித்துப் பேசுகிறார். இரு வாரங்களுக்கு முன் ஒரு இணையக் கட்டுரையில் படித்ததைப் போல ஊடகங்களின் அமோக ஆதரவுடன் திமுகவை உடைத்து தனிக்கட்சி தொடங்கியவர்கள் அனைவருமே - ஈ.வி.கே சம்பத்(கன்னடம்), எம்.ஜி.ஆர்(மலையாளம்), வைகோ(தெலுங்கு) - தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது தற்செயலானதா என்றுத் தெரியவில்லை. <br /><br />2. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக 'உயர்'சாதி ஆதிக்க எதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கவேண்டும். எண்ணிக்கைப் பலம் கொண்ட தேவர், வன்னியர், நாடார் போன்ற பிற்பட்டத் தமிழ் சாதிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சமூக ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அத்தகைய அரசியலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு ஊடக ஆதரவு கிடைக்காது. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த ஆதரவு 'என் தமிழ் என் மக்கள்' என்ற வசனத்துடன் தனிக்கட்சி தொடங்கி கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்ட சிவாஜிக்கு கிடைக்காது. (எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் 'உயர்'சாதியினருக்கு ஆதரவானதாக கருதப்பட்ட சில நடவடிக்கைகளை எடுத்தது கவனிக்கத்தக்கது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மாற்றி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றதை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தப் பிறகே பிற்படுத்தப்பட்ட/தலித் மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தினார்.) தொண்ணூறுகளில் ரஜினிக்கு கிடைத்த ஆதரவும், கடந்த தேர்தலில் விஜய்காந்துக்கு கிடைத்த ஆதரவும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்கினால் கிடைக்காது. <br /><br />3. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நடிகர்களுக்கு இந்த ஊடகங்கள் ஒருபோதும் ஆதரவளிக்காது. ரகசியமாக மூகாம்பிகை கோயிலில் வழிபடுபவராக அறியப்பட்ட எம்.ஜி.ஆரும், இமயமலையில் இரண்டாயிரம் வயதுப் பெரியவர்களிடம் ஆன்மீகம் பயிலும் ரஜினியும், ஜோதிடர்களின் சொற்படி ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பதாக சொல்லப்படும் விஜய்காந்தும் பாதுகாப்பானவர்கள். கமலஹாசனோ சத்யராஜோ கட்சி ஆரம்பித்தால் ஊடக ஆதரவு கிடைப்பது சந்தேகமே. <br /><br />மேலே உள்ள தகுதிகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் உண்டு என்றாலும் அவர் தன் திரைப் பிம்பத்தையும் ரசிகர்களையும் ஊடக ஆதரவையும் மட்டும் பயன்படுத்தி முன்னேறியவர் அல்ல. மாறாக எம்.ஜி.ஆரால் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது மறைவுக்குப் பின் நன்கு வளர்ந்த நிலையில் இருந்த ஒரு கட்சியை கைப்பற்றிக் கொண்டவர். <br /><br />ஆக, தமிழக அரசியலில் நடிகர்கள் பெறும் முக்கியத்துவத்துக்கு பாமரத் தமிழர்களின் திரைப்பட வெறி மட்டும் காரணமல்ல. ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம். இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு இதே ஊடகங்கள் கொம்புசீவிக் கொண்டிருந்தால் அவரும் மேலே சொன்ன தகுதிகளைக் கொண்டவராகத் தான் இருப்பார்.<br /><br />[நேரமின்மை காரணமாக எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. மற்றவை நாளை.]Unknownnoreply@blogger.com38tag:blogger.com,1999:blog-21745319.post-51099469409026514432007-05-07T11:33:00.000+08:002007-05-07T12:07:49.719+08:00திரையேற்றம்ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று எழுதிக் கொண்டிருந்தவனை நட்சத்திரமாக்கி ஒரே வாரத்தில் ஏழு இடுகைகள் எழுதச் சொன்னால் சில விளைவுகளைத் தவிர்க்க முடியாது. எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த தலைப்புகளை ஒத்திப்போட்டுவிட்டு வேறு தலைப்புகளைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது. எழுதத் திட்டமிட்டிருந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றுக்கு நூலகத்திலோ இணையத்தேடலிலோ சில மணி நேரங்களை செலவிடவேண்டியிருக்கும் என்பதே காரணம். இப்போது அதற்கான கால அவகாசம் இல்லாததால் நினைவில் உள்ள தகவல்களை வைத்தே எழுதிவிடக்கூடிய சில தலைப்புகளைக் குறித்து அடுத்த ஏழு நாட்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு எழுதத் தொடங்கி பத்து மாதங்களாகியும் இன்னும் திரைப்படங்களைப் பற்றி ஒரு இடுகை கூட இடாமல் இருந்தால் நான் தமிழன் தானா என்ற நியாயமான ஐயப்பாடு சிலருக்கு எழக்கூடும் என்பதால் இந்த இடுகை.<br /><br />முன்னொரு காலத்தில் படங்கள் பார்ப்பது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாக இருந்தது. எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முதற்பாதியிலும் வெளிவந்தப் பெரும்பாலானத் தமிழ் படங்களைப் பார்த்திருப்பேன். இப்போதெல்லாம் ஒரு வருடத்தில் ஐந்தாறு தமிழ் படங்களை பார்ப்பதே அதிகம். அறிவுஜீவி முத்திரை குத்தப்படும் அபாயம் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் படங்களைப் பார்க்கும்போது அவை அறிவு முதிர்ச்சி அடையாத பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதைப் போல் உணர்வதை சொல்லித்தான் ஆகவேண்டும். அது உண்மைதான் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு இயக்குநரின் பேட்டியைக் கண்ட போது தெரிந்தது. ஒரு சில வணிகரீதியிலான வெற்றிப்படங்களை அளித்திருந்த அந்த இயக்குநர் சொன்னார்: "படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் படங்களை சிடி மூலமாகப் பார்த்துவிடுவதால் திரையரங்குகளுக்கு வருவதில்லை. பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களே கதி என்று இருப்பதால் அவர்களும் முன்பு போல் வருவதில்லை. திரையரங்குகளுக்கு அதிகம் வருவது பதினான்கிலிருந்து இருபத்திநான்கு வயதுவரை உள்ள சிறுவர்கள்/இளைஞர்கள். இவர்களது ரசனைக்கு ஏற்றவாறு எடுக்கப்படும் படங்கள் தான் வெற்றிபெறும் என்ற நிலை. அதனால் தான் குத்துப்பாட்டு, பஞ்ச் வசனம் என்றுத் தமிழ் படங்களின் போக்கு மாறி வருகிறது." வியாபாரக் கட்டாயங்களினால் முதிர்ச்சியற்ற விடலைப்பையன்களின் ரசனை ("யூத் லைக் பண்றாங்க") ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ரசனையாக உருமாறுவது எப்படிப் பார்த்தாலும் ஆரோக்கியமான ஒன்றல்ல.<br /><br />மிகையான சித்தரிப்புகள் இல்லாத யதார்த்த பாணி படங்களே என் விருப்பத்துக்குரியவை. அந்த வகையில் தமிழில் அண்மைக்காலமாக பாலா, சேரன், அமீர், தங்கர் பச்சான் ஆகியோரின் படங்களை பெரும்பாலும் பார்த்துவிடுகிறேன். இவர்களது படங்களும் வணிக கட்டாயங்களிலிருந்தும் வெகுஜன ரசனைக்குத் தீனிபோடவேண்டிய தேவையிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டவை அல்ல என்றாலும் இந்தப் படங்களை வணிக 'மசாலா' படங்களுக்கும் கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட 'நடுவழி' படங்கள் எனலாம். தமிழக வாழ்வு, குறிப்பாக கிராமப்புற, சிறுநகர மக்களின் வாழ்வு இந்த இயக்குநர்களின் படங்களில் தான் கூடியமட்டும் யதார்த்தமாக சித்தரிக்கப்படுவதாக உணர்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள் வணிகரீதியாகவும் வெற்றிப்பெறுவதைக் காணும்போது தமிழ் திரையுலகில் ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கூடவே இந்த போக்கு நீடிக்காது, நீடிக்க விடமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையும்.<br /><br />தமிழிலும், இந்தியிலும் இதற்கு முன்பும் இதுபோன்ற நடுவழி படங்கள் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ஒரு காலகட்டம் இருந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் தமிழில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் யதார்த்த பாணியில் அமைந்த தரமான படங்களை அளித்தனர். Superstar என்று சொல்லத்தக்க எந்த நடிகரும் களத்தில் இல்லாத அந்த காலகட்டத்தில் இயக்குநர்களுக்காக படம் பார்க்கும் நிலை இருந்தது. இந்தியிலும் ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய மசாலா அம்சங்கள் இல்லாத குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட யதார்த்த பாணி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நசிருதீன் ஷா, அமொல் பாலேகர், ஃபருக் ஷேக், ஷபானா ஆஸ்மி போன்ற திறமையான நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டம் அது. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. (பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு இந்த போக்கை மாற்றின என்று சொல்பவர்களும் உண்டு.) சர்வ வல்லமை படைத்தவனாக சித்தரிக்கப்படும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்பட்டமான மசாலாப் படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. அதுவரை பல நடுவழி படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் superstar-களாக மாற்றப்பட்டு மூளையை கழற்றிவைத்துவிட்டு நடித்துவிடக் கூடிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினர். <br /><br />ஆனால் அதே காலகட்டத்தின் மலையாளத் திரையுலகில் இதற்கு நேர்மாறான ஒரு மாற்றம் நடந்தது. எழுபதுகளின் இறுதியில் நாடகத்தன்மை வாய்ந்த மசாலா படங்கள் வந்துகொண்டிருந்த நிலை மாறி எண்பதுகள் மலையாளத் திரையுலகின் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு மிகச் சிறந்த யதார்த்த பாணி படங்கள் வரத்தொடங்கின. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த திறனாளர்கள் பலர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. கேரளத்துக்கு வெளியே நடிப்புத் திறமைக்காக நன்கு அறியப்பட்ட மோகன்லால், மம்முட்டி தவிர துணை வேடங்களில் நடிப்பதற்கும் நெடுமுடி வேணு, திலகன் போன்ற உலகத்தரமான நடிகர்களும் இருந்தனர். ஸ்ரீனிவாசன், பத்மராஜன் போன்ற சிறந்த கதாசிரியர்கள்/இயக்குநர்கள் பல அருமையான படங்களை உருவாக்கினர். மிகச்சிறந்த இலக்கிய படைப்புகள் வெற்றிகரமாக படமாக்கப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் வந்த பல மலையாளப் படங்களை எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கேரளத்தின் சமூக, குடும்ப வாழ்வு மிகவும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கப்பட்டிருப்பதும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணங்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு மாறிவிட்டது. இன்றைய மலையாளப்படங்கள் தமிழ் வணிகப் படங்களில் மோசமான நகல்களாக இருக்கின்றன.<br /><br />மலையாளப்படங்களில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் இயல்பான மிகையற்ற நகைச்சுவை. இன்னும் சொல்லப்போனால் அதுவும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு தான். கிண்டலும் கேலியும் மலையாளிகளின் பேச்சுவழக்கிலிருந்து பிரிக்கமுடியாதவை. Mimicry மற்றும் parody பாடல்களைக் கொண்ட ஒலிநாடாக்கள் கேரளத்தில் மிகவும் பிரபலம். அவற்றில் கருணாகரனும், ஆன்டனியும், அச்சுதானந்தனும் படும் பாட்டைப் பார்த்தால் அங்குள்ள சகிப்புத்தன்மை விளங்கும். ஜெகதி ஸ்ரீகுமார், இன்னசென்ட் போன்ற சிறந்த நகைச்சுவை நடிகர்கள் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஏராளமானப் படங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நகைச்சுவைக்காக தனியாகக் கிளைக்கதை அமைத்து வசனம் எழுதும் வழக்கம் மலையாளத்தில் இருந்ததில்லை. நகைச்சுவை நடிகர்கள் படத்தில் முக்கியமான பாத்திரங்களில் வருவார்கள். பல நகைச்சுவை காட்சிகளின் வசனங்களை மட்டும் தனியே எடுத்துப் பார்த்தால் அதில் சிரிப்பதற்கு எதுவும் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டாக காட்ஃபாதர் என்னும் படத்தில் வரும் ஒரு காட்சியை சொல்லலாம். கல்லூரி மாணவனாக வரும் ஜெகதீஷ் எதோ முட்டாள்தனமானக் காரியம் செய்து இன்னசென்டிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடையே நடக்கும் சிறு உரையாடல் தமிழில்:<br /><br />"நீ எதுக்குப் படிக்கிறே?"<br />"பி.எல்"<br />"அதில்ல. நீ எதுக்கு படிக்கிறேன்னு கேட்டேன்."<br /><br />இதை வாசிக்கும்போது இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றுத் தோன்றும். ஆனால் படத்தில் இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் தரையில் உருளாதக் குறையாக சிரிப்பார்கள். இன்னசென்ட் இரண்டாவது முறை கேட்கும் போது அவரது முகத்தில் தெரியும் எரிச்சலையும், 'எதுக்கு' என்ற இடத்தில் கொடுக்கும் அழுத்தத்தையும், மேல்நோக்கி திருப்பிய இடது உள்ளங்கையில் வலது உள்ளங்கையை அடித்து தேய்க்கும் அந்த செய்கையையும் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.<br /><br />மலையாளப் படங்களின் நகைச்சுவை தமிழர்களின் வெளிப்படையான, மிகையான, ஆரவாரமான பாணி நகைச்சுவையிலிருந்து (கமலஹாசனின் சில படங்கள் இதற்கு விதிவிலக்கு) வேறுபட்டிருப்பதாலோ என்னவோ, மலையாளப் படங்களை - குறிப்பாக நகைச்சுவை படங்களை - தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் மூலப் படத்தில் இருந்த நகைச்சுவையை முழுவதுமாக இழந்துக் காணப்படுகின்றன. எண்பதுகளில் மோகன்லால் நடித்து வெளிவந்த "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" என்ற அருமையான படம் தமிழில் இல்லம் என்ற பெயரில் வந்தபோது அதில் மருந்துக்குக் கூட நகைச்சுவை இல்லை. மோகன்லாலும், ஸ்ரீனிவாசனும் வெளுத்துக்கட்டிய நகைச்சுவை வேடங்களுக்கு சிவகுமாரையும் சந்திரசேகரையும் தேர்வு செய்தவரை கடந்த நூற்றாண்டின் மிக மோசமான casting விருதுக்கு பரிந்துரைக்கலாம். மோகன்லால், சோபனா நடித்த "தேன்மாவின் கொம்பத்து" என்ற படம் தமிழில் முத்துவாக சீரழிக்கப்பட்டது. (நெடுமுடி வேணு சோபனாவிடம் காதல் வசப்படும் காட்சிகளையும் அவற்றைத் தமிழில் சரத்பாபு செய்திருப்பதையும் பார்த்தால் விளங்கும்.) சந்திரமுகியில் ரஜினிக்குப் பொருந்தியது போல மணிச்சித்திரதாழில் மோகன்லாலுக்கு நகைச்சுவை வேடம் பொருந்தவில்லை என்றும் மோகன்லால் சொதப்பி இருக்கிறார் என்றும் அண்மையில் ஒரு தமிழ் பதிவர் எழுதியிருந்ததைப் படித்து ஓரிரு நாட்களுக்கு மனம் ஆறவேயில்லை. இப்படி ஒரு சிந்தனை கூட சாத்தியம்தானா என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.<br /><br />எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வந்த மலையாளப் படங்களிலிருந்து காட்சிகளையும் சில நேரங்களில் முழுப்படத்தையும் திருடுவது தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் கதாநாயகி இருட்டில் குழந்தைகளுடன் பேசும் முதல் காட்சியைக் கண்ட உடனேயே அது ஸ்ரீனிவாசனின் "சிந்தாவிஷ்தயாய ஷியாமளா" என்ற படத்தின் நகல் என்று தெரிந்துவிட்டது. (படத்தின் உரிமையை வாங்கித் தான் எடுத்திருப்பார் என்று முதலில் நினைத்தேன். இல்லை என்று பின்னர் அறிந்தேன்.) கஜினி படத்தில் வரும் பல காட்சிகள் (துணை நடிகை பணக்காரனைத் தன் காதலனாக சொல்லிக்கொள்வது, அதனால் கதாநாயகியாக்கப்படுவது, பிறகு அவன் யாரென்றுச் சொல்லாமலே அவளுடன் பழகுவது..) "தீம்தரிகிட" என்ற ப்ரியதர்ஷனின் பழையப் படத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மலையாளத்தில் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்கள் பலவற்றை அளித்த ப்ரியதர்ஷன் இப்போது அந்தப் படங்களை இந்தியில் வெற்றிகரமாக மறு ஆக்கம் செய்து வருகிறார். <br /><br />தமிழில் இருபது வருடங்களுக்கு முன்னால் தங்கள் தனி பாணியில் அமைந்த வெற்றிப்படங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் அண்மைக்காலமாக எவ்வளவோ முயன்றும் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது பல கேள்விகளை எழுப்புகிறது. படைப்பூக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு காலியாகிவிடுமா என்பது அவற்றில் ஒன்று. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இந்த இயக்குநர்களது தனித்தன்மைகள் ஒரு காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்று அவை அவற்றின் புதுமைத்தன்மையை இழந்து சலிப்பை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன. மேலும் அவர்கள் கையாண்ட விஷயங்களை அவர்களைவிட சிறப்பாக செய்யும் புது இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். பாரதிராஜா உச்சத்தில் இருந்தக் காலத்தில் தென்மாவட்டங்களில் தேவர்களின் வாழ்வை பின்புலமாகக் கொண்ட பல வெற்றிப்படங்களை அளித்தார். (பிறகு பசும்பொன் போன்ற படங்களில் சாதிப்பெருமை வெளிப்படையாக ஒலிக்க ஆரம்பித்தது.) இன்று அதற்கு பாரதிராஜா தேவையில்லை. வெயில், பருத்திவீரன் போன்ற அண்மையப் படங்களில் அந்த வாழ்வும் கலாச்சாரமும் மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திரா மனநோயாளிகளைப் பற்றிய பல படங்களை (மூடுபனி, மூன்றாம்பிறை..) எடுத்தார். அவரது உதவியாளாராக இருந்த பாலா இன்று அதே விஷயங்களை வெற்றிகரமாகப் படமாக்குகிறார்.<br /><br />பாலசந்தர் படங்களை நோக்கும்போது அவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இந்த வித்தியாசத் தாகம் பல நேரங்களின் அளவுக்கதிகமானதாகவும் செயற்கையானதாகவும் மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக காதலன்-காதலி உறவுக்கும் பெற்றோர்-பிள்ளை உறவுக்கும் முடிச்சு போட்டு குழப்புவதை எத்தனையோ படங்களில் செய்திருக்கிறார். அபூர்வ ராகங்களில் ஒரு இளைஞன் நடுத்தர வயது பெண்ணைக் காதலிக்க, அந்த பெண்ணின் மகள் இளைஞனின் அப்பாவைக் காதலிக்கிறாள். மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகி தன்னை விரும்பும் வில்லனின் தந்தையை மணந்து அவனை மகனாக்கிக் கொள்கிறாள். வானமே எல்லையில் காதலர்களை பிரிப்பதற்காக அவனது தந்தையும் அவளது தாயும் திருமணம் செய்து அவர்களை சகோதன்-சகோதரி ஆக்கிவிடுகிறார்கள். அவள் ஒரு தொடர்கதையில் அடிக்கடி படாபட் என்று சொல்லும் பெண்ணும் அவளது தாயும் ஒரே ஆணைக் காதலித்து ஏமாறுகிறார்கள். இது ஏதாவது ஃபிராய்டிய சிக்கலின் வெளிப்பாடோ என்னவோ.<br /><br />எண்பதுகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த மற்றொருவர் மணிரத்தினம். பள்ளி நாட்களில் மணிரத்தினத்தின் படங்களை - குறிப்பாக நாயகன், இதயத்தைத் திருடாதே போன்ற படங்களை - மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது பழைய படங்களைப் பார்க்கும்போது அவருடைய அழகுணர்ச்சியும் தொழில்நுட்ப நேர்த்தியும் மட்டுமே தெரிகிறது. மற்றபடி நடுத்தர வர்க்கத்தின் உளவியலையும், ரசனைகளையும் நுட்பமாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு படங்களை எடுத்து வெற்றிபெற்ற ஒரு தேர்ந்த வணிக இயக்குநராகவே மணிரத்தினத்தை இப்போது பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக எந்த சம்பிரதாயத்தையும் மீறத் துணிவில்லாத, குனிய சொன்னால் சாஷ்டாங்க நமஸ்காரமே செய்து விடும் நடுத்தர வர்க்க குமாஸ்தாக்களுக்கு சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் கட்டுப்படாத எதிர் நாயகனின் (anti-hero) மீதும் துடுக்குத்தனமான நவீன கதாநாயகியின் மீதும் ஒரு ரகசிய ஈர்ப்பு இருக்கவே செய்யும். ரோஜாவுக்கு முந்தைய மணிரத்தினத்தின் பெரும்பாலான படங்களில் இந்த அம்சங்கள் இருக்கும். ரோஜா படத்திலும் அதன் பிறகும் ஏதாவது ஒரு தேசிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதே நடுத்தர வர்க்கத்தின் ருசிகளுக்கு ஏற்றவாறு உப்புமா கிண்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.<br /><br />பெரும்பாலானத் தமிழர்களைப் போல என்னுடைய இசை ரசனையும் தமிழ் திரையிசையைச் சார்ந்தது. சிறு வயதில் வீட்டில் பெரும்பாலும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களும் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்களும் ஒலித்துக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ எனக்கு இன்றும் அதுபோன்ற மென்மையான பாடல்களே பிடித்தவையாக இருக்கின்றன. மேலும் இசைப்பாடல்கள் மிகச்சிறந்த அழகுணர்வுடன் கோர்க்கப்பட்ட சொற்களின் தோரணமாக இருப்பதைவிட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். "உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே, உறங்க வைத்தே விழித்திருப்பாயே.." என்ற வரிகளில் உள்ள சொற்கள் எளிமையானவையாக இருந்தாலும் அந்த வரி கேட்பவருக்கு ஒருவித மன நெகிழ்வை அளிக்ககூடியது. கண்ணதாசனின் பெரும்பாலான பாடல்களும் வைரமுத்துவின் ஆரம்பக்காலப் பாடல்களும் இப்படித்தான் இருந்தன. <br /><br />ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக - ரஹ்மானுடன் இணைந்த பிறகு என்று சொல்லலாம் - வைரமுத்துவின் பாடல்களில் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டை என்னால் காணமுடியவில்லை. மாறாக அவரது மேதமையை, அபாரமான தொழித்திறனை மட்டும் தான் காணமுடிகிறது. கண்ணுக்கு மை அழகு போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு வைரமுத்து அதுபோன்ற template பாடல்களை எழுதத்தொடங்கியதிலிருந்து தான் இந்த சரிவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். (கண்ணதாசன் வெகு அபூர்வமாகத் தான் இதுபோன்ற பாடல்களை எழுதிருக்கிறார். எ.கா: காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்..) Template பாடல்கள் ஒருவித இயந்திரத்தன்மைக் கொண்டவை. முதல் வரியை முடிவு செய்துவிட்டால் ஓரிரு மணிநேரங்களில் அதைப்போல முன்னூறு வரிகளை எழுதிவிடலாம். உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா என்று முதல் வரியை எழுதிவிட்டால் அடுத்து உன் சாப்பாட்டில் நான் பாகற்காயா பாயாசமா, உன் தெருவோரத்தில் நான் பெட்டிக்கடையா, பெருமாள்கோயிலா என்று எழுதிக்கொண்டே போகலாம். பிறகு அவற்றிலிருந்து கொஞ்சம் அழகுணர்வு உள்ள சில வரிகளை எடுத்துக்கொண்டால் பாடல் தயார். இப்படி உணர்ச்சியில்லாமல் வெற்று அலங்கார வார்த்தைகளைப் போட்டு நிரப்பும் முறையில் நன்கு பழகிவிட்டதால் தான் வைரமுத்து உலகம் முழுவதும் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் தொலைக்காட்சியில் தோன்றி "ஏ சுனாமி, நீ மரணத்தின் பினாமி" என்று ஆபாசக் கவிதை வாசித்தார்<br /><br />தமிழ் திரையுலகைக் குறித்துப் பேசிவிட்டு அதிலிருந்து பிரிக்கமுடியாத அரசியலைக் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. நாளை பேசுகிறேன்.Unknownnoreply@blogger.com26tag:blogger.com,1999:blog-21745319.post-43537580448453206492007-04-26T01:08:00.000+08:002007-04-26T01:29:21.150+08:00பே-இமானித்தனம்கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் - அது கடலை பொதிந்து வந்த காகிதமானாலும் - ஒரு எழுத்துவிடாமல் படிக்கும் பழக்கம் எனக்கு ஒன்பது அல்லது பத்து வயதிலேயே தொற்றிவிட்டது. அந்நாட்களில் தமிழ் நாளிதழ்களில் ஏதாவது ஒரு அரசியல்வாதி - காளிமுத்துவோ, ஜெயலலிதாவோ, வைக்கோவோ - எதிரணியில் இருக்கும் மற்றொரு அரசியல்வாதியை "தமிழகத்து கோயபெல்ஸ்" அல்லது "இந்தியாவின் கோயபெல்ஸ்" என்ற அடைமொழியுடன் விளித்து பேசியதாகச் செய்திகள் இடம்பெற்றிருக்கும். அது ஏதோ ஒரு வசை என்று புரிந்தாலும் கோயபெல்ஸ் என்றால் என்ன என்று அப்போது குழம்பியது நினைவிருக்கிறது. இந்த கோயபெல்ஸ் தான் ஒரு பெரிய பொய்யைச் சொல்லி பின்பு அதிலிருந்து பின்வாங்காமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லும் உத்தியை அறிமுகப்படுத்தியவர் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். கடந்த இரு வாரங்களாக தமிழ் வலைப்பதிவுகளில் இந்த உத்தியின் மிகச்சிறந்த செய்முறை விளக்கம் ஒன்றைக் காணும் பேறு கிடைத்திருக்கிறது.<br /><br />*****<br /><br />பத்து நாட்களுக்கு முன் தமிழ்மணம் நிர்வாகம் வெளியிட்டிருந்த ஒரு <a href="http://blog.thamizmanam.com/archives/95" target="_blank">அறிவிப்பைப்</a> படித்தேன். தமிழ்மண நிர்வாகத்திடம் சில விளக்கங்களை கேட்டிருந்த ஒரு பதிவருக்கு அதில் பதில் அளித்திருந்தார்கள். மேற்படி பதிவர் எழுதியிருந்த சில வரிகளை அந்த அறிவிப்பில் மேற்கோள் காட்டியிருந்தார்கள். அதை இங்கே இடுகிறேன்:<br /><br /><span style="color:#330099;">"தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது."</span><br /><br />இதில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.<br /><br />கேள்வி 1: (பதிவர்கள் பற்றிய தகவல்கள்) யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன?<br /><br />கேள்வி 2: (தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில்) யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள்?<br /><br />இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ்மணம் நிர்வாகம் அந்த அறிவிப்பில் ஒன்றன்பின் ஒன்றாகப் பதில் சொல்லியிருந்தது. தினத்தந்தி பாணியில் ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு போட்டுவிடுகிறேன்.<br /><br /><strong><span style="color:#660000;">முதல் கேள்விக்கு பதில்</span></strong><br /><br />பதிவர்கள் பற்றிய தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்ற முதல் கேள்விக்கான பதில்:<br /><br /><span style="color:#330099;">“Policy of Privacy பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது."</span><br /><br />ஆங்கிலத்திலும் சொல்லியிருக்கிறார்கள்:<br /><br /><span style="color:#330099;">"Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law.”</span><br /><br /><span style="color:#660000;"><strong>இரண்டாவது கேள்விக்கு பதில்</strong></span><br /><br />தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்களில் யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்ற இரண்டாவது கேள்விக்கான பதில்:<br /><br /><span style="color:#330099;">"இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்."</span><br /><br />*****<br /><br />நான் தமிழ்ப் புலவன் இல்லை. என் தமிழ் படிப்பு பதினாறு வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்போடு முடிந்துவிட்டது. இருப்பினும் மேலே உள்ளதைப் புரிந்துக்கொள்வதில் எனக்கு கடுகளவு கூட பிரச்சனை இல்லை. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை முறையாக நீதிமன்ற உத்தரவு மூலம் கேட்டால் தவிர எந்நிலையிலும் எவருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகிகளின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அவர்கள் விரும்பினால் மட்டுமே தார்மீகக் காரணங்களுக்காக பதிவர்களுக்கு தரமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அவை.<br /><br />இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து என் மகன் கூட இதை வாசித்து சரியாகப் புரிந்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. (இப்போது அவனுக்கு வயது இரண்டு.) ஆனால் தமிழில் வலைப்பதிவு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்த சிலருக்கு இது தலைகீழாக அல்லது கால்மேலாக புரிந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த அன்றே ஒரு தவறான தகவல் அல்லது பொய் உருவாக்கப்பட்டது. பதிவர்களின் அந்தரங்கத் தகவல்களை தார்மீகக் காரணங்களுக்காகத் தமிழ்மணம் நிர்வாகம் மற்றவர்களுக்கு அளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது / பரப்பப்பட்டது. கடந்தப் பத்து நாட்களாக குறைந்தது ஒரு இருபது பதிவுகளிலாவது இந்த தவறான தகவல் / பொய் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பேன். இப்படி எழுதியவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறேன்.<br /><br />பிரிவு 1: உண்மையிலேயே தவறாகப் புரிந்துக்கொண்டவர்கள்.<br />பிரிவு 2: சரியாகப் புரிந்துக்கொண்டு வேண்டுமென்றே பொய்யானத் தகவலைப் பரப்புபவர்கள்.<br /><br />முதல் பிரிவில் இருப்பவர்களைக் குறிக்க பொருத்தமான ஒரு சொல் இருந்தால் மேற்கொண்டு விளக்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு சொல்லை மெனக்கெட்டுக் கண்டுபிடிப்பதற்கான நேரம் கைவசம் இல்லாததால் இப்போதைய வசதிக்காக அவர்களைக் குறிக்க இங்கிலீஷ்காரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இங்கிலீஷ்காரர்களுக்கு மேலே தமிழில் எழுதப்பட்டிருப்பது புரியாமல் போனது மற்றும் தமிழ்மணம் அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் மொழி/நடை மீது அவர்களுக்கு இருக்கும் இனம்தெரியாத வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள சமூக காரணங்களை புரிந்துக்கொள்வது நல்லது. இது எந்த விதத்திலும் அவர்களைக் குறை சொல்வதாகாது. உண்மையில் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான ஒரு கலாச்சாரப் போக்கு ஏற்படுத்திய பாதிப்புக் காரணமாகவே அவர்கள் அவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள்.<br /><br />இன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)<br /><br />இதற்கு தமிழ்நாட்டுச் சூழல் தான் காரணம். "தமிழ்" நாளிதழ்கள் உயர்நீதிமன்றம் என்ற சொல் வாசகனுக்குப் புரியாது என்று அதை ஐ(!)கோர்ட்டு என்று "எளிமைப்படுத்தி" அச்சிடுகின்றன. இன்று இணையம், கணினி, வலைப்பக்கம், விசைப்பலகை, இசைவட்டு போன்ற சொற்களை வழக்கில் நிலைபெறச் செய்தது தமிழ்நாட்டு ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தான். "எங்க ஆக்டிவிடீஸ் பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் எத்திக்கல் ரீசன்ஸுக்காக நாங்களே வாலன்டரியா கொடுப்போம்" என்று தமிழ்மண நிர்வாகம் "எளியத் தமிழில்" அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் சராசரி தமிழ்நாட்டு இளைஞன் கருத்தை கச்சிதமாக கவ்வியிருப்பான். அதை விட்டுவிட்டு செயற்பாடுகள், தார்மீகம் என்றெல்லாம் எழுதினால் அவன் என்ன செய்வான்?<br /><br />தமிழ்நாட்டு இங்கிலீஷ்காரர்களுக்கு மற்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைப் பேணுவது ஒருவித எரிச்சலை அளிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஈழத்தமிழர் விஷயத்தில் தான் என்றில்லை. சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் பயன்படுத்தப்படும் தூயத் தமிழைக் கூட தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நக்கலடிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ("என்ன தமிழுய்யா இது? திருவாட்டிங்கிறான், மின்தூக்கிங்கிறான்...") மற்ற நாட்டுத் தமிழர்களுக்குத் தன்னைப் போல தாய்மொழி எதிர்ப்பு என்னும் ஈன அரசியலை செய்யவோ அல்லது அந்த அரசியலுக்கு சப்ளாக்கட்டை அடிக்கவோ வேண்டியக் கட்டாயம் எதுவும் இல்லை என்பதைக் கூட இவர்கள் புரிந்துக் கொள்வதில்லை.<br /><br />இத்தகையவர்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளில் ஆழமான அல்லது "புரியாத" விஷயங்கள் பேசப்படுவது அன்னியமான ஒன்றாகத் தெரிகிறது. தங்கள் வேலை அலுப்பைப் போக்க அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும் களிப்பிடமாகவே (எழுத்துப்பிழை அல்ல) இவர்கள் தமிழ் வலைப்பதிவுகளை காண்கிறார்கள். குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றின் நீட்சியாக என்று சொல்லலாம். அதே மொழியைப் பேசி, அதே நையாண்டி மேளத்தை வாசித்து, அதே வெற்றுக் கோஷங்களை எழுப்பி...<br /><br />எனக்கு நெருக்கமான ஒருவருக்கு ரமணி சந்திரனின் எழுத்துப் புரிகிறது. ஜெயமோகன் புரிவதில்லை. ஜெயமோகன் எல்லாருக்கும் புரியும்படி எழுதினால் என்ன என்று கேட்டார். என்ன செய்யட்டும்? ஒன்று அவரிடம் இப்படி சொல்லாம்: "ஜெயமோகனது எழுத்தை ஆயிரக்கணக்கானவர்கள் புரிந்து ரசிக்கிறார்கள். நீங்களும் கொஞ்சம் உழைத்தால் புரிந்துக்கொள்ளலாம்". அல்லது ஜெயமோகனுக்கு மடல் அனுப்பி ரமணி சந்திரனைப் போல எளிமையாக எழுதுமாறு கேட்டுக்கொள்ளலாம். இன்னும் ஒருபடி மேலே போய் சிந்துபாத் கதையைப் போல் சகலருக்கும் புரியுமாறு எழுதச்சொல்லலாம். இங்கிலீஷ்காரர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.<br /><br />முதல் பிரிவினரைக் குறித்து நிறையச் சொல்லியாகிவிட்டது, அவர்களில் சிலரிடமாவது ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில். இரண்டாம் பிரிவினரின் மேல் அத்தகைய நம்பிக்கைகள் ஏதும் இல்லாததால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தார்மீகக் காரணங்களுக்காகப் பதிவர்களின் தகவல்களை தருவோம் என்று தமிழ்மணம் "தெளிவாகவே" சொல்லிவிட்டதாக எழுதுபவர்கள் தான் தமிழ்மணம் அறிவிப்பு "குழப்பமாக" இருப்பதாகவும் எழுதுகிறார்கள். தெளிவா, குழப்பமா என்பதில் கூட ஒரு தெளிவு இல்லையா? இந்த அறிவிப்பை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திரித்து, இத்தனை முறை தெளிவுபடுத்திய பிறகும் விளங்காதது போல் நடித்துக்கொண்டு சற்றும் கூச்சமில்லாமல் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல ஒரு பே-இமானித்தனம் ஏதும் இல்லை. அப்படி இல்லை என்றால் தவறாகப் புரிந்துக்கொண்டதை ஏற்றுக்கொண்டு மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது நல்லது.<br /><br />உருது/இந்தி தெரியாதவர்களுக்கு: பே-இமான் -> நேர்மையற்றவன், நம்பத்தகாதவன் (இமான்தாரி -> நேர்மை)Unknownnoreply@blogger.com43tag:blogger.com,1999:blog-21745319.post-86386064483627891252007-04-12T02:09:00.000+08:002007-04-12T02:37:51.108+08:00ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானிதேசபக்தியும் கிரிக்கெட் வெறியும் மிகுந்த நண்பர்கள் சிலரிடையே சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலை அண்மையில் காணநேர்ந்தது. வழக்கமாக இவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தால் விம்ம வைக்கும் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று எங்களூர் சுவர்களில் எழுதும் பெந்தக்கொஸ்தேக்காரர்களைப் போல வல்லரசாகப் போகும் இந்தியாவுக்குக் கட்டியம் கூறும் மின்னஞ்சல்களே அவற்றில் பெரும்பாலானவை. ஆனால் நான் குறிப்பிட்ட மின்னஞ்சல் சற்று வித்தியாசமானது. Photoshop திறமைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு "உலகக் கோப்பைக்குப் பின் இந்திய ஆட்டக்காரர்கள்". அதில் கங்குலி முடி வெட்டுகிறார், டெண்டுல்கர் மீன் பிடிக்கிறார், எனக்குப் பெயர் தெரியாத ஒரு ஆட்டக்காரர் செருப்புத் தைக்கிறார். ஆட்டக்காரர்களை மிக மோசமாக அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஏதோ ஒரு கம்பியூட்டர் பையன் உருவாக்கிய இந்தப் படங்களை அதன் பின்னால் இருக்கும் சாதி/வர்க்கத் திமிரைப் பற்றிய சொரணை ஏதும் இல்லாமல் மற்றக் க.பையன்கள் பரப்பி வருகிறார்கள்.<br /><br />சாதி அடுக்கில் கீழே இருப்பவர்களை இழிவாக நினைப்பதும், அந்த சாதியினருக்கு பல நூற்றாண்டுகளாக விதிக்கப்பட்ட மேற்படி தொழில்களை அதைவிட இழிவாகக் கருதுவதும் இந்திய நடுக்குடி/மேட்டுக்குடி மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று. இந்த மனப்போக்கு தான் சில மாதங்களுக்கு முன் டில்லியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆதிக்க சாதி மாணவர்களிடையே வெளிப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் "திறமையை" மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் இவர்கள் தெருப் பெருக்கவும், செருப்புத் தைக்கவும் போகவேண்டியிருக்கும் என்று நடித்துக் காண்பித்தார்கள். வெள்ளைக் காலர் வேலைகளில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் இந்தக் கனவான்களுக்கு மயிரளவாவது தார்மீக நேர்மையும் சமூக உணர்வும் இருந்திருந்தால் தெருப் பெருக்குவதிலும், செருப்புத் தைப்பதிலும், முடி வெட்டுவதிலும், சாக்கடைக் கழுவுவதிலும் சாதி அடிப்படையிலான நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் இருப்பதைப் பற்றி யோசித்திருப்பார்கள்.<br /><br />சரி, இத்தகைய மனப்போக்கை வெளிப்படுத்துபவர்கள் முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றுக் கருதிப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் எல்லா அமைப்புகளுக்கும் மேலாக மதிக்கப்படும் சர்வ வல்லமை படைத்த உச்சநீதிமன்றம் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைத் தடை செய்த தீர்ப்பில் உள்ள சில வரிகளைப் பாருங்கள்:<br /><br />"The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only would the products be intellectual pygmies as compared to normal intellectually sound students passing out, it has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in the country the Act has been enacted."<br /><br />ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் சமூகப் பேரழிவு ஏற்படும் என்ற பூச்சாண்டியை விட்டுவிடுவோம். ஏனென்றால் அதற்கு அடுத்த வரியில் அதைவிடப் பெரிய பூச்சாண்டி இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இயல்பான அறிவார்ந்த மாணவர்கள் வெளிவருவதற்குப் பதிலாக அறிவு வளர்ச்சிக் குன்றியவர்கள் (intellectual pygmies) வெளிவருவார்களாம்.<br /><br />இங்கே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐஐடி-களில் 27% இடங்களை ஒதுக்குவது என்பது ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களில் கடுமையான நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆக, 50 கோடிக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களில் அறிவு வளர்ச்சி குன்றாத - intellectual pygmies அல்லாத - ஆயிரம் மாணவர்கள் கூட தேறமாட்டார்கள் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இனவெறிக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் இப்படி ஒரு பிரிவினரின் அறிவுத்திறனை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது களி தின்ன வைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைக் கேள்வி கேட்பது தேசத்துரோகச் செயல்.<br /><br />போதிய புள்ளி விவரங்கள் இல்லாததை இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கு ஒரு காரணமாகச் சொல்லியிருக்கும் உச்சநீதிமன்றம் கொஞ்சம் தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு பற்றிய புள்ளிவிவரத்தை பார்த்திருந்தால் இட ஒதுக்கீட்டுக்கும் intellectual pygmies -க்கும் முடிச்சுப் போடுவதிலுள்ள அபத்தம் தெரியவந்திருக்கும். இன்றுத் தமிழக மக்களில் 85 விழுக்காட்டுக்கு மேலான மக்கள் பிற்படுத்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர் என்று வகைப்படுத்தப்பட்டு இட ஒதுக்கீட்டினால் பயன்பெறுகிறார்கள். 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருக்கும் பார்ப்பன சமூகத்தினரும், சுமார் 10% வரை இருக்ககூடிய இதர 'உயர்'சாதியினரும் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். தமிழகத்தில் (அன்றைய மதராஸ் மாகாணத்தில்) நீதிக்கட்சி ஆங்கில அரசாங்கத்திடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு சிறு அளவில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி எண்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முந்தைய நிலைமை என்ன?<br /><br />M.R. Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (Princeton University Press, 1976) என்ற நூலிலிருந்து:<br /><br />"From 1901 to 1911 Brahmins received 71 percent of the degrees awarded by Madras University and controlled the key power centre in the university, the Senate."<br /><br />அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. மக்கட்தொகையில் 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்த சமூகம் கல்லூரிகளில் 71 விழுக்காடு இடங்களைப் பெற்றிருந்தது. அன்றும் சில மேதாவிகள் இதற்கு "திறமையை" காரணமாகச் சொல்லியிருப்பார்கள். சில சாதிகள் இயல்பிலேயே அறிவாளிகள் என்றும் வேறு சில சாதிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் நம்பப்பட்டக் காலம் அது.<br /><br />சரி, மீதி 29% இடங்கள் யாருக்குப் போயிருக்கக் கூடும்? அந்தக் காலத்தில் இந்தியக் கல்லூரிகளில் படித்தவர்களிடையே ஆங்கிலேயர்களின் வாரிசுகளும், ஆங்கிலோ இந்தியர்களும் உண்டு. அக்கால தமிழ் சமூகத்தைப் பற்றிய நம் அறிவை வைத்து நோக்குகையில் எஞ்சியுள்ள இடங்களில் பெரும்பாலானவற்றை இதர 'உயர்' சாதியினர் (முதலியார், வெள்ளாளர், நாயுடு..) கைப்பற்றியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். மக்கட்தொகையில் 85% இருக்கும் மற்ற பின்தங்கிய சாதியினர் (நாடார், தேவர், வன்னியர், மீனவர், தலித்துக்கள்..) முற்றிலும் "திறந்த போட்டி" நிலவிய அக்காலத்தில் கல்லூரிகளில் 10% இடங்களைக் கூட பெற்றிருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.<br /><br />இத்தகைய ஒரு சூழலில் தான் நீதிக் கட்சி சிறு அளவு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் அன்றையத் தலைவர்கள் "தேச நலன்" கருதி கடுமையாக எதிர்த்தது சபைக் குறிப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது நடப்பதைப் போலவே அன்றும் கல்லூரிகளிலிருந்து intellectual pygmies வெளிவருவார்கள் என்ற பூச்சாண்டி காட்டப்பட்டிருக்கக் கூடும். பின்னாளில் அதிகாரத்திற்கு வந்த திமுக, அதிமுக அரசுகள் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தன.<br /><br />கல்வித் திறனைப் பொறுத்தவரை தமிழகத்தில் பின்தங்கியிருந்த சாதிகளின் இன்றைய நிலை என்ன?<br /><br />கடும் போட்டி நிலவும் மருத்துவ படிப்புக்கான இடங்களில் திறந்தப் போட்டி (open competition) அடிப்படையிலானப் பொதுப் பிரிவில் 2005-ம் ஆண்டு 90 விழுக்காட்டுக்கு மேலான இடங்களைப் பிற்படுத்தப்பட்ட / தலித் மாணவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். அதே <a href="http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm" target="_blank">செய்தியிலிருந்து:</a><br /><br />"Education analyst Jayaprakash Gandhi says that students from the so-called forward classes are clearly not keeping pace with the competition from the BC/MBC/SC contenders."<br /><br />வட இந்திய மாநிலங்களில் கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு இது. "திறமைவாதிகள்" சொல்வதைப் போல மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அறிவு தீர்மானிக்கப்படுகிறது என்றால் தமிழகத்தில் அன்று intellectual pygmies ஆக இருந்தவர்களது வாரிசுகள் இன்று intellectual giants ஆகிவிட்டார்கள் எனலாம். வெறும் 10% இடங்களைக் கூட பெறமுடியாத நிலையிலிருந்த சமூகங்கள் இன்று - பொதுப் பிரிவில் - 90% இடங்களை கைப்பற்றுகிறார்கள். எண்பத்தைந்து ஆண்டுகளில் - ஒரு மனித ஆயுள் - இது எப்படி சாத்தியமானது? காலங்காலமாக கல்வியும் மற்ற வாய்ப்புகளும் மறுக்கப்பட்டதால் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் ஓரிருத் தலைமுறைகளிலேயே முன்னிலைக்கு வந்துவிடுவார்கள் என்பது தமிழகத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிறுவப்பட்டிருக்கிறது.<br /><br />ஆனால் இந்தப் புள்ளி விவரங்களை எல்லாம் உச்சநீதிமன்றம் சீண்டாது. அல்லது அவற்றைக் குறித்து நன்றாக அறிந்துள்ளதால் தான் இடஒதுக்கீட்டை எப்படியாவதுத் தடுக்க முயல்கிறார்களோ என்னவோ. போகட்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் பாதுகாவலர்கள், பெரும்பாலும் மரபுவாதிகள். அவர்கள் இத்தகைய தீர்ப்புகளை வழங்குவது எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "முற்போக்கு, இடதுசாரி" நாளிதழான ஹிந்துவின் <a href="http://www.hindu.com/2007/04/02/stories/2007040200961000.htm" target="_blank">தலையங்கத்தைப்</a> பாருங்கள்:<br /><br />"The overall national interest would also require preserving certain institutions such as the Indian Institutes of Technology and the Indian Institutes of Management as islands of excellence uncompromised by any other consideration."<br /><br />தேச நலனை முன்னிட்டு ஐஐடி போன்ற நிறுவனங்கள் (இடஒதுக்கீடு போன்ற) சமரசங்கள் ஏதுமற்ற உன்னதத் தீவுகளாகப் பாதுகாக்கப்பட வேண்டுமாம். கோயிலில் எல்லோரையும் அனுமதிக்கலாம் ஆனால் கருவறைக்குள் மட்டும் அனுமதிக்கக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைபாட்டை ஹிந்து எடுத்திருக்கிறது. ஐஐடி-களில் ஒரு பகுதி இடங்களை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் "தேச நலன்" எப்படி பாதிக்கும்? பார்ப்போம்.<br /><br />*****<br /><br />2003-ம் ஆண்டு ஐஐடியின் பொன்விழாவை முன்னிட்டு ஹிந்து குழுமத்தின் ஃப்ரண்ட்லைன் இதழில் காந்தா முரளி என்பவர் ஒரு விரிவானக் <a href="http://www.hinduonnet.com/fline/fl2003/stories/20030214007506500.htm" target="_blank">கட்டுரையை</a> எழுதியிருந்தார். அதிலிருந்து:<br /><br />"The IITs involve a considerable burden to the Indian taxpayer and this raises the important question of how the country should direct its educational investment. In a country with a woeful primary education record, government funding of the IITs is significant. In 2002-2003, the Central government's budgetary allocation to the IITs was Rs.564 crores compared with a total elementary education outlay of Rs.3,577 crores. Even if it is recognised that the State governments undertake a large responsibility in providing primary education, there is little doubt that the allocation to primary education is grossly inadequate."<br /><br />இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கனவான்கள் "What they need is good schools, not reservation" என்று திருவாய் மலர்வதை நீங்கள் தொலைக்காட்சியில் கண்டிருக்கக்கூடும். Good schools -ஐ உருவாக்குவதற்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை தான் மேலே பார்க்கிறீர்கள். (வழக்கம் போல அரசியல்வாதிகளின் மேல் இதற்கான பழியைப் போடுவதானால் வெறும் ஏழு ஐஐடிகளுக்கு 564 கோடி ருபாய் ஒதுக்கி போஷாக்காக வைத்திருப்பதற்கும் அவர்களேப் பொறுப்பு என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.) உடைந்தக் கரும்பலகைகளும் ஒழுகும் கூரைகளுமாய் இருக்கும் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளின் நிலையைக் கண்டிருக்கும் எவரும் அவற்றுக்கு எந்த அளவு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணரமுடியும்.<br /><br />சரி, ஐஐடிகளுக்கு ஏன் இவ்வளவு பெரும்தொகை தேவைப்படுகிறது? உலகத்தரமானக் கல்வி நிறுவனங்களை உருவாக்கவேண்டுமானால் மற்ற உலகத்தர நிறுவனங்களைப் போலவே செலவு செய்யவேண்டும் என்று மேற்படி கட்டுரை சொல்கிறது. ஆனால் அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் ஒரு இளங்கலை மாணவர் செலுத்தும் கட்டணத்தில் இருபத்தைந்தில் ஒரு பங்கைத் தான் இந்திய ஐஐடி மாணவர் செலுத்துகிறார் என்றத் தகவலும் கட்டுரையில் உள்ளது. மீதி? அரசு வழங்கும் தாராளமான மானியங்களின் மூலம் ஈடுகட்டப்படுகிறது. இப்படி மக்கள் வரிப்பணத்தில் உலகத்தர கல்வியைப் பெறும் ஐஐடி மாணவர்கள் படித்தபின் என்ன செய்கிறார்கள்? படியுங்கள்:<br /><br />"It is likely that close to half the annual undergraduate output of the seven IITs, that is, anything between 1,500 and 2,000 young men and women, go abroad every year — overwhelmingly to the U.S. It is estimated that there are some 25,000 IIT alumni in the U.S. A bleak factor for India is that few of those who go to the U.S. for higher studies plan to return. ... The (Economist) survey also revealed that Indian students were more likely to remain in the U.S. after higher studies than students from any other country....But what is telling, even in the Sukhatme study, is that migration rates were significantly higher in those branches of engineering that attracted the highest ranked entrants to the IITs. .... It also currently estimated that in the popular computer science stream, almost 80 per cent migrated to the U.S."<br /><br />இதெல்லாம் தேச நலனைப் பாதிக்காதா? ஆனால் ஐஐடிகளைப் பொறுத்தவரை இது விவாதத்துக்கு அப்பாற்பட்டது போலிருக்கிறது.<br /><br />"Interestingly, the IITs and their web sites are coy about the number of alumni who go abroad to study and work. Despite receiving substantial budgetary allocations from the Central government, the failure to collect systematically data on the sensitive point of the brain drain suggests an attitude of non-transparency. IIT managements and alumni networks tend to avoid initiating a public debate on the destination of IIT graduates and who benefits directly from the IIT system."<br /><br />புள்ளி விவரங்கள் போதாததால் ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டை தடை செய்த நீதிபதிகளுக்கு ஐஐடி நிர்வாகங்கள் இந்த முக்கியமானப் புள்ளி விவரத்தை தொகுக்கவோ வெளியிடவோ மறுப்பதைப் பற்றிக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />ஐஐடிகளில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மூச்சுக்கு மூவாயிரம் முறை தகுதியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஐஐடிகள் விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதியை எப்படி எடை போடுகின்றன? இளங்கலைப் படிப்புக்கான ஐஐடியின் நுழைவுத்தேர்வு முறை உலகிலேயே கடுமையானதாகக் கருதப்படுகிறது. விண்ணப்பிப்பவர்களில் சுமார் 2 விழுக்காடு மாணவர்கள் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிப்படிப்பின் இறுதி வருடங்களில் பள்ளிப்படிப்போடு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இடம் கிடைப்பதற்கான சிறிதளவு வாய்ப்பாவது இருக்கிறது என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த "மிகக் கடுமையான பயிற்சியை" இதற்காகவே உள்ள, பெரும்பாலும் பெருநகரங்களில் அமைந்துள்ள சிறப்பு பயிற்றுவிப்பு நிறுவனங்கள் மூலம் மட்டுமே பெறமுடியும். இதனால் ஐஐடிகளின் நுழைவுத்தேர்வு முறை பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்றக் கருத்து பரவலாக நிலவுகிறது. ஒரு முன்னாள் ஐஐடி மாணவர் எழுதிய ஒரு <a href="http://www.indiaenews.com/education/20070311/42534.htm" target="_blank">கட்டுரையிலிருந்து</a> இந்தப் பயிற்றுவிப்பு நிறுவனங்கள் ஆற்றும் பங்கைத் தெரிந்துக்கொள்ளலாம்.<br /><br />"It is reckoned 95 percent of the candidates seeking admission into IITs go through coaching shops, paying high fees. The amount of money spent by IIT aspirants attending the coaching factories is about Rs.20 billion per year."<br /><br />"The distorted impact of assembly line coaching taken by candidates is indicated by the percentage of students admitted to IITs from different states in southern India. During a recent year under review, 979 candidates from the south zone secured admission. Of them, 769 were from Andhra Pradesh, while Tamil Nadu accounted for 94 successful candidates, Karnataka, 84, and Kerala, for no more than 32 candidates. Andhra Pradesh may well be producing bright IIT entrants, but those from the other three states can't be that poor. Mushrooming of IIT tutorials and coaching factories in Hyderabad may have much to do with the JEE results."<br /><br />தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து 100 மாணவர்கள் கூட ஐஐடிக்கு தேர்வு செய்யப்படாத நிலையில், ஆந்திராவில் இருந்து மட்டும் 769 மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. காரணம் ஹைதராபாத்தில் இருக்கும் ராமையா இன்ஸ்டிட்யூட் போன்ற வெற்றிகரமானப் பயிற்றுவிப்புத் தொழிற்சாலைகள். அங்கே போய் அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது எத்தனை கிராமப்புற / சிறுநகர மாணவர்களுக்கு சாத்தியம்? இது தான் தகுதியை அளக்கும் முறையா?<br /><br />சரி, இப்படிப்பட்ட ஒரு தேர்வுமுறையில் வெற்றிபெற்று ஐஐடிகளில் நுழையும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது? அதே கட்டுரையிலிருந்து:<br /><br />"An IIT review committee report in 2004 had questioned the calibre of students selected on the basis of an extremely tough entrance examination conducted by IIT joint Entrance Examination (JEE)."<br /><br />இந்தியாவின் மிகப்பெரிய தனியார்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி. முத்துராமனின் கருத்து:<br /><br />"The Tata Steel chief, recalling his recent interaction with some final-year students of IIT Chennai, observed they could not even name the authors of the subject books they were supposed to have studied. He later found out that the students were able to clear the tests without having to read books. He was in for further shock on discovering that their teachers were no more knowledgeable about the subjects they were supposed to teach. ... Muthuraman and the Tata Steel were not alone in their perception of today's IIT graduates. Some other companies are equally disinterested in recruiting from IITs."<br /><br />அரசிடமிருந்து மிக அதிகமாகப் பொருளாதார உதவி பெறும் ஐஐடிகளினால் சமூகத்தின் எந்தப் பிரிவு அதிகம் பயன்பெறுகிறது? மேலே குறிப்பிட்ட ஃப்ரண்ட்லைன் கட்டுரையிலிருந்து:<br /><br />"The typical IIT student is male, hails from an urban middle class family."<br /><br />இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை "urban middle class" என்பது ஒருவகை இடக்கரடக்கல் (euphemism) எனலாம். இப்போது உங்களுக்கு ஹிந்து தலையங்கத்தில் சொல்லப்படும் "தேச நலன்" லேசாக விளங்கத் தொடங்கியிருக்கும்.<br /><br />*****<br /><br />அண்மைக்காலமாக சமூகநீதிக்கு ஆதரவாகப் பேசும் தமிழ்பதிவுகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆங்கிலத்தில் சில அனானி பின்னூட்டங்கள் தவறாமல் இடம்பெறும். நடை, தொனி, பயன்படுத்தப்படும் மானே-தேனே-பொன்மானேக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றில் பெரும்பாலானவற்றை எழுதுவது ஒருவரே என்று நினைக்கிறேன். அண்மையில் இட ஒதுக்கீட்டை தடை செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமரிசிக்கும் பதிவுகளில் எல்லாம் இந்த அனானி ஆதாரமில்லாத ஒரு தகவலைப் பரப்பி வருகிறார். அதாவது இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளில் ஒருவர் (நீதிபதி முனைவர் அரிஜித் பசாயத்) பழங்குடியை (scheduled tribe) சேர்ந்தவராம். மற்றவர் (நீதிபதி லோகேஷ்வர் சிங் பாண்டா) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீக்கியராம். இந்தத் தகவலை சரி பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வேறு சிலரும் இப்படி எழுதி வருகிறார்கள். இந்த பின்னூட்டங்களிலிருந்து சில வரிகள் கீழே:<br /><br />"Of the 2 judges who gave the stay order on OBC quota in IITs etc one (Ajit Prasyait) is a tribal(ST) and other is a Sikh.Both are not from upper castes."<br /><br />"Thank god that some of the judges who heard this case were from backward community, if not you would have even painted them being discriminatory."<br /><br />இது தவறானத் தகவல். தமிழ்பதிவுகளில் சமூகநீதி பேசுபவர்களுக்கு வட இந்திய சாதிப்பெயர்களைப் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகிறது என்ற தைரியத்தில் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் இது. நீதிபதி அரிஜித் பசாயத் ஒரிசாவை சேர்ந்தவர். பசாயத் என்பது ஒரிசாவில் சத்திரியர்களாக கருதப்படும் கண்டாயத் என்னும் 'உயர்'சாதியின் ஒரு <a href="http://www.google.com.sg/search?hl=en&q=+site:bmser.oriyamatrimony.com+khandayat+pasayat" target="_blank">உபபிரிவு.</a> இந்த கண்டாயத் சாதியினர் தான் அண்மையில் தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதிவழியே இழுத்துச் சென்றதற்காக <a href="http://www.google.com.sg/search?hl=en&q=khandayat+paraded&btnG=Search&meta=" target="_blank">செய்திகளில்</a> அடிபட்டவர்கள். நீதிபதி லோகேஷ்வர் சிங் பாண்டா (Panta, Panda அல்ல) ஹிமாச்சலப் பிரதேசத்தில் <a href="http://www.google.com.sg/search?hl=en&q=+site:www.jeevansathi.com+rajput+panta" target="_blank">ராஜபுத்திர இனத்தை</a> சேர்ந்தவர். ராஜபுத்திரர்களும் பிற்படுத்தப்பட்டோர் தான் என்றெல்லாம் கதைகட்டப்படுவதற்கு முன்பே அப்படி அல்ல என்பதை <a href="http://www.google.com.sg/search?q=+site%3Awww.tribuneindia.com+rajputs+obc+himachal+%22the+constituency+has%22&btnG=Search&hl=en" target="_blank">தெளிவுபடுத்திவிடுவது</a> நல்லது.<br /><br />ஆக, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பழங்குடியினரோ பிற்படுத்தப்பட்டவரோ அல்ல. இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படக்கூடிய 'உயர்'சாதிகளை சேர்ந்தவர்கள். நீதிபதிகளின் சாதியைப் பற்றிப் பேசும் தேசத்துரோகச் செயலை நான் செய்துவிட்டதாக சிலர் கொதித்து எழக்கூடும். ஆனால் தேசபக்தரும், இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளருமான ஆங்கில அனானி நீதிபதிகளின் சாதியைப் பற்றிய தவறானத் தகவலைப் பரப்பிவருவதன் காரணமாகவே நான் இந்த தகவல்களை தோண்டியெடுக்க வேண்டியதாயிற்று. ஆங்கில அனானி போன்ற இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இத்தகைய மலிவான மோசடிகளின் மூலம் இந்த தீர்ப்பை நியாயப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.Unknownnoreply@blogger.com71tag:blogger.com,1999:blog-21745319.post-28255773293234236292007-04-07T03:15:00.000+08:002007-04-07T03:20:37.797+08:00கிறுக்கு, கிறுக்கலாகஒவ்வொருவரும் தங்களை விந்தையான சிந்தைக் கொண்டவர்களாகவும் மந்தையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள <a href="http://mathy.kandasamy.net/musings/2007/04/03/665">மதி அழைத்திருந்தார்</a>. என்னிடம் கிறுக்குத்தனங்களுக்குப் பஞ்சமில்லாததால் நிறைய எழுதலாம் தான். ஆனால் படிப்பதற்கு ஆள் வேண்டாமா? எனவே சுருக்கமாக:<br /><br />புதிதாகப் போய் சேர்ந்த ஊர் ஒன்றில் அம்மை நோய் வந்து இரண்டு வாரங்கள் யாரையும் சந்திக்காமல் ஒற்றை வார்த்தைக் கூட பேசாமல் வீட்டுக்குள் தனியே வேக உணவுகளையும் வேகாத உணவுகளையும் உண்டு இருக்க நேர்ந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் ஒரு அதி உன்னதமான மனநிலையில் இருந்தேன். (இது விந்தையல்ல விசர் என்ற அசரீரி குரல் கேட்கிறது.) எவ்விதக் குறுக்கீடுகளோ கடமைகளோ இன்றி முற்றிலும் தான்தோன்றித்தனமாக புத்தகம் வாசிப்பதும், தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதுமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தேன். நான் ஒரு தனிமைவிரும்பி என்றுச் சொன்னால் அதைப்போல் ஒரு understatement (தாழ்வுநவிற்சி?) இருக்கமுடியாது. கபிரியல் கார்சியா மார்க்வெஸைப் பற்றி எதுவும் தெரியாதக் காலத்திலேயே "One Hundred Years of Solitude" -ஐ அந்தத் தலைப்புக்காகவே எடுத்துவந்துப் படித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />தனிமையை விரும்புபவர்கள் அமைதியை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். கூட்டமும் இரைச்சலும் உள்ள இடங்களுக்குப் போவது எனக்கு சிறுவயது முதலே பிடிக்காது. இது இயல்பானது தான் என்றும் எல்லாரும் இப்படித் தான் இருப்பார்கள் என்றும் அப்போது நினைத்திருக்கிறேன். ஆனால் "இல்லை, இல்லை, இல்லவே இல்லை" என்றுச் சொல்லும் நிறைய மனிதர்கள் பின்னாளில் அறிமுகமானார்கள். சிறிது நேரம் கூட சலசலப்பு இல்லாமல் இருக்கமுடியாதப் பனங்காட்டு நரிகள் இவர்கள். தொலைபேசியோ இணைய இணைப்போ இல்லாத தனியறையில் அரை மணி நேரம் அடைக்கப்பட்டால் மூச்சுத்திணறக்கூடியவர்கள். நான் இதற்கு நேர் எதிர். பள்ளி நாட்களில் யாராவது ஆசிரியர் வரவில்லையென்றால் அந்த முக்கால் மணி நேரமும் முழு அமைதி காக்கவேண்டும் என்பது விதி. பேசுகிற மாணவர்களின் பெயர்களை ரகசியமாக குறித்துவைக்கும் ஐந்தாம் படை வேலையைச் செய்வதற்கு சில மாணவர்கள் பணிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் அப்படி பேசுபவர்களுக்கு பிறகு பிரம்படி முதலானத் தண்டனைகள் கிடைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வகுப்பில் பெரும்பாலான மாணவர்களுக்கு முக்கால் மணி நேரம் பேசாமல் அமைதியாக இருப்பது சற்றும் முடியாதக் காரியம். ஒவ்வொரு முறையும் பேசி அடிபடுவார்கள். எனக்கோ இந்த அமைதி நேரங்கள் மிகவும் விருப்பத்திற்குரியவை. ஏதாவதுப் பகற்கனவிலோ வேறு ஏதாவது எண்ணங்களிலோ எனக்குள்ளே தொலைந்துவிடுவேன். அதேப்போல் எனக்கு ஆர்வமில்லாத அறுவைப் பாடங்கள் நடத்தப்படும் போதும் மனம் வகுப்பறையை விட்டு எங்கோ பறந்துவிடும்.<br /><br />சிலகாலம் முன்பு வரை சொல்வதற்கு உருப்படியாக ஏதும் இல்லாத நேரங்களில் மௌனமாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். (எப்போதுமே இப்படித்தான் என்றில்லை. ஒரே அலைவரிசையில் இருக்கும் நண்பர்களுடன் உரையாடுகையில் - குறிப்பாக கார்ல்ஸ்பெர்க்கோ அவன் சிற்றப்பன் ஹைனக்கென்னோ உடனிருந்தால் - மடை திறந்து பாயும் நதியலையாக மாறிவிடுவதுண்டு.) பன்னிரண்டு வயதிலிருந்தே படிப்புக்காகவும் பின்னர் வேலைக்காகவும் குடும்பத்தையும் சுற்றத்தையும் பிரிந்து வெளியூர்களில் ஒரு சிறு நண்பர் வட்டத்துக்கு வெளியே எவ்வித சமூக வாழ்வும் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ வெறுமனே சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் உரையாடல்களில் (குசலம் விசாரிப்புகள், ஏதாவதுப் பேசவேண்டுமே என்பதற்காக பேசப்படும் வாக்கியங்கள்) அறவேப் பயிற்சியில்லாமல் இருந்தேன். "போன வருஷத்த விட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி" போன்ற உப்புசப்பில்லாதப் பேச்சுகளை சகித்துக்கொள்ளவும், அதிகப்பட்சமாக ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லவும் முடிந்ததே தவிர அத்தகைய உரையாடல்களில் பங்கெடுக்க முடிந்ததில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக - திருமணத்திற்குப் பிறகு - இப்படி "பேச்சிலர்" ஆக இருப்பவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் புரிந்துக்கொண்டிருப்பதால் என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறேன். இப்போது சில நேரங்களில் வெயில், மழை பற்றியெல்லாம் நான் "ஆர்வத்துடன்" பேசுவது எனக்கே வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.<br /><br />எவ்வளவு தான் என்னை மாற்றிக்கொள்ள முயன்றாலும், என்னால் இயல்பாக ஈடுபட முடியாத, நினைத்தாலே பயமும் மன அழுத்தமும் ஏற்படுத்துகிற ஒரு சம்பிரதாய உரையாடல் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் வசிப்பதால் அடிக்கடி அந்த ஆக்கினைக்கு ஆளாகவேண்டி இருக்கிறது. குடும்ப உறுப்பினர் யாரையாவது இழந்த உறவினரையோ நண்பரையோ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதைத் தான் சொல்கிறேன். ஊரில் இருந்தால் நேரில் சென்று எதுவும் பேசாவிட்டாலும் உங்கள் துக்கத்தில் நான் உடனிருக்கிறேன் என்பதை உணர்த்த முடியும். ஆனால் தொலைபேசியில்? கடுமையானத் துயரில் இருப்பவரிடம் என்ன "பேச" முடியும்? அந்த நேரத்தில் எதைப் பேசினாலும் எனக்கு அபத்தமாகத் தான் தெரியும். எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டே ஏதாவது கேட்கவேண்டுமே என்பதற்காக கேட்பதில் உள்ள போலித்தனம் உறுத்தும். ஆனாலும் இத்தகைய தொலைபேசி அழைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊரில் யாராவது இறந்துவிட்டதாக தகவல் அறிந்தால் அந்த இழப்பு தரும் கவலையுடன் உபரியாக இந்த தொலைபேசி அழைப்பை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்றக் கவலையும் தொற்றிக்கொள்ளும்.<br /><br />பழைய கதைகள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் மீது எனக்கு இருக்கும் அதீதமான ஈர்ப்புக்கு தர்க்கபூர்வமான விளக்கம் எதுவும் என்னிடம் இல்லை. திரைப்படப் பாடல்களில் எண்பதுகளிலும் அதற்கு முன்பும் வெளிவந்தப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். புதிய பாடல்களை (கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த எல்லா பாடல்களும் எனக்கு "புதிய" பாடல்கள் தான்) கிட்டத்தட்ட கேட்பதே இல்லை. சமகால ஆங்கில நாவல்களைப் பொறுத்தவரை ஞானசூன்யமான நான் விரும்பிப் படித்த/படிக்கும் பெரும்பாலான ஆங்கில நாவல்கள் திருமதி விக்டோரியாவின் காலத்தில் எழுதப்பட்டவை. கார்களும், கணினிகளும், தொலைபேசிகளும் மற்ற நவீன அடையாளங்களும் இல்லாத அந்த உலகம் எனக்கு ஏனோ பிடித்திருக்கிறது. குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அமைதியான கிராமம் ஒன்றில் சில நாட்கள் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைத் தரும் தாமஸ் ஹார்டியின் நாவல்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை.<br /><br />சந்திரமுகி சரவணனைப் போல் இல்லாத ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் நேரம் வாங்கிவிட்டுப் பொறுமையாகச் சொல்லியிருக்கவேண்டியதை எல்லாம் இங்கே எழுதிவிட்டேனோ என்றுத் தோன்றுகிறது. பரவாயில்லை. "சர்வம் கிறுக்கு மயம்" என்ற நிலையிலிருந்து தமிழ்மணம் மெல்ல மீண்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னுமொரு ஐந்து பேரை இந்த விளையாட்டுக்கு இழுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-21745319.post-66349653481354807852007-03-12T02:49:00.000+08:002007-03-12T03:00:04.740+08:00தமிழ்த்தாயையும் பாரதமாதாவையும் பேசவைப்போம்கீழே இருப்பது உங்களுக்குப் பொருந்துகிறதா என்றுப் பாருங்கள்.<br /><br />உங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். அந்த மொழியில் படங்கள் பார்க்கவும் பாடல் கேட்கவும் செய்வீர்கள். ஆனால் வாசிக்கத் தெரியாது. வாசிக்க முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும். இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.<br /><br />கொஞ்சம் பொருந்துகிற மாதிரி தெரிகிறதா? மேலே -அதாவது கீழே- படியுங்கள்.<br /><br />ஒருங்குறி (Unicode) அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இணையத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மொழிப் பக்கங்கள் தோன்றிவிட்டன. வலைப்பதிவுகள், இணைய இதழ்கள் தவிர இந்திய மொழிகளில் உள்ள சிறப்பான இலக்கிய ஆக்கங்களை இணையத்திலேற்றும் பணியையும் பல ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். எனக்கு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுடன் ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால் இந்த மொழிகளை இணையத்தில் வாசிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது எழுத்துக்கள். எனக்கு மலையாளத்தையும் இந்தியையும் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தெரியும் என்றாலும் தமிழ்/ஆங்கிலம் வாசிக்கும் வேகத்தில் பத்தில் ஒருப் பங்கு வேகத்தில் கூட என்னால் அவற்றை வாசிக்க முடியாது.<br /><br />இப்படி மொழி புரியும் ஆனால் எழுத்துத் தெரியாது என்றிருக்கும் ஏராளமானவர்களுக்கு எழுத்துப்பெயர்ப்பு (transliteration) ஒரு தீர்வாக அமையக்கூடும். தமிழ் எழுத்துக்களை ஆங்கில (உரோம) எழுத்துக்களுக்கு மாற்றும் செயலிகள் இணையத்தில் கிடைப்பதுப் போல மற்ற மொழிகளுக்கும் இருக்கலாம். AnAl inthiya mozikalai Angkila ezuththukaLai koNdu ezuthi vAcippathu oru kodumaiyAna anupavam. இதற்கான சில காரணங்கள் கீழே:<br /><br />(1) இந்திய அரிச்சுவடிகள் (scripts) கிட்டத்தட்ட முழுமையாக ஒலி அடிப்படையில் (phonetic) அமைந்தவை. அதாவது ஒரு எழுத்து எந்த இடத்தில் வந்தாலும் ஒரே போல தான் ஒலிக்கும். ஆனால் ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு ஏற்றவாறு மாறும். எடுத்துக்காட்டாக i என்ற எழுத்தை bit என்பதில் இ என்றும் bite என்பதில் ஐ என்றும் உச்சரிக்கவேண்டும். C என்ற எழுத்து cat, space ஆகியச் சொற்களில் வெவ்வேறு விதமாக ஒலிக்கும்.<br /><br />(2) இந்திய அரிச்சுவடிகள் உயிர் + மெய் = உயிர்மெய் என்ற அமைப்புடைய அபிகுடா எழுத்து முறையைச் சேர்ந்தவை. உரோம அரிச்சுவடி அப்படியல்ல.<br /><br />இந்திய அரிச்சுவடிகளுக்கிடையே மேலேக் குறிப்பிட்ட ஒற்றுமைகளைத் தவிர வேறொரு முக்கியமான ஒற்றுமையும் உண்டு. அவை யாவுமே பிரம்மி அரிச்சுவடியிலிருந்து தோன்றியவை. (இன்று தெற்காசியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான அரிச்சுவடிகளின் மூதாதையான பிராமி அசோகர் காலத்தில் தோன்றியது என்ற எண்ணத்தில் அசோகன் பிராமி என்றே அழைக்கப்பட்டு வந்தாலும் அது அசோகருக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கானச் சான்றுகள் அண்மையில் கிடைத்திருக்கின்றன.) இந்த ஒற்றுமைகளின் காரணமாக மற்றொரு இந்திய மொழியை தமிழ் அரிச்சுவடியைக் கொண்டு எழுதுவது உரோம எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதை விட வாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். பல்வேறு வட இந்திய மொழிகள் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அரிச்சுவடிகளைக் கொண்டு எழுதப்படுகின்றன.<br /><br />மற்ற இந்திய மொழிகளில் நிரம்பியிருக்கும் ஏராளமான வடமொழிச் சொற்களை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லை என்றுச் சிலர் சொல்லக்கூடும். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை மணிப்பிரவாள நடை என்றப் பெயரில் ஏராளமான வடமொழிச் சொற்கள் அதே வடிவிலேயே தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டு வந்ததுக் கவனிக்கத்தக்கது. (எடுத்துக்காட்டாக தற்போது சுதந்திரம், விவகாரம், பிரபலம் என்றுத் தமிழ்படுத்தப்பட்டிருக்கும் சொற்கள் முறையே ஸ்வதந்திரம், வ்யவஹாரம், பிரபல்யம் என்றே எழுதப்பட்டு வந்தன.) எனவே இதை ஒருப் பெரிய குறைபாடாக நான் கருதவில்லை.<br /><br />மலையாளம், இந்தி போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களுக்குப் பெயர்க்கும் செயலி ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடினேன். திரு. அன்புமணி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தி எழுத்துக்களைத் தமிழுக்கு மாற்றும் ஒரு செயலியைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. இந்த செயலியும் ஏனோ வேலைச் செய்வதாகத் தெரியவில்லை. (சுட்டித் தருவதற்காக இப்போது தேடிப்பார்த்தபோது அந்தப் பக்கத்தைக் காணவில்லை.) ஒரு வாரம் செலவிட்டால் நாமே ஒருச் செயலியை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் வேலையைத் தொடங்கினேன். காலை விட்டப் பிறகு தான் ஆழம் தெரிந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒய்வு நேரம் முழுவதையும் அதற்கே ஒப்புக்கொடுக்கும்படி ஆகிவிட்டது. இப்போது ஒருவழியாக வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதன் மூலம் மலையாளம், இந்தி மட்டுமல்ல வேறு எந்த இந்திய மொழியையும் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்ற முடியும். இந்த செயலியின் செயல்பாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகளைக் கீழேத் தருகிறேன்.<br /><br /><span style="color:#000066;">കാവിരിപ്പട്ടണത്തിലെ ഒരു ധനികവ്യാപാരിയുടെ മകനായ കോവലന് അതിസുന്ദരിയായ കണ്ണകി എന്ന യുവതിയെ വിവാഹം ചെയ്തു. കാവേരിപൂമ്പട്ടണം എന്ന നഗരത്തില് ഇരുവരും സസുഖം ജീവിക്കവേ കോവലന് മാധവി എന്ന നര്ത്തകിയെ കണ്ടുമുട്ടുകയും അവരില് പ്രണയാസക്തനാവുകയും ചെയ്തു. കണ്ണകിയെ മറന്ന കോവലന് തന്റെ സ്വത്തുമുഴുവന് മാധവിക്കുവേണ്ടി ചിലവാക്കി. ഒടുവില് പണമെല്ലാം നഷ്ടപ്പെട്ടപ്പോള് കോവലന് തന്റെ തെറ്റുമനസിലാക്കി കണ്ണകിയുടെ അടുത്തേക്ക് തിരിച്ചുപോയി. അവരുടെ ആകെയുള്ള സമ്പാദ്യം കണ്ണകിയുടെ രത്നങ്ങള് നിറച്ച ചിലമ്പുകള് മാത്രമായിരുന്നു. കണ്ണകി സ്വമനസ്സാലെ തന്റെ ചിലമ്പുകള് കോവലനു നല്കി. ഈ ചിലമ്പുകള് വിറ്റ് വ്യാപാരം നടത്തുവാന് കോവലനും കണ്ണകിയും മധുരയ്ക്കു പോയി.<br /></span><br />மேலே இருப்பது ஒரு மலையாள விக்கிபீடியா கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகள். நான் இதை எழுத்துக் கூட்டிப் படிப்பதானால் சில நிமிடங்களைச் செலவிடவேண்டி வரும். ஆனால் எழுத்துப்பெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி ஒரே நொடியில் கீழே இருப்பது போலத் தமிழுக்கு மாற்றிவிட்டேன். சில விநாடிகளில் படித்தும் விட்டேன். உங்களுக்குப் புரிகிறதா என்றுப் பாருங்கள்.<br /><br /><span style="color:#000066;">காவிரிப்பட்டணத்திலெ ஒரு தனிகவ்யாபாரியுடெ மகனாய கோவலன் அதிஸுந்தரியாய கண்ணகி எந்ந யுவதியெ விவாஹம் செய்து. காவேரிபூம்பட்டணம் எந்ந நகரத்தில் இருவரும் ஸஸுகம் ஜீவிக்கவே கோவலன் மாதவி எந்ந நர்த்தகியெ கண்டுமுட்டுகயும் அவரில் ப்ரணயாஸக்தனாவுகயும் செய்து. கண்ணகியெ மறந்ந கோவலன் தன்றெ ஸ்வத்துமுழுவன் மாதவிக்குவேண்டி சிலவாக்கி. ஒடுவில் பணமெல்லாம் நஷ்டப்பெட்டப்போள் கோவலன் தன்றெ தெற்றுமனஸிலாக்கி கண்ணகியுடெ அடுத்தேக்கு திரிச்சுபோயி. அவருடெ ஆகெயுள்ள ஸம்பாத்யம் கண்ணகியுடெ ரத்னங்ஙள் நிறச்ச சிலம்புகள் மாத்ரமாயிருந்நு. கண்ணகி ஸ்வமனஸ்ஸாலெ தன்றெ சிலம்புகள் கோவலனு நல்கி. ஈ சிலம்புகள் விற்று வ்யாபாரம் நடத்துவான் கோவலனும் கண்ணகியும் மதுரய்க்கு போயி.</span><br /><br />ஒருகாலத்தில் மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்த இந்த இந்திப் பாடலைச் செயலியில் இட்டேன்.<br /><br /><span style="color:#000066;">तुझे देखा तो ये जाना सनम<br />प्यार होता है दीवाना सनम<br />अब यहाँ से कहाँ जाएं हम<br />तेरी बाहों में मर जाएं हम<br /></span><br />தமிழில் இப்படி வந்தது:<br /><br /><span style="color:#000066;">துஜே தேகா தோ யே ஜானா ஸனம்<br />ப்யார் ஹோதா ஹை தீவானா ஸனம்<br />அப் யஹான் ஸே கஹான் ஜாயேன் ஹம்<br />தேரீ பாஹோன் மேன் மர் ஜாயேன் ஹம்</span><br /><br />எனக்கு மலையாளம், இந்தி தவிர மற்ற இந்திய மொழி எழுத்துக்கள் பழக்கமில்லையென்றாலும் முடிந்த அளவு தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கீழே இருப்பது ஒரு வங்காளப் பாடல்.<br /><br /><span style="color:#000066;">জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!<br />পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্কল বঙ্গ<br />বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ<br />তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে! </span><br /><br />தமிழுக்கு மாற்றிய போது கீழே உள்ளது போல வந்தது. (வங்காள மொழியில் வ என்ற ஒலிக்குப் பதில் ப பயன்படுத்தப்படுகிறது.)<br /><br /><span style="color:#000066;">ஜனகணமன-அதினாயக ஜய ஹே பாரதபாக்யபிதாதா!<br />பஞ்ஜாப ஸிந்து குஜராட மராடா த்ராபிட உத்கல பங்க<br />பிந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சலஜலதிதரங்க<br />தப ஷுப நாமே ஜாகே, தப ஷுப ஆஷிஸ மாகே!</span><br /><br />இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி ஒதுக்கீட்டைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருப்பவர்கள் (நான் முதலில் நினைத்ததைப் போல) இந்த செயலியை உருவாக்குவது எளிதான வேலை என்று நினைக்கக்கூடும். இதற்குக் காரணம் என்னவென்றால் ஒருங்குறி முறையில் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய இடத்தை ஒதுக்குவதில் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகத் தமிழுக்கானத் தொகுதியில் க என்ற எழுத்து எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் தான் மற்ற மொழிகளிலும் க என்ற எழுத்து இருக்கும். அதனால் ஒரு மொழியில் ஒரு எழுத்துக்குரிய எண்ணுடன் (character code) ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூட்டினால் இன்னொரு மொழியில் உள்ள அதே எழுத்துக் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் இயந்திரத்தனமாக தமிழுக்கு எழுத்துப்பெயர்த்தால் பாதிக்கு மேற்பட்ட இடங்களில் எழுத்துக்களுக்குப் பதில் கட்டங்கள் தான் தெரியும். மற்ற இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் நிறைய எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடியில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். எடுத்துக்காட்டாக தேவநாகரிக்கான ஒருங்குறித் தொகுதியில் உள்ள சுமார் நாற்பது எழுத்துக்களும் குறிகளும் தமிழில் இல்லை. அத்தகைய எழுத்துக்களை அதற்கு மிக நெருக்கமாக ஒலிக்கும் மற்ற தமிழ் எழுத்துக்களுடன் பொருத்தவேண்டும்.<br /><br />மேலே சொன்னதைச் செய்தப் பிறகு எழுத்துப்பெயர்க்கப்பட்ட தமிழில் கட்டங்கள் மறையுமே தவிர வேறு சில சிக்கல்கள் இருக்கும். தமிழில் உள்ளதை வாசித்துப் பார்த்தால் அது சில இடங்களில் மூல மொழியின் உச்சரிப்பிலிருந்து பெரிதும் வேறுபடுவதைக் காணலாம். பெரும்பாலும் மூல மொழிகளில் உள்ள ஒழுங்கற்ற, வழக்கமான விதிகளுக்குக் கட்டுப்படாத சிறப்பு உச்சரிப்புகளே இதற்குக் காரணம். (தமிழிலேயே இதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்வதென்றால் 'றி' என்ற எழுத்து வெறி எனும் சொல்லில் ஒரு விதமாகவும் வெற்றி என்பதில் வேறொரு விதமாகவும் ஒலிப்பதைச் சொல்லலாம்.) எனவே தமிழ் எழுத்துப்பெயர்ப்புச் செம்மையாக அமையவேண்டும் என்றால் மூல மொழிகளின் ஒலியியலை (phonology) முழுமையாக அறிந்திருக்கவேண்டும். இதற்காகக் கல்வித்துறை ஆய்வுக் கட்டுரைகள், விக்கிப்பீடியாக் கட்டுரைகள் என்று நிறையப் படிக்கவேண்டி வந்தது. மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உள்ள ஏராளமானப் வலைப்பக்கங்களைச் சோதித்துப் பார்த்து எழுத்துப்பெயர்ப்பில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து முடிந்தமட்டும் சரி செய்தேன். இப்படி எழுத்துப்பெயர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகளையும் பற்றி ஒரு நீளமான ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கேக் குறிப்பிடுகிறேன். இந்திய மொழிகளிலும் அவற்றுக்கான கணினிக் கருவிகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒருவேளை சுவாரசியமாக இருக்கக்கூடும்.<br /><br />(1) இந்திய மொழிகளில் எழுத்துக்களின் உச்சரிப்பு இடத்துக்கு இடம் வேறுபடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. இந்தியிலும் வேறு சில மொழிகளிலும் schwa deletion என்று ஒரு முக்கியச் சிக்கல் இருக்கிறது. இந்தி மொழிக்கான உரையிலிருந்து பேச்சுக்கு (text to speech) மாற்றும் செயலிகளை உருவாக்குவதற்கு இது ஒரு முக்கியத் தடையாக இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் பல இந்திச் சொற்கள் எழுதப்படும் முறைக்கும் உச்சரிக்கப்படும் முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. "அபனா" (अपना) என்று எழுதிவிட்டு "அப்னா" என்று உச்சரிப்பார்கள். "கலம" (कलम) என்று எழுதப்பட்டிருப்பதை "கலம்" என்று உச்சரிக்கவேண்டும். அதாவது சில உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள 'அ' என்ற உயிரெழுத்தை அகற்றிவிட்டு அதை மெய்யெழுத்தாக்கி உச்சரிக்கவேண்டும். ஆனால் எந்த இடத்தில் உயிரை -அதாவது உயிரெழுத்தை - எடுக்கவேண்டும் எங்கே எடுக்கக்கூடாது என்பதற்குத் தெளிவான விதிகள் கிடையாது. பொதுவாக சொல்லப்படும் சில விதிகளும் சில இடங்களில் பொய்த்துவிடும். எடுத்துக்காட்டாக "அப்னா" என்ற சரியான உச்சரிப்பை வரச் செய்வதற்காக இறுதி எழுத்து நெடிலாக இருந்தால் முந்தைய எழுத்தின் உயிரை அகற்றலாம் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் "சாருலதா" என்றப் பெயர் "சாருல்தா" என்று ஆகிவிடும். இப்படி நிறையச் சிக்கல்கள். இதைப் பற்றிய பத்துக்கும் மேற்பட்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். எந்தத் தீர்வுமே நூறு விழுக்காடு சரியாக இல்லை. நான் பயன்படுத்தியிருக்கும் வழிமுறை தொண்ணூறு விழுக்காட்டுக்கு மேல் சரியாக வருகிறது.<br /><br />(2) தமிழைத் தவிர மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் அனுஸ்வரம் என்று ஒரு எழுத்து/குறி இருக்கிறது. இதற்கு நிலையான ஒரு ஒலிக் கிடையாது. எந்த இடத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து உச்சரிப்பு மாறுபடும். 'க' என்ற எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ங்' என்றும் 'ச' எனும் எழுத்துக்கு முன்னால் வந்தால் 'ஞ்' என்றும் ஒலிக்கும். இது தமிழர்களுக்குப் பழக்கமானது தான். ஆனால் மற்ற இடங்களில் வந்தால் எப்படி எழுத்துப்பெயர்ப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் மலையாளத்தில் ம் என்று ஒலிக்கும். ஸ்வாகதம், வசந்தம் எனும் சொற்களில் இருப்பதுப் போல. ஆனால் இந்தியில் அப்படியல்ல. சொல்லின் இறுதியில் அனுஸ்வரம் வந்தால் முந்தைய எழுத்தை nasalization செய்யவேண்டும். அதாவது மூக்கு வழியாக சிறிதுக் காற்றை வேகமாக வெளியேற்றினால் என்ன ஒலி வருமோ அந்த ஒலியை எழுப்பவேண்டும். அத்தகைய ஒலிகளுக்கான எழுத்துக்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லையென்பதால் 'ன்' என்ற ஒலியைக் குறிக்கும் எழுத்து அனுஸ்வரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நானும் அதே முறையைப் பின்பற்றியிருக்கிறேன். "எங்கே" எனும் பொருளுடைய இந்திச் சொல் தமிழில் "கஹான்" என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.<br /><br />(3) மலையாள எழுத்துக்களைப் பொறுத்தவரை பழைய லிபி, புது லிபி என்று ஒருக் குழப்பமும், வாதப் பிரதிவாதங்களும் கடந்தக் கால் நூற்றாண்டுக் காலமாக இருந்து வருகின்றன. சீன மொழியுடன் போட்டியிடும் அளவுக்கு அதிகமான எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ள மலையாள மொழியை தட்டச்சு இயந்திரத்தில் வசப்படுத்தவேண்டிக் கொண்டுவரப்பட்டச் சில சீர்திருத்தங்களை மரபுவாதிகள் ஏற்க மறுத்ததால் ஒரே சொல் இருவேறு விதமாக எழுதப்படும் நிலை ஏற்பட்டது. கணினியில் புது லிபியே பயன்படுத்தப்பட்டாலும் சில சொற்களை எப்படி எழுதுவது என்பதில் இணையத்தில் எழுதுவோரிடம் ஒற்றுமை இல்லை. குறிப்பாக குற்றியலுகரத்தில் முடியும் ஏராளமானச் சொற்களை எப்படி எழுதுவது என்பதில். எப்படி எழுதினாலும் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக நிரலில் சில மாற்றங்களைச் செய்தேன். ஆனால் இந்தக் மாற்றங்களினால் பிறமொழிச் சொற்களை எழுத்துப்பெயர்க்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. (எடுத்துக்காட்டாக ஸ்கிரிப்ட் என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் ஸ்கிரிப்டு என்று எழுத்துப்பெயர்க்கப்படும்.)<br /><br />(4) 'ன' என்றத் தமிழ் எழுத்து மலையாளத்தில் இல்லை. 'ந' மட்டும் தான் இருக்கிறது. அதை அப்படியே எழுத்துப்பெயர்த்தால் தமிழில் வாசிப்பதற்கு வசதியாக இருக்காது. எடுத்துக்காட்டாக "அவன்" என்பது "அவந்" என்று இருக்கும். அதற்காக சொல்லின் முதலெழுத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 'ந' என்பதை 'ன' என்று மாற்றினால் "ஒந்நு", "வந்நு" போன்ற மலையாளச் சொற்களின் உச்சரிப்புக் கெட்டுவிடும். மேலும் "பன்தம்", "சொன்தம்" என்று வாசிப்பது தமிழர்களுக்குக் கொடுமையாக இருக்கும். எனவே இடத்துக்குத் தகுந்ததுபோல 'ந' அல்லது 'ன' வருமாறுச் செய்திருக்கிறேன்.<br /><br />இந்த எழுத்துப்பெயர்ப்புச் செயலியை பயன்படுத்த / சோதித்துப் பார்க்க <a href="http://transliterator.blogspot.com" target="_blank">இங்கேச் சுட்டுங்கள். </a>Unknownnoreply@blogger.com47tag:blogger.com,1999:blog-21745319.post-13758207020273700982007-02-04T16:18:00.000+08:002007-02-04T17:15:46.699+08:00நாப்பழக்கம்நம்மூர் கருப்புத் துரைகளும் பழுப்புத் துரைகளும் கொரியாவில் உள்ள மஞ்சள் துரைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வளவோப் பரவாயில்லை என்று நினைக்கும்படியான ஒருச் செய்தியை சில மாதங்களுக்கு முன் படித்தேன். ஆங்கிலத்தின் மீதும் அமெரிக்கக் கலாச்சாரத்தின் மீதும் கிழக்காசிய நாடுகளில் தற்போது நிலவும் அதீதமான மோகத்தைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தும் கொரியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில மொழியைச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்பதற்காக அவர்களது நாக்கின் அடியில் உள்ள தசையை அறுத்து அகற்றும் ஒரு அறுவை சிகிட்சையை செய்விக்கிறார்கள் என்பதைப் படித்தபோது சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் மிகப் பெரும்பாலான கொரியர்களால் 'ர' என்ற எழுத்தை உச்சரிக்க முடியாது. அதற்குப் பதிலாக 'ல' என்றே உச்சரிப்பார்கள்.<br /><br />கொரியர்களுக்கு மட்டும் தான் இத்தகைய உச்சரிப்புப் பிரச்சனை இருக்கிறது என்றில்லை. வேறு பல மொழிகளைப் பேசும் இனங்களுக்கும் தங்கள் மொழியில் பயன்படுத்தப்படாத ஒலிகளை உச்சரிக்க முடிவதில்லை. டோடோ பறவைக்கு நிகழ்ந்தது போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத ஒரு ஆற்றலை இனிமேல் பயன்படுத்த முடியாதபடி இவர்களுக்கு உடலியல் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டிருக்கக்கூடுமா? மருத்துவர்களும், உயிரியலாளர்களும் இதை மறுக்கிறார்கள். சில ஒலிகளை உச்சரிக்க முடியாமல் இருப்பதற்குப் பயிற்சியின்மையேக் காரணம் என்கிறார்கள். நானும் அப்படித் தான் நினைக்கிறேன். சில எழுத்துக்களை உச்சரிக்க முடியாதவர்கள் என்றுக் கருதப்படும் இனங்களில் பிறந்திருந்தும் கூட சிறு வயதிலிருந்தே மற்ற மொழிகளுடன் பழக்கம் இருப்பவர்கள் அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதை பார்த்திருக்கிறேன்.<br /><br />இந்தியாவில் அதிகமாக உச்சரிப்புச் சிக்கல்கள் உள்ள ஒரு இனம் என்றால் உடனே நினைவுக்கு வருவது வங்காளிகள் தான். எடுத்துக்காட்டாக அவர்களுக்கு 'ஸ' வராது. எப்போதும் 'ஷ' தான். 'அ' என்ற ஒலி வரும் சில இடங்களில் 'ஓ' என்று உச்சரிப்பார்கள். இதனால் மற்றவர்கள் 'ஸங்கீத்' (சங்கீதம்) என்பதை வங்காளிகள் 'ஷொங்கீத்' என்றேச் சொல்வார்கள். உலகை ஏதாவதுப் பேரழிவிலிருந்துக் காப்பாற்றுவது ஒரு வங்காளி 'வா' என்றுச் சொல்வதில் தான் இருக்கிறது என்ற நிலை வந்தாலும் கூட அவர்களால் அதை உச்சரிக்க முடியாது. 'பா' (ba) என்று தான் சொல்வார்கள். ஒரிசாவைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'V' என்ற ஆங்கில எழுத்து 'பி' (bhi) என்று தான் உச்சரிக்கப்பட வேண்டும் என்பது அவரது நிலைபாடு. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அவருக்குப் படிப்பிக்கப்பட்டது அப்படித்தான். ஐந்தில் சரியாக வளைக்காததால் வந்த வினை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் சில காலம் கழித்து அருமை, குருவி போன்றத் <B>தமிழ்ச்</B> சொற்கள் atumai, kutuvi என்றே உச்சtiக்கப்பட வேண்டும் என்று ஒருவர் இணையத்தில் எழுதியிருந்ததைப் படித்ததும் மேற்படி ஒரிய நண்பர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்கினேன்.<br /><br />வங்காளிகளுக்கும் மலையாளிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் ஒற்றுமை உண்டு. வழக்கத்துக்கு மாறான உச்சரிப்புக்களைக் கொண்டிருப்பதில் முன்னவர்களுக்குப் பின்னவர்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆங்கிலச் சொற்களில் 'O' என்ற எழுத்து வந்தால் மலையாளிகள் ஓணம் கொண்டாடிவிடுவார்கள் என்பதுத் தெரிந்ததே. ஆங்கிலச் சொற்களில் வரும் வேறு சில ஒலிகளையும் மலையாளிகள் வித்தியாசமான முறையிலேயே உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக 'ர்ஸ்'(rs) என்னும் ஒலியை 'ழ்ஸ்' என்று ஒலிப்பது அவர்கள் வழக்கம். இன்றும் கூட குமரி மாவட்டத்தின் கேரள எல்லையோரப் பகுதிகளில் 'காளிதாஸ் & பிரதேழ்ஸ்' என்றுத் தமிழில் பெயர்ப்பலகை எழுதப்பட்டிருக்கும் கடைகளைக் காணலாம். <br /><br />தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் பொதுவான உச்சரிப்புப் பிரச்சனை என்று எதுவும் இல்லை. ஆனால் பெரும்பான்மையானத் தமிழர்களுக்குப் - குறிப்பாகத் தமிழ் வழிக் கல்வி கற்றவர்களுக்கு - பிறமொழிச் சொற்களைச் சரியாக உச்சரிப்பது சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் தமிழ் சொற்களை எழுதுவதற்குப் போதுமானதாக இருந்தாலும், மற்ற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழில் மெய்யெழுத்துக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. க,ச,ட,த,ப ஆகிய ஐந்து மெய்யெழுத்துக்களில் ஒவ்வொன்றுக்கும் மற்ற இந்திய மொழிகளில் நான்கு வெவ்வேறு விதமான உச்சரிப்பும் எழுத்துக்களும் உண்டு. (இந்திய மொழிகளில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் முற்றிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாமல் எழுதுவது சாத்தியமில்லை என்பதையும் இங்கேக் கவனத்தில் கொள்ளவேண்டும்.) இந்தியில் gadi, kadi, khadi ஆகிய மூன்றுச் சொற்களும் முற்றிலும் வெவ்வேறு பொருள் கொண்டவை. ஆனால் தமிழில் இவை மூன்றுமே கடி என்று எழுதப்படுவதால் பலத் தமிழர்களுக்கு இவற்றை வேறுபடுத்தி உச்சரிக்க முடிவதில்லை. (அதே நேரத்தில் களி, கழி, கலி ஆகியத் தமிழ்ச் சொற்களை இந்தியில் வேறுபடுத்தி எழுதமுடியாது.)<br /><br />நான் வட இந்தியாவில் இருந்தபோது அங்கே சந்தித்தத் தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் சரியான உச்சரிப்புடன் நன்றாக இந்திப் பேசுபவர்கள். மற்றவர்களுக்கு இந்திப் பேசத் தெரியாது அல்லது மிக மோசமான உச்சரிப்புப் பிழைகளுடன் பேசுவார்கள். இதில் சற்று ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால் முதல் பிரிவினரில் கிட்டத்தட்ட அனைவருமே சமஸ்கிருத அறிமுகம் உள்ளக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருப்பதோடு பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கற்றவர்களாகவும் இருப்பார்கள். இரண்டாவது பிரிவில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். இவர்கள் இந்திப் பேச முடியாமல் இருப்பதற்கு அந்த மொழியிலுள்ள நுட்பமான உச்சரிப்பு வேறுபாடுகள் பிடிபடாமல் இருப்பதே முக்கியக் காரணம். என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் தன் வேலைக் காரணமாக நிறுவனத்தில் மற்றொருத் துறையை அடிக்கடித் தொடர்புக் கொள்ளவேண்டி இருந்தது. அந்தத் துறையில் இருந்த இருவரில் ஒருவர் பெயர் Pankaj மற்றொருவர் Bagga. நண்பர் தொலைபேசியில் தெள்ளத்தெளிவாகக் கேட்பார்: "கேன் ஐ ஸ்பீக் டு Bangaj ஆர் Pakka?". முதல் பெயரில் கடினமாக உச்சரிக்க வேண்டிய இரண்டு வல்லினங்களையும் மென்மையாகவும், அடுத்தப் பெயரில் மென்மையாக உச்சரிக்கவேண்டிய அதே வல்லினங்களை கடினமாகவும் உச்சரிக்கும் அவரதுத் திறனைக் காணும் இந்திக்காரர்கள் முடித்தலை நெரிக்கப்பட்டக் கனகவிசயரைப் போல் ஆகிவிடுவார்கள். <br /><br />ஏழு ஆண்டுகளுக்கு முன் சில்க் ஏர் விமானத்தில் முதல் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் செய்தபோது உலகப் புகழ்பெற்ற சிங்கப்பூர் ஆங்கில உச்சரிப்பைக் குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பயணத்தின் போது விமானப் பணிப்பெண் என்னருகே குனிந்து ஏதோக் கேட்டார். கேள்வி சுமார் ஒரு நிமிடம் நீடித்தது. ஆனால் காஃபி, ஜூஸ் ஆகிய இரண்டு வார்த்தைகளைத் தவிர்த்து வேறு எதுவுமேப் புரியவில்லை. அப்போதே எனக்கு அக்கரைச் சீமையில் என்ன எதிர்பார்ப்பது என்றுப் புரிந்துவிட்டது. பழக்கம் இல்லாதவர்களுக்கு பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துக் கொள்வதைவிட ஸ்வாஹிலியைப் புரிந்துக் கொள்வது எளிதாக இருக்கக்கூடும். <br /><br />இங்கு வந்தப் புதிதில் சில நாட்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஒருமுறை ஒரு உணவகத்தில் தேநீர் கேட்டேன். கல்லாவில் நின்றிருந்தப் பதின்ம வயதுப் பெண் "வி மி?" என்றாள். சுத்தமாகப் புரியவில்லை. இரண்டு முறை அதையேத் திரும்பச் சொல்லியும் பயனில்லை. அவள் முகத்தில் பொறுமையின்மையின் ரேகைகள் படரத் தொடங்கின. ஒருக் கோப்பைத் தேநீர் கேட்டால் என்னென்னக் கேள்விகள் எழக்கூடும் என்று என் மூளை brute force முறையில் தேடிக்கொண்டிருந்தது. யுரேகா! "யெஸ். வித் மில்க் ப்ளீஸ்" என்றேன். அன்று சிங்கப்பூர் உச்சரிப்பின் முக்கியமான பாலபாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டேன். ஏதாவது ஆங்கிலச் சொல் வல்லின ஒலியோடு முடிந்தால் அதை ஒலிக்காமல் விட்டுவிடுவது அவர்களது வழக்கம். மலாய் மொழியில் இது அதிகாரப்பூர்வமாகவே ஆக்கப்பட்டுவிட்டது. எழுதுவதற்கு ஆங்கில எழுத்துக்களையேப் பயன்படுத்தும் அந்த மொழியில் president, lift போன்றவற்றை presiden, lif என்றே எழுதுகிறார்கள். இந்த விதியைப் புரிந்துக்கொண்ட பின் சிங்கப்பூரர்களின் ஆங்கில உச்சரிப்பு ஓரளவுக்கு விளங்கத் தொடங்கியது. "மை கெஃப்ர ஈஸ் வெயிட்டிங் இன் த காப்பா" என்று சக ஊழியர் சொன்னால் அவரதுக் காதலி கார் நிறுத்துமிடத்தில் காத்திருப்பதைத் தான் சொல்கிறார் என்றுப் புரிந்தது.<br /><br />சீனாவிலிருந்து இங்குப் படிக்கவோ வேலைக்கோ வருபவர்களின் ஆங்கில உச்சரிப்பு சிங்கப்பூர் சீனர்களின் உச்சரிப்பிலிருந்து வேறுபட்டது. நிறுத்தி நிதானமாகப் பேசுவதால் அவர்கள் பேசுவதைப் எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் உச்சரிப்புச் சிக்கல்கள் முற்றிலுமாக இல்லாமல் இல்லை. பெரும்பாலானவர்களால் 'த' என்ற ஒலியை உச்சரிக்க முடியாது. "ஸேங்க் யூ" என்று தான் சொல்வார்கள். சீன மொழியில் உள்ள அனைத்துச் சொற்களும் மிகக் குறுகியக் கால அளவே ஒலிக்கக்கூடியவை. அப்படிப் பழகியவர்கள் நீளமான ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கையில் முக்கால்வாசித் தூரம் கடந்ததும் தளர்ந்துபோய் மீதியை விட்டுவிடுவார்கள். இதெல்லாம் தெரியாதவர்களுக்கு சிலச் சொற்களை விளங்கிக் கொள்வது சிரமமாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு இந்தியத் தமிழர் இங்கு வந்தப் புதிதில் சீனாவைச் சேர்ந்த சக மாணவர் ஒருவர் ஏதோப் பாடத்தை அவருக்கு விளக்குகையில் சொல்லியிருக்கிறார்: "தீஸ் டு வெக்டர்ஸ் ஆர் அஸோகன்". அவருக்கு விளங்கவில்லை. சீனர் எம்.ஜி.ஆர் படமெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லையே, அப்படியே அசோகனைத் தெரிந்திருந்தாலும் வெக்டர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் பலவாறுக் குழம்பியிருக்கிறார். பிறகு தான் தெரிந்திருக்கிறது அது orthogonal என்று.<br /><br />நான் சிங்கப்பூர் வந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆனபின் இங்கு உள்ளவர்களின் உச்சரிப்பெல்லாம் எனக்கு அத்துப்படி என்றுப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஆனால் இத்தனை இறுமாப்பு ஆகாது என்று விரைவிலேயே உணர வேண்டி வந்தது. நூலகத்தில் புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கையில் அங்கிருந்தப் பெண் ஊழியர் "நோனீக்கா" என்றார். கர்வம் அழிந்ததடி என்பது போலப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் முறை விளக்கியப் பிறகு தான் விளங்கியது. (நூலக) அட்டைத் தேவையில்லை என்பதை "நோ நீட் கார்ட்" என்று சிங்கிலத்தில் பெயர்த்து போதாக்குறைக்கு அதன்மேல் உச்சரிப்பு வன்கொடுமையைச் செலுத்தினால் அது "நோனீக்கா" என உருமாறும் என்பதறிக.Unknownnoreply@blogger.com15tag:blogger.com,1999:blog-21745319.post-58555453369622327662007-01-31T20:44:00.000+08:002007-02-22T11:33:45.341+08:00பிளாகர்: தமிழில் நாளும் நேரமும்நாளையும் நேரத்தையும் தமிழில் மாற்றுவது எப்படி என்று மணியன் கேட்டிருந்தார். உண்மையில், மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதோடு நேரத்தில் AM/PM என்று இருப்பதை தமிழில் காலை/மதியம்/மாலை/இரவு என்று மாற்றுவதற்கான சில வரிகளையும் சேர்த்திருக்கிறேன். <b>புது பிளாகரில் புது வார்ப்புருவுடன்</b> பயன்படுத்தக்கூடிய இந்த நிரல் எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் கீழே:<br /><br />1. நாள் காட்டும் இடத்தில் January அல்லது Jan என்று இருந்தால் அதை ஜனவரி என்றும், Sunday அல்லது Sun என்று இருந்தால் அதை ஞாயிறு என்றும் மாற்றிவிடும்.<br /><br />2. நேரம் 3:15 PM என்றோ 08:45:00 PM என்றோ இருந்தால் அதை முறையே மதியம் 3:15 அல்லது இரவு 08:45:00 என்று மாற்றிவிடும். (குறிப்பு: உங்கள் பதிவில் நேரம் காட்டும் இடத்தில் AM, PM ஆகிய எழுத்துத்தொடர்கள் இல்லாவிட்டால் - 2:35 PM என்பது 14:35 என்று இருந்தால் - இந்த நிரல் அதை ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிடும். நேரம் காட்டப்படும் முறையை நீங்கள் உங்கள் Settings பக்கத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.)<br /><br />நிரலை அப்படியேப் பயன்படுத்த விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். ஏதாவது சிறப்பு மாற்றங்கள் செய்ய விரும்புபவர்கள் நிரல் துண்டை Notepad, Wordpad போன்ற ஒரு Text Editor-ல் வைத்து வேண்டிய மாற்றங்களைச் செய்தபின் வார்ப்புருவில் இடலாம். எடுத்துக்காட்டாக கீழே உள்ள மாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பலாம்.<br /><br />(அ) மாதத்தையும் கிழமையையும் மட்டும் மாற்றிவிட்டு நேரத்தை அப்படியே விட்டுவிட நினைப்பவர்கள் நிரலில் <span style="color:#ff0000;"><!-- Time starts --></span> என்னும் வரியிலிருந்து <span style="color:#ff0000;"><!-- Time ends --></span> என்னும் வரி வரை உள்ளவற்றை அகற்றிவிடலாம்.<br /><br />(ஆ) ஆங்கில மாதங்களை ஈழத்தமிழ் (யாழ்ப்பாணத் தமிழ்?) முறையில் எழுத விரும்புவோர் யூலை, ஒக்ரோபர் என்று வேண்டிய மாற்றங்களைச் செய்துக் கொள்ளலாம். (டகரமா ரகரமா என்றப் பட்டிமன்றத்தை மீண்டும் தொடங்கி அரைத்து அரைத்து விழுதான மாவை மறுபடியும் அரைக்க வேண்டாம் என்று அனைவரையும் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.)<br /><br /><span style="color:#000099;">நீங்கள் செய்ய வேண்டியது:</span><br /><br />1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். மாற்றங்கள் செய்வதற்கு முன் வார்ப்புருவின் நகலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி <span style="color:#ff0000;"></HEAD></span> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script><br /><!-- Script by Jagad (http://kaiman-alavu.blogspot.com) --><br />function tamilize(stg)<br />{<br />EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");<br /><br />EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");<br /><br />TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");<br /><br /><!-- Time starts --><br />is_pm = 0;<br />is_am = 0;<br />has_ampm = 0;<br />hr_msd = 0;<br />hr_lsd = 0;<br />hr = 0;<br />dp = "";<br />blanko = "";<br />colonfound = 0;<br />i = 1;<br />while( i &lt; stg.length) {<br />if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 80)<br />is_pm = 1;<br />if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 65)<br />is_am = 1;<br />if(stg.charCodeAt(i) == 58 &amp;&amp; colonfound == 0){<br />colonfound = 1;<br />hr_lsd = stg.charCodeAt(i-1)-48;<br />if(i &gt;= 2 &amp;&amp; stg.charCodeAt(i-2) != 32) {<br />hr_msd = stg.charCodeAt(i-2)-48;<br />start_pos = i - 2;}<br />else {<br />start_pos = i - 1;}<br />hr = hr_msd*10 + hr_lsd;<br />if(stg.charCodeAt(i+3) == 58)<br />end_pos = i + 5;<br />else<br />end_pos = i + 2;}<br />i++;}<br />has_ampm = is_am + is_pm;<br />if (has_ampm == 1){<br />if (is_pm == 0){<br />if (hr == 12)<br />{dp = "இரவு ";}<br />else if (hr &gt;= 4)<br />{dp = "காலை ";}<br />else<br />{dp = "இரவு ";}<br />stg = stg.replace("AM", blanko);}<br />else {<br />if (hr == 12)<br />{dp = "மதியம் ";}<br />else if (hr &gt;= 8)<br />{dp = "இரவு ";}<br />else if (hr &gt;= 4)<br />{dp = "மாலை ";}<br />else<br />{dp = "மதியம் ";}<br />stg = stg.replace("PM", blanko);}<br />slice = stg.substring(start_pos,end_pos);<br />dp = dp + slice;<br />stg = stg.replace(slice,dp);}<br /><!-- Time ends --><br /><br />for (i=0;i &lt; 19;i++){<br />stg = stg.replace(EList[i], TList[i]);<br />stg = stg.replace(EList2[i], TList[i]);}<br />return stg;<br />}<br /></script></span><br /><br />2. வார்ப்புருவில் <span style="color:#ff0000;"><data:post.dateHeader/></span> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script>document.write(tamilize('<data:post.dateHeader/>'))</script></span><br /><br />3. <span style="color:#ff0000;"><data:post.timestamp/></span> என்று எங்காவது இருக்கிறதா என்றுப் பாருங்கள். (சிலருக்கு இருக்காது.) இருந்தால் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script>document.write(tamilize('<data:post.timestamp/>'))</script></span><br /><br />4. வார்ப்புருவில் <span style="color:#ff0000;"><data:comment.timestamp/></span> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script>document.write(tamilize('<data:comment.timestamp/>'))</script></span><br /><br />5. வார்ப்புருவில் <span style="color:#ff0000;"><data:i.name/></span> என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள். (சிலருக்கு இருக்காது. மற்றவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கக்கூடும்.)<br /><br /><span style="color:#ff0000;"><script>document.write(tamilize('<data:i.name/>'))</script></span><br /><br />6. வார்ப்புருவைச் சேமியுங்கள்.<br /><br />இப்போது மாதம், கிழமை, நேரம் எல்லாம் தமிழில் தெரியும். பதிவில் ஒற்றை ஆங்கில எழுத்தைக் கூட சகித்துக் கொள்ளமுடியாத தனித்தமிழ் வெறியர் என்று உங்களை யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல :-)Unknownnoreply@blogger.com34tag:blogger.com,1999:blog-21745319.post-80351152068292859582007-01-23T13:50:00.000+08:002007-01-23T15:53:26.715+08:00புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வுமுன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.<br /><br />என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள் சிலர் தெரிவித்ததால் வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் எனக்கு இருக்கும் சோம்பலை ஒரங்கட்டிவிட்டு புது ப்ளாகருக்கு மாறினேன். அப்படியே புது ப்ளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கும் மேம்படுத்திக் கொண்டேன். மாறிய பின் பழைய பதிவுகளைப் பார்த்தால் பின்னூட்டம் இட்டவர்களது பெயர்கள் தமிழில் இருந்தால் அவை சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ப்ளாகர்/கூகிள் நிறுவனத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தற்போது எதுவும் செய்வதற்கு இல்லை என்று கையை விரித்து விட்டதாகவும் அறிந்தேன்.<br /><br />இந்நிலையில் தமிழ்மண முகப்பில் சுட்டி அளிக்கப்பட்டிருந்த <a href="http://higopi.blogspot.com/2007/01/blog-post.html">கோபியின்</a> பதிவைப் பார்த்தேன். அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு நிரல் துண்டை அளித்திருந்தார். அதை வெட்டி என் வார்ப்புருவில் இட்ட பின் வார்ப்புருவை சேமிக்க முடியவில்லை. மர்மமான XML Error அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. XML, Javascript போன்றவற்றில் எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு (நான் தொழில்முறை மென்பொருளாளன் அல்ல) அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. பிறகு ஒருவழியாக error தகவலுக்கான காரணத்தைக் கண்டறிந்தேன். (XML-ல் <, >, & போன்ற சில சிறப்புக் குறிகளை அப்படியே நிரலில் (script) பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்குமாம். அவற்றுக்குப் பதில் முறையே &lt;, &gt;, &amp; என்று எழுதவேண்டும்.)<br /><br />இவற்றை எல்லாம் சரிசெய்த பின்னும் பழையப் பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் தெரியவில்லை. பிறகு கோபியின் பதிவில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்தபோது அவர் புது ப்ளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்தது. அப்படி பழைய வார்ப்புருவைப் பயன்படுத்துவோருக்கு அவரது நிரல் தீர்வாக அமையக் கூடும். ஆனால் பெரும்பாலானாவர்கள் புது ப்ளாகருக்கு மாறியபின் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்களுடைய பதிவில் இந்த நிரல் துண்டு வேலை செய்யாது என்பதை சில மணிநேரங்கள் மெனக்கெட்ட பின் சர்வ நிச்சயமாக அறிந்துக்கொண்டேன். ஏன் வேலை செய்யாது என்பதும் புரிந்தது. வேலை செய்யக்கூடிய ஒரு நிரல் துண்டை நாமே எழுதிவிடலாம் என்ற எண்ணம் மூளையில் ஏறியது. அப்படி எழுதியது சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு என் பழையப் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களில் அட்சர சுத்தமாகத் தெரியும் பெயர்களே ஆதாரம்.<br /><br /><strong>இந்த நிரல் புது ப்ளாகரில் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே.</strong> பின்னூட்டமிட்டவரது பெயர் ஆங்கிலம், தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருந்தால் தெரியாது. இந்த தீர்வு தமிழ் பெயர்களுக்கு மட்டுமே.<br /><br /><span style="color:#000066;"><strong>நீங்கள் செய்யவேண்டியது:</strong></span><br /><br />1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். "Expand Widget Templates" என்றக் கட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் <span style="color:#ff0000;"></HEAD></span> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script><br />function to_unicode(stg)<br />{<br />ostg = &quot;&quot;;<br />i = 0;<br />while(i &lt; stg.length)<br />{<br />if(stg.charCodeAt(i) == 224)<br />{<br />if(stg.charCodeAt(i+1) == 38)<br />{<br />secondchar = (stg.charCodeAt(i+3)-48)*100 + (stg.charCodeAt(i+4)-48)*10 + (stg.charCodeAt(i+5)-48);<br />if(stg.charCodeAt(i+7) == 38)<br />{<br />mainchar = (stg.charCodeAt(i+9)-48)*100 + (stg.charCodeAt(i+10)-48)*10 + (stg.charCodeAt(i+11)-48);<br />i += 13;<br />}<br />else<br />{<br />mainchar = stg.charCodeAt(i+7);<br />i += 8;<br />}<br />}<br />else<br />{<br />secondchar = stg.charCodeAt(i+1);<br />if(stg.charCodeAt(i+2) == 38)<br />{<br />mainchar = (stg.charCodeAt(i+4)-48)*100 + (stg.charCodeAt(i+5)-48)*10 + (stg.charCodeAt(i+6)-48);<br />i += 8;<br />}<br />else<br />{<br />mainchar = stg.charCodeAt(i+2);<br />i += 3;<br />}<br />}<br />mainchar += 2816;<br />if (secondchar == 175)<br />mainchar += 64;<br />ostg += String.fromCharCode(mainchar);<br />}<br />else<br />{<br />ostg += String.fromCharCode(stg.charCodeAt(i));<br />i++;<br />}<br />}<br />return ostg;<br />}<br /></script><br /></span><br />2. வார்ப்புருவில் இரண்டு இடங்களில் <span style="color:#ff0000;"><data:comment.author/></span> என்று இருக்கும். அதை அகற்றிவிட்டு அந்த இடங்களில் கீழே உள்ளதை இடுங்கள்.<br /><br /><span style="color:#ff0000;"><script>document.write(to_unicode('<data:comment.author/>'))</script><br /></span><br />3. வார்ப்புருவை சேமியுங்கள். பழைய பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் இப்போது சரியாகத் தெரியும்.<br /><br />பி.கு: இந்த தகவல்களை நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் மறு பிரசுரம் செய்யலாம்.Unknownnoreply@blogger.com55tag:blogger.com,1999:blog-21745319.post-1168950791857054682007-01-16T20:22:00.000+08:002007-01-20T13:38:40.235+08:00நடைஎழுதத் தொடங்கிய சில காலத்துக்குப் பின்னரே தன் நடை பற்றிய பதற்றம் முழுமையாக விலகியது என்ற பொருளில் ஜெயமோகன் ஏதோ ஒரு புத்தக முன்னுரையிலோ இணையக் கட்டுரையிலோ எழுதியிருந்தார். (ஜெயமோகன் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து இரண்டு பதிவுகள் எழுத முடியாமல் செய்யும் ஜெமோனோமேனியா எனும் விசித்திர வியாதி எப்போது விலகும் என்றுத் தெரியவில்லை.) எனக்கும் ஒரு காலத்தில் நடை பற்றிய பதற்றம் இருந்தது. வலதுத் தோளை லேசாகக் கீழே சாய்த்து நடப்பது தவிர்க்கவேண்டிய ஒருக் குறைபாடாக சிறுவயதிலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டு வந்ததால் ஏற்பட்ட பதற்றம் அது. பின்னாளில் அறிமுகமான ஒரு மலையாளி நண்பர் "நீங்கள் மோகன்லால் ரசிகரா?" என்றுக் கேட்டுச் சிரித்தார். புரியவில்லை. மோகன்லால் ஒரு தோளை கீழே சாய்த்து நடந்து வந்து "எடா மோனே தினேஷா" என்று வசனம் பேசும் அந்த அடவுக்குப் பாதிக் கேரளமே அடிமை என்றும் நிறைய இளைஞர்கள் அவரைப் போலவே ஒருத் தோளை கீழே சாய்த்து நடக்கிறார்கள் என்றும் நண்பர் விளக்கினார்.<br /><br />ம்.. இந்த "நடை"யைப் பற்றி ஒருப் பதிவு எழுதும் அளவுக்கு கையிருப்பு இன்னும் காலியாகவில்லை. அதே நேரத்தில் கடந்த இரண்டு பதிவுகளில் sidebar கடுகாய் சிறுக்கும் அளவுக்கு எழுதிய நடை உடை பாவனைகளைப் பற்றி மேற்கொண்டு எதுவும் எழுதும் எண்ணமும் இல்லை. உண்மையில் சென்றப் பதிவின் நீளத்தைப் பார்த்துவிட்டு "படிக்கிறவங்கள ஏன் இப்படிப் போட்டுக் கொல்லுறீங்க?" என்று என் மனைவி வினவியது நீளமும் அழுத்தமும் குறைந்த ஒரு பதிவையாவது எழுதவேண்டும் என்ற அழுத்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. இந்தப் பதிவு எழுத்து நடையைப் பற்றியது தான்.<br /><br />நான் எழுதுவதையெல்லாம் எழுத்து என்று ஒத்துக்கொள்வதானால், சொல்ல வருவதை எந்த வரிசையில் அடுக்கலாம் என்று முடிவு செய்ய சற்று நேரம் செலவிடுவதுண்டே தவிர நடையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இன்பச் சுற்றுலாவைக் குறித்து இருநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதும் நடை எட்டிப் பார்த்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கும்.<br /><br />சிலரை நடைக்காகவே படிக்கலாம். எழுத்தில் புதிய தகவல்களோ கருத்துக்களோ ஏதும் இல்லாமல் இருந்தாலும் படிக்கத் தொடங்கினால் "நடையா, இது நடையா?" என்றுப் படித்துக்கொண்டே இருக்கலாம். வேறு சிலர் நடமாடும் பல்கலைக் கழகங்களாக இருப்பார்கள். ஆனால் நடை எப்போதோ படித்த Asterix படக்கதைகளில் வரும் Julius Monotonus பாத்திரத்தை நினைவுப் படுத்தும். நாம் அதிகம் ரசிக்கும் எழுத்தாளர்களின் பாதிப்பு நம்முடைய நடையில் இருப்பது தவிர்க்க முடியாதது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் சொன்னார்: "மற்ற இசையமைப்பாளர்களின் சாயல் என் இசையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் அவர்களுடைய இசையை அதிகம் கேட்பதில்லை". நானும் அவரது இசை சுத்த சுயம்புவானது என்று தான் நினைத்திருந்தேன். நுஸ்ரத் ஃபத்தே அலி கானின் கவ்வாலியைக் கேட்கும் வரை.<br /><br />தமிழ் பதிவுலகைப் பொறுத்தவரை இரண்டு வகையான நடைகள் அதிக வரவேற்பைப் பெறுவதாக உணர்கிறேன். ஒன்று கலக நடை. மற்றொன்று அங்கத நடை.<br /><br />கலக நடை மரபுவாதிகளின் முகச்சுழிப்பை தன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்று ஒருக் கருத்து நிலவுகிறது. அந்த வகையில் இடக்கர் அடக்கலுக்கோ, இன்னபிற அடக்கல்களுக்கோ அடங்காமல் எழுதும் வல்லமை கலக நடைக்கு முக்கியம். "மனிதக் கழிவை அகற்றுதல்" என்று ஆசாரம் பேணுவதெல்லாம் கலக நடைக்கு உதவாது. "பீ அள்ளுவது" என்றுச் சாற்றுவதே சாலச் சிறந்தது. அதே போல பொதுமைப்படுத்துதல், ஸ்டீரியோடைப்பிங் போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் வாக்கியம் அமைத்தால் அது வெறும் உரைநடையாக இருக்குமே தவிர உறைக்கும் நடையாக இருக்காது. ஆனால் "டீ.ராஜேந்தர் அடுக்கு மொழியில்தான் **விடுவார் என்று எண்ணுவது போல்" (நன்றி: ரோசாவசந்த்) என்பது போன்ற உவமைகளைப் பயன்படுத்தினால் பசுமரத்தாணியின் மண்டையிலேயே போட்ட மாதிரி இருக்கும். கலக நடையில் அதிகப்பட்சமாக எந்த அளவுக்கு இடக்கர் கலந்து இடக்காக எழுதலாம் என அறிய விரும்புவோர் சிலுக்கு ஸ்மிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "பிரஸ்ஸில் இருக்கிறது" போன்றக் கதைகளைப் படிக்கலாம்.<br /><br />இணையத்தில் உள்ள அங்கத எழுத்தாளர்கள் பொதுவாக ஏதாவது ஒரு சாரியில் இருந்துக்கொண்டு எதிர் சாரியில் இருப்போரை நையாண்டி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என்றுப் பன்மொழிப் புலமை இருப்பது அங்கத எழுத்துக்குப் பலம் சேர்க்கும். இவர்கள் பெரும்பாலும் முகத்திரைக்கு பின்னால் இருந்து தான் எழுதுவார்கள். அங்கதக்காரர்கள் கையில் கிடைத்தால் அவர்களை அங்கம் அங்கமாக பிரித்தெடுக்க ஒருக் கூட்டம் எப்போதும் தயாராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இவர்களது முகத்திரையைக் கிழித்துவிட்டு தான் மறுவேலை என்று சிலர் களம் இறங்குவதும், இவர்கள் "பர்தே மே ரெஹ்னே தோ" என்று ஆஷா போன்ஸ்லேயை மிஞ்சும் விதத்தில் சிணுங்குவதும் எழுத்துக்கு அப்பாற்பட்டக் கூடுதல் நகைச்சுவை.<br /><br />இணையத்தில் அதிகம் காணமுடியாத ஒருவகை நடை இருக்கிறது. அந்த நடையை எதிர்கொள்ளும்போது என் சிறுவயதில் எங்கள் ஊரில் கிழிந்த அழுக்கு உடைகளோடு திரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருவார். ஒருவித சித்த விகாரக் கலக்கத்தில் இருப்பதாக நம்பப்பட்ட அவரது வாய் ஒயாமல் சொல் மாரி பொழிந்துக் கொண்டே இருக்கும். சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று சித்தம் தெளிவாக இருப்பவர்களால் அறவே பொருள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். சில நிமிடங்கள் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டு இருந்தால் probability விதிகளின் படி அவ்வப்போது சில பொருள் உள்ள வாக்கியங்கள் கிடைக்கும். இன்னும் அதிக நேரம் பொறுமையுடன் கேட்பவர்களுக்கு அட என்றுப் புருவம் உயர்த்த வைக்கும் கவித்துவமான வரிகளும் சில நேரங்களில் வாழ்வியல் தத்துவங்களும் கூட கிடைப்பதாக பேசிக்கொண்டார்கள்.<br /><br />ஆமாம், தானியக்க எழுத்தைத் தான் சொல்கிறேன். இந்த வகை எழுத்தைப் படிப்பதில் உள்ள தடைகளைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட நான் எத்தனையோ முறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த நடை அகநானூற்றுத் தோழியைப் போல வாயில் மறுத்துவிடுகிறது. விலக்கப்பட்ட கனி மீது ஏற்படும் தவிர்க்க முடியாத ஈர்ப்பை போல தானியக்க எழுத்தின் மீதான ஆர்வம் தொடர்கிறது.<br /><br />யாராவது நண்பர்களுடன் - குறிப்பாக ஆனந்தவிகடனுக்கு அப்பால் நகராத பெரும்போக்கு நண்பர்களுடன் - நூலகத்துக்குச் செல்ல நேர்ந்தால் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதுண்டு. தமிழ் வரிசையிலிருந்து முற்றிலும் தானியக்க நடையில் எழுதப்பட்ட ஒருப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்து இதைப் படித்திருக்கிறீர்களா என்றுக் கேட்பேன். அவரும் வாங்கி "கோணங்கி... ஆத்தர் பேரு வித்தியாசமா இருக்கே.." என்றவாறு புத்தகத்தைத் தற்போக்காகத் திறந்து ஒரு - ஒரே ஒரு - வாக்கியத்தைப் படிக்க முயல்வார்.<br /><br />"நாமறியாத கிரகத்தில் சுழலும் பாதரஸ ஓநாய்களின் நரம்புகள் மெய்யெழுத்தொலியாய் நீண்டுவர ஒலி அலகுகளில் வளையும் கமகங்கள் கிரக இடை சூன்யத்தில் ஆலாபிக்க வேறு இருகால அடுக்கில் பின் முன்மொழிமாற காலத்துகள் நுண்மையாய் சேரும் பொழுதுகள் புலர்ந்து பச்சிலைகளின் அகர வரிசை பதினாயிரம் இசைக்குறிப்புகளாய் பெருகி உயிர்மெய் சுருள்வில் ரசாயன அகராதியில் அணுக்கவைகள் புரண்டு மனிதப்பேச்சைவிடவும் புலனுக்கு எட்டாத நுண் ஒலிகள் மட்டும் பாதரஸ ஓநாய்கள் தொனிக்க வேதியிலை நரம்புகளின் பரிபாஷை ஓநாய்களின் உரையாடலாய் பச்சை உலகின் அந்தரங்க நுரையீரலில் சரமூச்சு திருகி அதிரும் ஓநாய்களின் மண்ணீரல் சவ்வுகளில் பரவிய துடிப்பறையில் பாலைநில எயினர் விரல் அலகுத்துடி மாற செந்நாய் தோன்றி மைவரைமேல் நின்று ஊளையிட்டது உருவற்று."<br /><br />படித்து முடித்துவிட்டு திகிலும், மருட்சியும், "ஒருவேளை இவனுக்கு இதெல்லாம் புரிகிறதோ" என்றக் கொடிய சந்தேகமுமாய் நிமிரும் நண்பரின் பேயறைந்த முகத்தைப் பார்ப்பது வாழ்க்கையை வாழ லாயக்கானதாக மாற்றும் நானூற்று முப்பத்து ஏழு வகை அற்ப சந்தோஷங்களில் ஒன்று.Unknownnoreply@blogger.com9